Jump to content

இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு?

பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் இன்றைய நம்பிக்கையில்லாத தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன  தெரிவித்துள்ளார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.

srisena5.jpg

எங்களை அடுத்த இரண்டுமூன்று நாட்களில் பெரும்பான்மையை நிருபிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சபாநாயகர் கருஜெயசூரிய எழுதிய கடிதத்தினை நிராகரித்து ஜனாதிபதி பதில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

மேலும் சிறிசேனஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுடனான சந்திப்பையும் இறுதி நேரத்தில் இரத்து செய்துள்ளார்.

இதேவேளைரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.. இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தினையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.. நேற்று எனக்கு சொன்ன எதனையும் ஐ தே  க இன்று பாராளுமன்றத்தில் செய்யவில்லை. அவர்கள் சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று..அதனால் நான் இன்றைய தீர்மானத்தினை நிராகரிக்கிறேன்.”

இவ்வாறு தற்போது நடந்த ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரி

 

http://www.virakesari.lk/article/44633

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை அழிப்பதிலும் அவ்களின் உரிமையைப் பறிப்பதிலும் ஒன்று சேர்ந்து நின்றீர்கள். இப்பாே ஒருவர் மற்றவரின் சிண்டைப் பிடிச்சுக்காெண்டு நியாயம் கேட்டுப் பாேராடுகிறிர்கள். எங்களுக்கு தராத, தர மறுக்கும், நியாயம் உங்களுக்கு கிடைக்க வேணுமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்? உங்கள் இருவரில் ஒருவர் நம்மைப்பாேல் அழியுங்கள், அல்லது இருவருமே அழிந்து பாேங்கள். நாட்டுக்கு ஒன்றும் நஷ்ரமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு?

அப்படிச்  சொன்னால்.... இந்தியாவுக்கு... கோவம்  வந்து விடும்.  கவனமப்பு.
நடந்தது... நடந்து விட்டது. இனி... சூதனமாக நடக்கப் பாருங்கள்.

சரவணபவன் வீட்டுக்கு போய்...  "கேக்"  வெட்டுற மாதிரியான செயலை செய்வது தான்.... 
ஒரு நாட்டின், ஜனாதிபதிக்கு அழகு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பழுவூர் கிழான் said:

அப்பன்ட (விஜயன்) புத்தி இன்னமும் அப்படியே இருக்கு...

மா.... புளிக்கிறது, அப்பத்துக்கு... நல்லது,  
என்ற படியால்... மைத்திரியின்  கருத்தை வரவேற்போம். regular.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tortoise4.jpg

இப்போ  வெளியார் யாரவது புத்தி சொன்னால் இலங்கை இறை "ஆமை"  உள்ள நாடு . யாரும் புத்தி சொல்லபடாது என்பினம் பாருங்கவேன் ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

tortoise4.jpg

இப்போ  வெளியார் யாரவது புத்தி சொன்னால் இலங்கை இறை "ஆமை"  உள்ள நாடு . யாரும் புத்தி சொல்லபடாது என்பினம் பாருங்கவேன் ..?

இப்ப,  நோ.... புத்திமதி.  வீ   ஒன்லி,   உன்னிப்பாக..  லுக்கிங்  சார். :grin:  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாள் தந்தையோடு கோவிச்சுக் கொண்டு வயலைக் கொழுத்தின கணக்கா.. இப்ப நாட்டைக் கொழுத்தாமல் போகாது போலக் கிடக்கு.

சொறீலங்காவின் சர்வாதிகார சனாதிபதி முறை என்பது அங்கொடை கேசுகளின் கைக்குப் போனால்.. இது தான் நிகழும்.

அதற்கு மகிந்த.. மைத்திரி.. சந்திரிக்கா..  நல்ல உதாரணம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கோழிக்கறி சமைக்கச் சொன்ன மைத்திரி, கருவாடுதான் கிடைத்ததால் 7 கோழிகளை அறுத்து வீசினார்

 

8 மணிக்கு வேலைக்கு செல்வதற்கு அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். தாயும் கூடவே எழுந்து இன்று என்ன கறி சமைக்கவேண்டும் என்று அப்பாவிடம் கேட்டுவிட்டு   சமையல்கட்டுக்கு சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே அம்மா அப்பாவிடம் கேட்கவும் அப்பா கோழிக்கறி சமைக்கச் சொன்னார். அம்மாவும் சரியென சொல்லிவிட்டு சமைக்கச்  சென்றார். அம்மாவும் வீட்டில் கோழி இல்லாத காரணத்தால் கருவாட்டுக்கறியை சமைத்து பொதிகட்டி அப்பாவுக்கு கொடுத்து அன்பாக வேலைக்கு அனுப்பி வைத்தார்..
 
மதியநேரம் வந்ததும் தான் பிரச்சினை ஆரம்பமானது. அப்பா மதிய உணவை உண்பதற்காக சாப்பாட்டு பொதியை திறந்ததும்தான் அவருக்கு தெரிந்தது கோழிக்குப் பதிலாக கருவாடு சமைக்கப்பட்டிருப்பது. அப்பா சாப்பிடவில்லை, #உடனேகிராமசேவகர் #அலுவலகத்தைமூடிவிட்டு வீட்டுக்கு வந்தார்...
 
ஏன் இன்று கோழிக்கறி சமைக்கவில்லை என்று கத்திக்கொண்டே அம்மாவைத் தேடினார். அம்மா பயத்தால் அலுமாரிக்குப் பின்னால் ஒளித்துக்கொண்டார். அப்பாவால் அம்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு கோபம் இன்னும் அதிகமானது அவ்வளவுதான்...
 
சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து நன்றாக தீட்டிக்கொண்டு வீட்டுக்கு வெளியே போனார். எங்கள் வீட்டில் கோழி இல்லாததால் எமது வீட்டு முற்றத்திலும் பக்கத்துவீட்டு தோட்டத்திலும் சுற்றிக்கொண்டிருந்த ஏழு எட்டு #கோழிகளைதாறுமாறாக அறுத்து_வீசினார்...
 
ஊரே கூடி அப்பாவின் கூத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். அவரைப்பற்றி ஏற்கனவே எல்லோரும் அறிந்துவைத்திருந்ததால் அவரை எல்லோரும் அவர்பாட்டில் விட்டுவிட்டு கடந்து சென்றனர்...
 
எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சிரித்தார் ஒரு சிரிப்பு அதை இன்றும் மறக்கமுடியாது. அப்பாவின் குறும்புகளை நினைத்தால் எமக்கு இன்றும் சிரிப்பு தான்.
 
- சதுரிகா சிரிசேன எழுதிய "ஜனாதிபதி தாத்தா" புத்தகத்திலிருந்து (பக்கம் 501,502)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட டுபுக்கு பய பெத்த தேஞ்ச வெளக்குமாரே, 
ஊரான் வீட்டு ஏழு எட்டு கோழியை அறுத்து எரிஞ்சது ஒன்னும் உன்கோப்பனோட குறும்புத்தனமில்லடி ...அதுக்கு பேரு சுத்த அயோக்கியத்தனம், காட கடப்புளி செய்யிற வேலை அது!!! 
இதெல்லாம் ஒரு ஜனாதிபதி ... அதுக்கு ஒரு புஸ்தகம் .. த்தூ...தூ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.