Jump to content

கலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை!

Wildfires-California-9.jpg

அமெரிக்காவின், கலிஃபோர்னியாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கி 63 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உடல்களை அடையாளம் காண உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரி வாங்கப்பட்டுள்ளதாக, கலிஃபோர்னியா மாகாண அரசு கூறியுள்ளது. காட்டுத் தீயில் மாயமானவர்களின் எண்ணிக்கை 300 இல் இலிருந்து 631 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து அவர்களை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 12 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் காட்டுத்தீயில் சிக்கி நாசமாகி உள்ளதாகவும், கலிஃபோர்னியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

 

http://athavannews.com/கலிஃபோர்னியா-காட்டுத்-த-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
CNN) — The list of people who are unaccounted for after the Camp Fire in Northern California has 1,011 entries, Butte County Sheriff and Coroner Kory Honea said Friday evening.
The sheriff said the list is imperfect and will fluctuate in number because it is raw data that needs to be refined. 
The death toll from the fire is now 71 after eight sets of remains were found Friday, Honea said. Three other deaths occurred in the Woolsey Fire in Southern California, making the statewide death toll from wildfires 74.
With more personnel able to take reports from phone calls and emails and add names from 911 calls on the day the fire broke out, the number of names on the missing list swelled for the second consecutive day.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für trump balloon

கலிஃபோர்னியா... காட்டுத் தீ.... என்பது, ஒவ்வொரு வருடமும்... நடக்கும்,  பெரிய அனர்த்தம்.  
இதனை...  முன் எச்சரிக்கையாக, அமெரிக்காவால்... ஏன்  கட்டுப் படுத்த முடியவில்லை ?

அடுத்த வருடமும்... கலிஃபோர்னியா மாகாணத்தில்,   "காட்டுத் தீ..." என்று  செய்தி வராமல், 
பார்த்துக் கொள்ள வேண்டியது... அமெரிக்காவின் கைகளில்.... தான் உள்ளது.

உலகத்துக்கு... வகுப்பு,  எடுக்கும்  அமெரிக்கா... உள்ளுரையும்  கவனிப்பது, நல்லது. regular.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8-EF18926-8219-4-D6-F-B86-C-BFBAF4-A0171

E40931-E8-81-B1-4823-ACB5-F2278-F42965-B

நான் இப்போது இருக்கும் இடத்தில் உள்ள காற்று படலம்.

உலகிலேயே மோசமான காற்றுப்படலமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

8-EF18926-8219-4-D6-F-B86-C-BFBAF4-A0171

E40931-E8-81-B1-4823-ACB5-F2278-F42965-B

நான் இப்போது இருக்கும் இடத்தில் உள்ள காற்று படலம்.

உலகிலேயே மோசமான காற்றுப்படலமாக உள்ளது.

சீனாவை விட, அமேரிக்காவின், காற்றுப் படலம் தரம் தாழ்ந்து விட்டதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சீனாவை விட, அமேரிக்காவின், காற்றுப் படலம் தரம் தாழ்ந்து விட்டதா? 

New Dehli has some of the worst air in the world, today their number is 237. That's classified as very unhealthy.

 

Beijing China 137

 

 

சீனாவை விட இந்தியா டெல்லி தான் மோசமாக உள்ளது.

இங்கு இந்தக் காட்டுத் தீ இல்லாவிட்டால் 50 க்கு உள்ளேயே இருக்கும்.
இந்தத் தீயாலேயே நிறைய பேருக்கு கான்சர் வர போகுது என்று வேறு கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

8-EF18926-8219-4-D6-F-B86-C-BFBAF4-A0171

E40931-E8-81-B1-4823-ACB5-F2278-F42965-B

நான் இப்போது இருக்கும் இடத்தில் உள்ள காற்று படலம்.

உலகிலேயே மோசமான காற்றுப்படலமாக உள்ளது.

பாரீஸ் ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த டொனால்ட் ரம்பை தூக்கியெறியுங்கள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட இடங்களை ஜனாதிபதி ட்ரம்ப் பார்வையிட்டார்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரவியுள்ள மிக மோசமான காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கலிபோர்னியாவின் தெற்கு பகுதிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்ற ஜனாதிபதி ட்ரம்ப், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக சான் பிரான்ஸிஸ்கோவிற்கு வடக்கே அமைந்துள்ள சியெர்ரா மலைப்பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி ட்ரம்ப் அங்கு நிலைமைகளை பார்வையிட்டதோடு, அதிகாரிகளை சந்தித்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

அத்தோடு, கலிபோர்னியா ஆளுநர் ஜெர்ரி பிரவுனையும் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தார்.

கடந்த 8ஆம் திகதி பரவத்தொடங்கிய குறித்த காட்டுத்தீயில் இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, சுமார் 10,000 வீடுகளும் சுமார் 2,500 கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. அத்தோடு, சுமார் 1000 பேரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

காடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறையற்ற நிர்வாக கட்டமைப்பே காட்டுத்தீ பரவ காரணம் என ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதேவேளை, காலநிலை மாற்றத்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் வெப்பம் அதிகரித்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இதுவே காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவுவதற்கு காரணமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

california-wild-fire.jpg

 

 

http://athavannews.com/காட்டுத்தீயால்-பாதிக்க-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

கலிஃபோர்னியா காட்டுத் தீ பேரழிவு : 76 பேர் உயிரிழப்பு- 1,276 பேரை காணவில்லை!

கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீயின் கோர தாண்டவத்தால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு கருகி நாசமாகியுள்ளது.

இந்தநிலையில் காட்டுத்தீயினால் தங்களின் இருப்பிடங்களை விட்டு வௌியேறிச் சென்று மீண்டும் திரும்பாத பலரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இதன்படி, நேற்று (சனிக்கிழமை) வரை 1276 பேரை காணவில்லை என முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தடயவியல் மீட்பு குழுவினர் புதையுண்ட நிலையில் இருந்த ஐந்து பேரின் சடலங்களை நேற்று மீட்டுள்ளனர். அதன்படி காட்டுத்தீ அனர்த்தத்தில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காட்டுத் தீயினால் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக சிதறியோடிய நூற்றுக்கணக்கான மக்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 63 பேர் மாத்திரம் தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மரபணு பரிசோதனைகளுக்காக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனையவர்களை அடையாளம் காண்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

http://athavannews.com/கலிஃபோர்னியா-காட்டுத்-த-3/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.