Jump to content

அரச தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தினை கைப்பற்றியதால் பதற்றம். நேரடி ஒளி பரப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DsHAetSXgAc9zor-720x450.jpg

அரச தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தினை கைப்பற்றியதால் பதற்றம்!

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அரச தரப்பினர் அமர்ந்துள்ளதாகவும், இதன்காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் வருகை தந்ததாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கைது செய்யுமாறு கோரி அரச தரப்பினர் நாடாளுமன்றத்தில் கோசமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இதுதொடர்பிலான புகைப்படம் ஒன்றினை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

police-720x450.png

நாடாளுமன்ற வளாகத்தில் பொலிஸார் குவிப்பு.

அரசியல் சர்சைகள் மேலும் அதிகரித்துள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் என்றுமில்லாதளவு பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு பணிக்களுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைக்கு தீர்வை முன்வைப்பதற்கு நேற்று நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது, உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் மோதல் உருவாகியது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை இன்று மீண்டும் கூட்டுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரச்சினைகள் இன்றும் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளமையால் நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடாளுமன்ற-வளாகத்தில்-பொ/

தற்போது... பாராளுமன்றில் நடந்து கொண்டிருக்கும் காட்சிகளின்  நேரடி  காணொளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரடி ஒளிபரப்பு:   நேற்றை விட... இன்று, அதிக அமளி பாராளுமனறத்தில்  ஏற்பட்டுக்  கொண்டு இருக்கின்றது.

sri-lanka-parliament-3-720x450.jpg

நாடாளுமன்றத்தில் பதற்றம் – நாடாளுமன்ற வளாகத்தில் விசேட உலங்கு வானூர்தி!

நாடாளுமன்றம் அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் வருகை தந்ததாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கைது செய்யுமாறு கோரியே அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், ஐக்கிய தேசிய கட்சியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் மிகவும் அமைதியான முறையில் தங்களது ஆசனங்களில் அமர்ந்துள்ளதாகவும் எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற வளாகத்திற்கு சற்றுமுனனர் உலங்கு வானூர்தி ஒன்று தரையிரங்கியுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும் குறித்த உலங்கு வானூர்தியில் வருகை தந்தவர்கள் தொடர்பிலான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

http://athavannews.com/நாடாளுமன்றத்தில்-பதற்றம/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sri-lanka-parliament-1-720x450.jpg

நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற அமர்வுகள் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/நாடாளுமன்றம்-டிசம்பர்-மா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Maithiri-2-720x450.png

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து ஜனாதிபதி எச்சரிக்கை!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அரச தரப்பினர் அமர்ந்துள்ளதன் காரணமாக அங்கு பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் “அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற மரபுகள் அனைத்தையும் எப்போதும் நிலை நிறுத்துமாறு நான் வலியுறுத்துகிறேன்.

அத்துடன் எந்தவொரு சூழ்நிலையிலும் நான் நாடாளுமன்ற அமர்வினை தள்ளிபோடமாட்டேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/நாடாளுமன்றத்தில்-ஏற்பட்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமனறத்தில் இருந்து.. நேரடி ஒளி பரப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people sitting

 

Image may contain: 2 people, people sitting

ஐ. தே. க. உறுப்பினர் காட்டும்  நடு விரல். 

Image may contain: one or more people, people sitting, crowd and text

காவல் துறையினரின் பாதுகாப்புடன் சபாநாயகர் மன்றுக்கு வருகை தந்த போது.... 
மகிந்த அணி அவர் மீது... கதிரைகளையும், கோப்புக்களையும்  எறிந்தார்கள்.
சபாநாயகர் ஆசனத்தினை... மகிந்த அணி சூழ்ந்து கொண்டிருந்து கலகம் செய்ததால்... சபாநாயகர் திரும்பிச்சென்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DsHVh-RU0AE4K9O-720x450.jpg

நாடாளுமன்றத்தில் மோதல் – விஜித ஹேரத் உள்ளிட்ட நால்வர் காயம்!

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மோதலில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் காயமடைந்துள்ளார்.

இன்று நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்ததுடன், அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டு குழப்பம் ஏற்படுத்தினர்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் சபைக்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கைது செய்யுமாறு வலியுறுத்தி அரச தரப்பினர் இவ்வாறு நாடாளுமன்றத்தில் குழப்பத்தினை ஏற்படுத்தினர்.

இதன்போதே விஜித ஹேரத் காயமடைந்துள்ளார். அத்துடன், சபாநாயகர் மற்றும் செங்கோலின் பாதுகாப்புக்காக, சபைக்குள் பிரவேசித்த பொலிஸார் மீது மகிந்த ராஜபக்ச தரப்பினர் நடத்திய தாக்குதலில் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழப்ப நிலையினைத்தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

DsHVh9lV4AAHNrH.jpg

DsHVh-MVAAAkahA.jpg

46452306_351791998909667_4468475316104331264_o.jpg

http://athavannews.com/நாடாளுமன்றத்தில்-மோதல்-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Quellbild anzeigen

இந்த அரசியல் வாதிகள் எல்லாம் இறந்திட்டா, ஏன் வானத்தைப் பார்த்து சுடறாங்க... ஏன் என்றால் அவங்க ஆவியாகக்கூட உயிரோட சுத்தக்கூடாது என்றுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்ற இன்றைய நிகழ்வுகள் , ஆவுஸ்திரேலியர் வர்ணனையில்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.... கோவணத்தையும், உருவி விட்டார்களா? ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.