Jump to content

பொதுத் தேர்தல் ரத்துச் செய்யப்படவில்லை:தினேஷ் குணவர்த்தன


Recommended Posts

பொதுத் தேர்தல் ரத்துச் செய்யப்படவில்லை:தினேஷ் குணவர்த்தன

 

Dinesh-150x150.jpgஉயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பொதுத் தேர்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் கருத்து ஒரு மாயை ஆகும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இறுதித் தீர்ப்பல்ல. நீதிமன்றம் விதித்துள்ள தற்காலிக தடை உத்தரவுக்கு மதிப்பளிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் பொதுத் தேர்தல் இரத்துச் செய்யப்படவில்லை. தற்காலிக தடை மாத்திரமே விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இதனை முறியடித்து பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயகத்தை ஏற்படுத்தி மக்களுக்கான உரிமையை பாதுகாப்பதே எமது நோக்கமாகும். மக்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் னெ;றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபாநாயகராலோ பாராளுமன்றத்தினாலேர் பிரதமர் ஒருவரை நியமிக்க முடியாது. இதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு மாத்திரமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு உயர்நீதிமன்றம் சந்தர்ப்பம் அளித்துள்ளது.

இதன் மூலம் தேர்தல் நடத்தப்படும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படவில்லை என்பதனால் அதன் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார். இந்த மனுக்கள் மீதான விசாரணையை இதையும் விட விரிவான நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடத்துமாறு கோருவதற்கும் இதற்கு சேவை பெறுனர்களுக்கு உரிமை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிடுகையில்., இந்த நீதிமன்ற உத்தரவின் மூலம் பிரதமர் நியமனமோ, அமைச்சரவை நியமனமோ ரத்தாகவில்லை என சுட்டிக்காட்டினார்

தேர்தலுக்கு அஞ்சி அதனைத் தவிர்ப்பதற்காக உயர்நீதிமன்றம் சென்ற முதலாவது எதிர்க்கட்சி தற்போதுள்ள எதிர்க்கட்சியாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். சபாநாயகருக்கு பாராளுமன்றத்தைக் கூட்டும் சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என்றும் சபாநாயகரின் செயற்பாட்டை கடைப்பிடிக்க வேண்டாமென்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பின் மூலம் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்தாகவில்லை என அமைச்சர் பைசர் முஸ்தபாவும் சுட்டிக்காட்டினார்

http://www.battinews.com/2018/11/blog-post_254.html

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

 உயர்நீதிமன்றம் சென்ற முதலாவது எதிர்க்கட்சி தற்போதுள்ள எதிர்க்கட்சியாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். 

தற்போதுதான் இலங்கை அரசிலுள்ள எதிர்க்கட்சி...! பதவிக்கு வந்தபின் முதன்முறையாக ஒரு உருப்படியான காரியத்தைச் செய்திருக்கிறது. ☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
    • இதனை வேற சொல்லித்தான் தெரியனுமா ......பங்காளி மாட்டிட்டாரு ....தமிழிலில் ஒரு பழமொழி "ஆழம் தெரியாமல் காலை விடாதே " சும்மாவா சொன்னார் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.