Jump to content

அரச பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு- மனோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mano-7-720x450.png

அரச பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு- மனோ

அரச பயங்கரவாதம் தற்போது நாட்டில் தலையெடுத்துள்ளமையால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு ஏற்படலாமென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே, மனோ கணேசன் இதனை கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“நாட்டின் நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தையும் பாதிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற நகர்வுகள் காணப்படுகின்றது.

இவ்வாறு தொடர்ச்சியாக ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகள் இடம்பெறுமானால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கின்ற தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை மேற்கொள்வதற்கு தள்ளப்படுவார்கள்.

இவ்வாறு நாட்டின் அபகீர்த்தியை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரி, நாட்டு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை சிறந்த அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வாரென எண்ணிய அனைத்தும் தலைகீழாக தற்போது காணப்படுகின்றது” என மனோ கணேசன் கவலை வெளியிட்டுள்ளார்.

http://athavannews.com/அரச-பயங்கரவாதத்தால்-தமிழ/

மனோ... நாங்கள், சும்மா... இருக்கின்றோம். ஏனய்யா... இதுக்குள், எங்களை  கோத்து  விடுகின்றீர்கள்.
சிங்களவன்  தமக்குள் அடித்து... சாவதை,  பார்க்க... எமக்கும்,  ஒரு சந்தர்ப்பம் கொடுங்களேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன சொல்ல வருகிறார்?

 

சிங்களவனுக்கு தெரியும் இனி ஒரு போராட்டம் தமிழர்களால் நடாத்துவது முடியாது என்று எனவே அவங்கள் அடிபட்டு கொண்டாடி மகிழ்கிறார்கள் நாளை தங்களுக்குள் கொலை செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள் அதை இந்த மனிசன் கெடுத்து கொண்ட்டாடிகொண்டு இருக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடாத்துவது முடியாது என்று எழுதியவுடன் மகிழ்ச்சி கொள்ளவேண்டாம் காலசக்கரம் நாளை என்ன நினைக்குது என்பதை  சிறியோர்கள் ஆகிய நாங்கள் தீர்மானிக்க முடியாது . விசித்திரமாக பல வரலாறுகள் உலகில் உருவாகிஉள்ளது என்பதும் உண்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அமைச்சர் பதவி வேணுன்னா.. சிங்கள நண்பர்களிடம் கேட்டு வாங்கிக்கிறது.

தனிநாட்டு.. தமிழர்கள் கையில் ஆயுதம் போன்ற பதங்களை பாவித்து தமக்குள் அதிகார வெறி பிடித்து அடித்துக் கொண்டிருக்கும் சிங்களவர்களை இவர் தமிழர்களுக்கு எதிராக மீண்டும் ஒற்றுமைப்படுத்த முனைவது ஏன்..????!

தனிநாட்டை பிரகடனம் செய்தால்.. அயலில் உள்ள ஹிந்தியப் பயங்கரவாதம் தான் ஏற்குமா என்ன.. சீனன் ஏற்பானா..??!

தமிழர்கள் இன்றைய பூகோள அரசியல் பொருண்மிய நிலையில்.. நவீன தொழில்நுட்ப வேவுகள் நிறைந்த உலகப் பந்தில்.. மீண்டும் ஒரு காத்திரமான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்பது தற்கொலைக்குச் சமனானது. ?

Link to comment
Share on other sites

10 minutes ago, nedukkalapoovan said:

தனிநாட்டை பிரகடனம் செய்தால்.. அயலில் உள்ள ஹிந்தியப் பயங்கரவாதம் தான் ஏற்குமா என்ன.. சீனன் ஏற்பானா..??!

தமிழர்கள் இன்றைய பூகோள அரசியல் பொருண்மிய நிலையில்.. நவீன தொழிநுட்ப வேவுகள் நிறைந்த உலகப் பந்தில்.. மீண்டும் ஒரு காத்திரமான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்பது தற்கொலைக்குச் சமனானது. ?

கிந்தியன் ஏற்கமாட்டான்? ஆனால் சீனன் கண்டுகொள்ள மாட்டான் என்றும் நம்பிக்கை கொள்ளலாம்.☺️

 

32 minutes ago, பெருமாள் said:

இங்கு நடாத்துவது முடியாது என்று எழுதியவுடன் மகிழ்ச்சி கொள்ளவேண்டாம் காலசக்கரம் நாளை என்ன நினைக்குது என்பதை  சிறியோர்கள் ஆகிய நாங்கள் தீர்மானிக்க முடியாது . விசித்திரமாக பல வரலாறுகள் உலகில் உருவாகிஉள்ளது என்பதும் உண்மை .

இது நெடுக்காலைபோவன் அவர்களுக்கும் சமர்ப்பணமாகட்டும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்மானத்தையும் உரிமையையும் வெல்ல இன்று ஈழத்தமிழனுக்கு தேவை போர் வீரர்களல்ல கர்ம வீரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

இவர் என்ன சொல்ல வருகிறார்?

 

சிங்களவனுக்கு தெரியும் இனி ஒரு போராட்டம் தமிழர்களால் நடாத்துவது முடியாது என்று எனவே அவங்கள் அடிபட்டு கொண்டாடி மகிழ்கிறார்கள் நாளை தங்களுக்குள் கொலை செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள் அதை இந்த மனிசன் கெடுத்து கொண்ட்டாடிகொண்டு இருக்குது. 

முடிந்தால் ஊதிப்பெருப்பிக்கிறது.

Link to comment
Share on other sites

On 11/17/2018 at 11:00 AM, தமிழ் சிறி said:

அரச பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு- மனோ

அதே அரச பயங்கரவாதிகளுடன் கூடிக்குலவி கூத்தாடிய மனோ கணேசன் அமைச்சு சொகுசு நாற்காலி பறிபோன கவலையில் உளறுகிறார்.

போராடும் தகுதியுடைய தமிழ் மக்கள் சார்பில் கதைக்க இவருக்கு எந்த அருகதையும் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.