Jump to content

இரண்டு நாட்களில் நெருக்கடி நிலைக்குத் தீர்வு – ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்களில் நெருக்கடி நிலைக்குத் தீர்வு – ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களுடன் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக மனோகணேசன் குறிப்பிட்டார்.

இதன்போது, ஜனாதிபதியுடன் இரண்டு விடயங்கள் பேசப்பட்டதாகவும், இரண்டாவது விடயம் தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.

எனினும் முதலாவது விடயமாக, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப சூழலை எதிர்வரும் இரண்டு நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாகவும், ஜனாதிபதி அதற்குரிய வாக்குறுதிகளை வழங்கியதாகவும் மனோகணேசன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் 2 அல்லது 3 நாட்களில் நாட்டின் குழப்ப சூழ்நிலைக்கான தீர்வினை ஜனாதிபதி வழங்குவார் என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/இரண்டு-நாட்களில்-நெருக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி... ராஜினாமா பண்ணப் போகிறார் போலை இருக்கு.
அவளைத் தொடுவானேன் அவதி படுவானேன்... என்ற நிலையில்  மைத்திரி  இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி... ராஜினாமா பண்ணப் போகிறார் போலை இருக்கு.
அவளைத் தொடுவானேன் அவதி படுவானேன்... என்ற நிலையில்  மைத்திரி  இருக்கிறார்.

என்ன அவளைத் தொட்டா தொட்டில் ஆடணும்

இல்லாவிட்டால் தொடப்படாது என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி... ராஜினாமா பண்ணப் போகிறார் போலை இருக்கு.
அவளைத் தொடுவானேன் அவதி படுவானேன்... என்ற நிலையில்  மைத்திரி  இருக்கிறார்.

இராணுவத்திடம் ஆட்சியைக் கையளிக்கும்...சாத்தியங்களும் இல்லாமல்...இல்லை!

அண்மைய சீனாவின் கருத்தையும்...கணக்கில் எடுக்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி தனது பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் வண்ணத்துப்பூச்சிகளுடன் சேர்ந்து தான் பறக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

இராணுவத்திடம் ஆட்சியைக் கையளிக்கும்...சாத்தியங்களும் இல்லாமல்...இல்லை!

அண்மைய சீனாவின் கருத்தையும்...கணக்கில் எடுக்கவும்!

மகிந்தவுக்கு இராணுவ தரப்பில் மிகுந்த செல்வாக்கு இருப்பதாக கேள்விப்பட்டேன். உண்மையாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

மகிந்தவுக்கு இராணுவ தரப்பில் மிகுந்த செல்வாக்கு இருப்பதாக கேள்விப்பட்டேன். உண்மையாக இருக்குமோ?

எதுவும் நடக்கலாம் என்ற நிலை தான் இப்போது உள்ளது!

சீனா....மிகவும் அதிகமாகவே ....சிங்களத்தில் முதலிட்டு விட்டது!

அவற்றை இலகுவில் இழந்து விட விரும்பாது!

அத்துடன்....மேற்குலகம் எதிர்பார்த்த...சமாதான முன்னெடுப்புகள்...ஒரு அங்குலம் கூட...முன்னோக்கி நகர்ந்த மாதிரி இல்லை!

இந்தியா எதிர்பார்த்த....சந்தையும்...அதற்குக் கிடைப்பதாக இல்லை!

இராணுவத்தை....தேவைக்கு அதிகமாகவே...சிங்களம் வளர்த்து விட்டது!

இனி...விலை கொடுக்க வேண்டிய காலத்தை நோக்கி இலங்கை நகர்கின்றது!

 

எங்கடையள் ...ஜின்னா...மாதிரிச் சந்தர்ப்பங்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம்!

ஆனால்.....செய்வார்களா.....அல்லது சில்லறைகளுக்கு விலை போய் விடுவார்களா...என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புங்கையூரன் said:

எதுவும் நடக்கலாம் என்ற நிலை தான் இப்போது உள்ளது!

சீனா....மிகவும் அதிகமாகவே ....சிங்களத்தில் முதலிட்டு விட்டது!

அவற்றை இலகுவில் இழந்து விட விரும்பாது!

அத்துடன்....மேற்குலகம் எதிர்பார்த்த...சமாதான முன்னெடுப்புகள்...ஒரு அங்குலம் கூட...முன்னோக்கி நகர்ந்த மாதிரி இல்லை!

இந்தியா எதிர்பார்த்த....சந்தையும்...அதற்குக் கிடைப்பதாக இல்லை!

இராணுவத்தை....தேவைக்கு அதிகமாகவே...சிங்களம் வளர்த்து விட்டது!

இனி...விலை கொடுக்க வேண்டிய காலத்தை நோக்கி இலங்கை நகர்கின்றது!

 

எங்கடையள் ...ஜின்னா...மாதிரிச் சந்தர்ப்பங்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம்!

ஆனால்.....செய்வார்களா.....அல்லது சில்லறைகளுக்கு விலை போய் விடுவார்களா...என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

ஈழத்தமிழினத்திற்கு ஜின்னாவுக்கு வந்த சந்தர்ப்பங்கள் மாதிரி பல வந்து போயிருக்கின்றது. 

வீரவசனங்கள் பேசி காலத்தை கடத்தி ஒரு இனத்தையே நடுத்தெருவில் விட்டு விட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.