Jump to content

தமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா?

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 
சர்க்காரை சவாலில் வென்ற தமிழ் ராக்கர்ஸை தடைசெய்ய முடியுமா?Getty Images

சர்கார் திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்துக்காட்டியுள்ளது. சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் கடந்த நவம்பர் 6ஆம் தேதி, தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியானது.

முன்னதாக, சர்கார் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் வெளியிடக்கூடாது என்று கூறி அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சர்கார் திரைப்படத்தை திரையரங்கம் தவிர்த்து சட்டவிரோதமாக இணையதளங்கள், கேபிள் டிவிக்கள், சிடி-டிவிடிக்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியிடுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்ததது.

தமிழ் ராக்கர்ஸின் சவாலும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பதிலடியும் 

கடந்த 4ஆம் தேதியன்று தமிழ் ராக்கர்ஸ் பெயரிலுள்ள ஒரு ட்விட்டர் பக்கத்தில், சர்கார் திரைப்படம் வெளியாகும் நாளன்றே அதன் எச்.டி பதிப்பை தங்களது இணையதளத்தில் வெளியிடுவோமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதையடுத்து, தமிழ் ராக்கர்ஸ் விடுத்துள்ள சவாலை முறியடிப்போம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பில் கூறப்பட்டது.

சர்க்காரை சவாலில் வென்ற தமிழ் ராக்கர்ஸை தடைசெய்ய முடியுமா?SUN PICTURES

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், "சமூக வலைதளங்களில் நம் உழைப்பைச் சுரண்டும் திருடன் தமிழ் ராக்கர்ஸ் சர்கார் படம் வெளியான மாலையே ஹெச்டி பிரிண்டில் வெளியிடுவதாக சவால் விடுத்துள்ளார்கள். இதற்கு நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்பட்டு தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனை வெல்ல விடாமல் கண்காணிப்பு ஆட்களை நியமித்து, படம்பிடிப்பவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்திருந்தது.

அதுமட்டுமின்றி, அனைத்து திரையரங்கிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டுமென்றும் திரையரங்கங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

தமிழ் ராக்கர்ஸில் வெளியான சர்கார் 

திட்டமிட்டபடி நவம்பர் 6ஆம் தேதியன்று காலை தமிழ்நாடு மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சர்கார் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அத்திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புக்கள் தரவாரியாக தனித்தனியே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

சட்டரீதியான நடவடிக்கை மற்றும் திரையரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மீறி சர்கார் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நவீன சவால் 

கோடிக்கணக்கான பணம், பல மாத உழைப்பில் உருவாகும் கிட்டத்தட்ட அனைத்து திரைப்படங்களும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரஸி அல்லது சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியாவது தொடர்கதையாகி வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை சிடி-டிவிடிக்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவது பெரிய பிரச்சனையாக இருந்தது. அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்ததோ, இல்லையோ மலிவான விலையில் வேகமான இணையதள சேவைகள் கிடைக்க தொடங்கிய பிறகு இணையதளங்களில் சட்டவிரோதமாக திரைப்படங்கள் வெளியாக தொடங்கியது. அந்த விவகாரம் தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

 

திருட்டு சிடிக்களை ஒழிப்பதற்கு காவல்துறையினர் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைளை போன்று, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடைசெய்வதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதாவது, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முதன் முதலாக தொடங்கப்பட்டதாக அறியப்படும் tamilrockers.com என்ற இணையதளத்துக்கு சென்று பார்த்தீர்களானால் "நீங்கள் பதிவிட்ட இணையதள முகவரி இந்திய தொலைத்தொடர்புத்துறையின் வழிகாட்டுதலின்படி தடைசெய்யப்பட்டுள்ளது" என்று வரும். அதைத்தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளமானது .cc, .to, .be, .pm, .ac, .la, .ws போன்ற பல்வேறு டொமைன்களில் தொடங்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டன.

சர்க்காரை சவாலில் வென்ற தமிழ் ராக்கர்ஸை தடைசெய்ய முடியுமா?Getty Images

மேற்குறிப்பிட்ட தமிழ் ராக்கர்ஸின் அனைத்து இணையதள முகவரிகளும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு பெயரில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு சர்கார் உள்ளிட்ட புதிய படங்கள் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழ் ராக்கர்ஸை முற்றிலும் தடைசெய்ய முடியுமா?

புதுப்புது பெயரில் முளைத்து திரைப்படத்துறை, தொலைத்தொடர்பு துறை, சைபர் கிரைம் பிரிவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் தமிழ் ராக்கர்ஸை முற்றிலும் தடைசெய்வது சாத்தியமா என்று தொழில்நுட்பவியலாளர் செல்வ முரளியிடம் கேள்வியெழுப்பியபோது, "நாம் நினைத்ததைவிட மிகவும் சாதுர்யமாக தமிழ் ராக்கர்ஸ் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இதை நடத்துபவர்கள் தொழில்நுட்பத்தில் உள்ள ஓட்டையை நன்கறிந்தவர்களாகதான் இருக்க வேண்டும். ஏனெனில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலிருந்து ஒரு படத்தை பதிவிறக்கம் செய்பவரே, அதே படத்தை பதிவிறக்கம் செய்யும் மற்றொருவருக்கு தான் பதிவிறக்கம் செய்த தரவுகளை கொடுத்து உதவுவது போன்ற Peer to Peer என்ற முறை பயன்படுத்தப்படுவதால், முதலில் யார் பதிவேற்றியது என்பதை கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம்" என்று கூறுகிறார். 

