Jump to content

“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”

 

(ரொபட் அன்டனி, எம்.டி. லூசியஸ்) 

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என  அமைச்சரவை பேச்சாளரான  மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர்.

daya_sri_and_mahinda.jpg

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். 

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள்,

நாட்டில் நிலையான அரசாங்கம், அமைச்சரவை இல்லாமல் இருக்கின்றது. இதுவொரு பாரிய பிரசின்னையே?

அவ்வாறான ஒரு நிலைமை நாட்டில் இல்லை. வர்த்தமானி பிரகாரம் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் இருக்கின்றது. ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி எதிரணியினர் நீதிமன்றம் செல்லவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் பாரளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகவே ஐக்கிய தேசியக் கட்சியினர் நீதிமன்றம் சென்றனர்.

ஆனால் இதற்கு இறுதி தீர்ப்பு  உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்படவில்லை. பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அரசியலமைப்பு பிரகாரம் முன்னெடுத்த நடவடிக்கைகளை யாரும் சவாலுக்குட்படுத்த முடியாது.

பாராளுமன்றில் சம்பிரதாயங்கள் மீறப்பட்டுள்ளன

பாராளுமன்றில் இன்று காலை  எதிரணியினர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் தவறானது. பாராளுமன்ற சம்பிரதாயத்தையும் நீதியையும் குழித்தோண்டி புதைத்துள்ளனர். 

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அப்பால் நம்பிக்லையில்லா பிரேரணை என ஒன்றை அநுரகுமார எம்.பி. வாசித்தார். பின்னர் ஏதோ ஒரு கடதாசியை விஜிதஹேரத் எம்.பி. பொதுசெயலாளரிடம் ஒப்படைத்தார். சபாநாயகரிடமும் ஒப்படைக்கவில்லை. அதில் என்ன விடயம் இருந்தது என எமக்கும் தெரியாது சபாநாயகருக்கும் தெரியாது. ஆனால் சிறிது நேரத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என்கிறார்கள்.

கேள்வி: பிரேரணை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

இல்லை. ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை. நான் அரை மணித்தியாலங்களுக்கு முன்னர் ஜனாதிபதியுடன் தான் இருந்தேன். அதுவரையில் ஜனாதிபதிக்கு எந்த கடிதமும் கிடைத்திருக்கவில்லை. 122 பேர் கையொப்பத்துடன் சபாநாயகர் ஜனாபதிக்கு கடிதம் அனுப்பயிருப்பதாக கூறுகிறார்கள். அவ்வாறு ஒரு கடிதம் கிடைத்தால் ஜனாதிபதி சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுப்பார்.

திருட்டு அரசாங்கம், திருட்டு அமைச்சர்கள் என கூறுகின்றார்களே?

இவை சேறு பூசும் நடவடிக்கைகளாகும். இவ்வாறு கூறி அரசியல் செய்கின்றார்கள். கள்வர்களை பிடிப்பதாக கூறி ஆட்சியமைத்தவர்கள் இன்று அவர்களால் ஆட்சயை கூட தக்கவைத்துக்கொள்ளவில்லை.

உங்களிடம் 113 பெரும்பான்மை இல்லை என்பதால் தானே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது?

இல்லை. பாராளுமன்றம் கலைக்கபட்டமைக்கு ஜனாதிபதி மூன்று காரணங்களை பகிரங்கமாக கூறியிருந்தார். அதனடிப்படையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

113 பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி செய்ய முடியுமா?

2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிடம் 42 உறுப்பினர்களே இருந்தனர். அப்போது அவர்கள் ஆட்சி செய்யவில்லையா? ஆட்சி செய்வதற்கு எண்ணிக்கை முக்கயமில்லை.

113 நிரூபிக்க முடியாவிட்டால் வீட்டுக்கு செல்வோம் என்று கூறுனீர்களே?

இவ்வாறு கூறுவது வழமையான நிகழ்வு. ஜனாதிபதி இதுதொடர்பில் தீர்மானிப்பார். ஐக்கிய தேசியக் கட்சியிடம் 122 பேர் இருக்கின்றார்கள் என கூறுவது பொய்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய பிரதமருக்கு ஆதரவு வழங்கவில்லை. அவை பாராளுமன்றத்தை கூட்டவே ஆதரவு வழங்கின. எனவே அவர்கள் முற்று முழுதான பொய்யாகும்

 

http://www.virakesari.lk/article/44487

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.