Jump to content

'ஜனாதிபதி சிறிசேன மீதான சர்வதேச நெருக்குதல் தொடரவேண்டும்' - லண்டன் கார்டியன் வலியுறுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'ஜனாதிபதி சிறிசேன மீதான சர்வதேச நெருக்குதல் தொடரவேண்டும்' -  லண்டன் கார்டியன் வலியுறுத்தல்

 இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் ஜனநாயக விழுமியங்களின் வழியிலும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சர்வதேச சமூகம் பிரயோகித்துவருகின்ற நெருக்குதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தடுமாறவைத்திருக்கிறது.அந்த நெருக்குதல் தொடரவேண்டும் என்று லண்டன் கார்டியன் பத்திரிகை வலியுறுத்தியிருக்கிறது.

 'ஜனாதிபதி எதிர் பிரதமர் ' என்ற தலைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கார்டியன் தீட்டியிருக்கும்  ஆசிரிய தலையங்கத்தில் 'இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் இடம்பெறுகின்ற மோதல்கள் வீதிகளுக்கும் பரவக்கூடும் அல்லது நெருக்கடியில் தலையீடுசெய்யுமாறு பாதுகாப்புப் படைகள் தூண்டப்படக்கூடும் என்ற அச்சத்தையும் சிலர் வெளியிட்டிருக்கிறார்கள்.

mahithiri.jpg

இலங்கை இராணுவத்துக்கும் பொலிஸுக்கும் பயிற்சிகளை அளித்ததுவரும் அமெரிக்காவும்  மற்றும் பிரிட்டனும் அரசியலமைப்பு நெருக்கடி அரசியலமைப்பு வழிவகைகளின் மூலமாகவே தீர்க்கப்படவேண்டும் என்பதை பாதுகாப்புப் படைகளுக்கு வலியுறுத்தித் தெரிவிப்பது பிரயோசனமானதாக இருக்கும் ' என்று குறிப்பிட்டிருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களும் உச்சநீதிமன்றமும் எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு வரவேற்கப்படவேண்டியதே. அவர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது என்று கூறியிருக்கும் கார்டியன் மேலும் கூறியிருப்பதாவது ;

எம்மில் பெரும்பாலானவர்கள் தவறுகளுக்காகவே வருந்தியிருக்கின்றோம். ஆனால், இலங்கை ஜனாதிபதி சிறிசேன வழமைக்கு மாறாக தனக்கு கிடைத்தவற்றுக்காக வருந்துகின்றார்.ஒரு பதவிக்காலத்துக்கே ஜனாதிபதியாக இருக்கப்போவதாக சூளுரைத்த சிறிசேன தனது மனதை மாற்றிக்கொண்டுவிட்டார் போலத்தெரிகிறது.

ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் கூட்டுச்சேருவதே உகந்தது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.தனது முன்னாள் எதிரிமீது அவர் இப்போது விசுவாசம் கொண்டிருப்பதை இது காட்டுகிறது.

 ராஜபக்ஷவைப் பொறுத்தவரை தனது சகோதரர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது குறித்தே கவலை கொண்டிருக்கிறார் என்று சிறிசேன நம்பக்கூடும்.

தனது பிரதமர் பதவியைப் பயன்படுத்தி ராஜபக்ஷ நாளடைவில் அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்து மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சிக்கக்கூடும் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். பெரிதும் அஞ்சப்படுகின்றவரான கோதாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வழிசெய்யப்படக்கூடும் என்றும் பலர் நினைக்கிறார்கள்.

ஜனாதிபதியும் அவரால் நியமிக்கப்பட்ட பிரதமரும் நாடு ஆளப்படமுடியாததாக மாறிவிட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி புதிய பொதுத்தேர்தல் ஒன்றே நெருக்கடிக்கு தீர்வைத்தரும் என்று காட்டுவதற்கு முயற்சிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

எரிபொருள் விலைக்குறைப்பு போன்ற நிவாரணங்களை மக்களுக்கு வழங்க  ராஜபக்ஷ ஆரம்பித்திருக்கிறார்.அவர் மக்கள் மத்தியில் செல்வாக்குடையவராக இருக்கிறார் என்றாலும் அவரது அரசியல் சமூகங்களுக்கிடையே பேதங்களை வளர்க்கக்கூடியதாக அமைந்திருக்கிறது. தமிழ்த் தீவிரவாதிகளுக்கு எதிரான கொடூரமான  போரில் பாரதூரமான மனித உரிமை மீறல்களைச் செய்ததாகவும் ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

தற்போதைய அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண்பது சாத்தியமே. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இருவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள ஏற்கெனவே மறுத்துவிட்டனர்.

அதனால் ஜனாதிபதியின் தந்திரோபாயம் பிசகிப்போய்விட்டது.ராஜபக்ஷவை சீன் வாழ்த்தியிருந்தாலும் கூட சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்கள் சிறிசேனவைத் தடுமாற வைத்திருக்கின்றன.அந்த நெருக்குதல்கள் தொடரவேண்டும்.

http://www.virakesari.lk/article/44615

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.