செல்வ முரளிFacebook செல்வ முரளி

"தற்போதுள்ள செயல்முறையின்படி, ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை தடைசெய்வதற்கு நீண்டகாலம் ஆகிறது. எனவே, இதுபோன்ற பைரஸி இணையதளங்கள் புதுப்புது டொமைன்களில் தொடங்கியவுடன் உடனடியாக தடைசெய்வதற்கு சிறப்பு குழுக்களை அமைப்பது தற்காலிக தீர்வாக அமையலாம்." 

Tamilrockers என்ற வார்த்தையை கொண்டு மீண்டும் ஒரு புதிய இணையதளம் பதிவுசெய்யப்படுவதையே முற்றியும் தடைசெய்ய முடியுமா என்று கேட்டபோது, "உலகம் முழுவதும் புதிய இணையதள முகவரிகள் பதிவுசெய்வதை கண்காணிக்கும், ஒழுங்குபடுத்தும் பணியை அமெரிக்காவை சேர்ந்த ஐகான் (The Internet Corporation for Assigned Names and Numbers) என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. Tamilrockers என்ற வார்த்தையை முற்றிலும் தடைசெய்யக்கோரி இந்திய தொலைத்தொடர்புத்துறை ஐகானுக்கு கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் இது சாத்தியமாகலாம்" என்று அவர் மேலும் கூறினார்.

"தமிழ் ராக்கர்ஸை அசைக்க முடியாது - மாற்றுவழியே தீர்வு"

ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வாங்கி பதிவு செய்யும்போது தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இணையதள சேவை வழங்கும் நிறுவனத்திடம் வழங்க வேண்டும்.

இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்தி வருபவர்கள் குறித்த தகவலை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்து மென்பொறியாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, "ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை ஆரம்பித்தவர்கள் குறித்த அடிப்படை தகவல்களை யார் வேண்டுமானாலும் இணையத்தில் தேடி (who's data என்றழைக்கப்படுகிறது) தெரிந்துகொள்ளலாம். ஆனால், ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து ஒரு இணையதளத்தை பதிவு செய்பவர் நினைத்தால் கூடுதலாக சிலநூறு ரூபாய் கொடுத்து அவர்களது who's தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ளும் வசதியை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்கள் குறித்த விவரங்களை பெறுவது இயலாத காரியம்" என்று அவர் கூறுகிறார்.

சீனிவாசன்Shrinivasan சீனிவாசன்

"தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளத்தை நடத்துபவர்கள் தங்களது டொமைன் ஒவ்வொரு முறை முடக்கப்படும்போதும் சாதாரணமான முறையில் புதிய டொமைனை பதிவுசெய்வதில்லை என்றே கருதுகிறேன். மாறாக, தனிப்பட்ட சர்வரை வாங்கிவிட்டு ஸ்டாட்டிக் ஐபி முகவரியை வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் எண்ணற்ற இணையதளங்களை உருவாக்கும் முறையை கடைபிடிக்கிறார்கள் என்றே கருதுகிறேன். அதுமட்டுமின்றி, இணையதளங்களை முறைப்படுத்துவதற்கென சர்வதேச சட்டங்கள் ஏதுமில்லாத காரணத்தால் குறிப்பிட்ட நாட்டின் அரசாங்கத்திடமோ, அமைப்பிடமோ இதுதொடர்பாக எவ்வித கோரிக்கை வைப்பதிலும் பயனில்லை. உதாரணமாக, தமிழ் ராக்கர்ஸ் ரஷ்யாவை மையமாகக்கொண்டு செயல்படுகிறது என்று வைத்துக்கொண்டால், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஐகான் போன்ற அமைப்புகள் விடுக்கும் கோரிக்கையை ரஷ்யா மறுப்பதற்கு வாய்ப்புள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியாது, புதிய டொமைன்கள் உருவாக்குவதை நிரந்தரமாக முடக்க முடியாது, சர்வதேச சட்டங்களை பயன்படுத்தியும் எதுவும் செய்யமுடியாது என்றால் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று கேள்வியெழுப்பியபோது, "இணையம் உருவான காலத்திலிருந்து ஹாலிவுட் திரைப்படங்கள் இதுபோன்ற பைரஸி தளங்களின் காரணமாக கடும் சவாலை சந்தித்து வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித முன்னேற்றத்தையும் ஹாலிவுட்டால் எட்டமுடியவில்லை. அதுமட்டுமின்றி, பைரஸி இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்யப்படும் மென்பொருள்களினால் ஒவ்வொரு ஆண்டும் மைக்ரோசாஃப்ட், அடோப் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழந்து வருகிறது. அதுவும் இதுவரை முற்றிலும் தடுக்கப்பட முடியாததாகவே உள்ளது. எனவே, மக்கள் இதுபோன்ற தளங்களை நாடுவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான முயற்சியில் திரையுலகம் ஈடுபட வேண்டும்" என்று சீனிவாசன் கூறுகிறார்.

 

 

https://www.bbc.com/tamil/arts-and-culture-46120322

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான கள்வர்களை விட்டு இணையத்தில் சாதாரண அப்லோடு பண்றவனை பெரிய பூதமாய் காட்டுவதில் என்ன லாபம் வெளிநாட்டு உரிமை இல்லாத படங்களும் ரிலிஸ் ஆனா முதல்நாளே hd தரத்தில் அப்லோட் பண்ணுகிறார்கள் என்றால் ஓட்டை தமிழ் நாட்டுக்குள்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

PVR-Grand-Mall-Vellachery-Chennai-925860

படக்கட்டணம் , பார்க்கிங் கட்டணம் , குளிர்பானம் போக இடைவேளையில் பொப்கார்ன், சமோசா, பப்சு எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் தியேட்டர் பக்கம் எவன் வருவான் என் சிப்சு ..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.