Jump to content

நாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை!

3cbd0975-c48e-421b-b435-7e33214a98bc.jpg

இலங்கையில் தற்போது இருக்கும் அரசியல் நெருக்கடி நிலையை தீர்த்து ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த நாட்களாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமை தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சூனியிங் இன்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “இலங்கையின் பாரம்பரிய அயல் நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் நிகழும் விடயங்களை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

நாங்கள் இலங்கையால் ஸ்திரத்தன்மையை நிலை நாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://athavannews.com/நாட்டில்-ஸ்திரமான-நிலையை/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

“இலங்கையின் பாரம்பரிய அயல் நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் நிகழும் விடயங்களை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

அட இந்தியாவை விட உவையள் அயலவராம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

அட இந்தியாவை விட உவையள் அயலவராம்....

யாழிலேயே 1000 ஆண்டு கால சீன புராதனங்களை எல்லாம் தோண்டி எடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

அட இந்தியாவை விட உவையள் அயலவராம்....

அட ஈழத்தை விட உவையள் அயலவராம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

யாழிலேயே 1000 ஆண்டு கால சீன புராதனங்களை எல்லாம் தோண்டி எடுக்கிறார்கள்.

சீனாவிலிருந்து தமிழ் வந்தது என்று சொன்னாலும் நம்பத்தான் வேணும்....சுன் சாங் மாங்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

சீனாவிலிருந்து தமிழ் வந்தது என்று சொன்னாலும் நம்பத்தான் வேணும்....சுன் சாங் மாங்

உங்களுக்கு கிந்தி கதைக்க விருப்பமா?சீனா பாசை கதைக்க விருப்பமா?

இன்னும் கொஞ்சகாலத்தில் இலங்கைக்கு போவதானால் இரண்டில் ஒரு பாசை கதைக்க தயாராக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு கிந்தி கதைக்க விருப்பமா?சீனா பாசை கதைக்க விருப்பமா?

இன்னும் கொஞ்சகாலத்தில் இலங்கைக்கு போவதானால் இரண்டில் ஒரு பாசை கதைக்க தயாராக இருக்க வேண்டும்.

தமிழ் தெரியாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தமிழ் தெரியாது...

 

புத்தன் ஐயா, ஒருகாலத்தில் 

ரூப்பிதெரா மஸ்தானா......
மேரே மித்துவா......
ஏ..தோஸ்துகி.....
தேரே மேரே கித்துமே....

என்றெல்லாம் பாடி மகிழ்ந்த ஆக்கள்

ஆராதனா.., நாகினா..குர்பானி, சோலே..ஏக் துஜெ கெலியே, சனம் தெரி கசம் போன்ற படங்களை திரும்ப திரும்ப பார்த ஆக்கள்...

இப்ப இந்தி தெரியதென்றீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

 

புத்தன் ஐயா, ஒருகாலத்தில் 

ரூப்பிதெரா மஸ்தானா......
மேரே மித்துவா......
ஏ..தோஸ்துகி.....
தேரே மேரே கித்துமே....

என்றெல்லாம் பாடி மகிழ்ந்த ஆக்கள்

ஆராதனா.., நாகினா..குர்பானி, சோலே..ஏக் துஜெ கெலியே, சனம் தெரி கசம் போன்ற படங்களை திரும்ப திரும்ப பார்த ஆக்கள்...

இப்ப இந்தி தெரியதென்றீங்கள்?

..அதையும் தமிழன் நடிச்சாத்தான் பார்த்து ரசிப்போமல்ல .....தமிழன்டா...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.