Jump to content

இன்று கூட்டமைப்பில் இணைய விரும்பிய வியாழேந்திரன்… நாடாளுமன்றில் நடந்த சுவாரஸ்யம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கூட்டமைப்பில் இணைய விரும்பிய வியாழேந்திரன்… நாடாளுமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

November 14, 2018
45318227_2340499245979998_79482886915484

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி பிரதியமைச்சராக பதவியேற்ற ச.வியாழேந்திரன், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய இரகசிய தூது விட்டு வருகிறார் என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள் அவரை மீண்டும் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும், இரா.சம்பந்தன் அவரை மீள இணைத்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் அப்போது அவரை மீள இணைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

பெரும் சர்ச்சையின் பின்னர் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது, வியாழேந்திரன் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய முயற்சித்தார் என்ற தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்திற்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்த போது, அங்கு பிரசன்னமாகிய ஐ.தே.கவின் முக்கியஸ்தர் மலிக் சமரவிக்கிரம இந்த முயற்சியை மேற்கொண்டார். “வியாழேந்திரன் ஒரு நண்பர் மூலம் என்னுடன் பேசினார். அவர் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விரும்புகிறார். இப்போது நமக்கு ஆட்களும் தேவைதானே. அவரை இணைத்துக் கொள்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இணைத்து கொள்வீர்களா?“ என கேட்டார்.

அங்கு இரா.சம்பந்தனும் இருந்தார். அதனால் எல்லோரும் அதை சம்பந்தனின் முடிவிற்கே விட்டு விட்டார்கள்.

“அவர் நமக்கு இனி வேண்டாம்“ என இரா.சம்பந்தன் தனது முடிவை அறிவித்தார்.

 

http://www.pagetamil.com/23749/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு போரும் முட்டாள்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையாக இருந்தால்......வாய்த்தினாவெட்டு விட்ட வியாளேந்திரனுக்கு அவமானம். நான் முன்னர் ஒரு திரியில் சொன்ன கிழக்கின்  குத்துக்கரண நாடகங்களின் அர்த்தங்கள் உண்மையாகி விட்டது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சுமத்திரன் ஆட்சியாளர்களின் அடிவருடிகள் இன்னிக்கு வியாலேண்திரன் உடன் முறுகிறது போல் நடித்து கொஞ்சநாள் போக பின்கதவால் சேர்ப்பினம் எங்கடயளுக்கு என்கைபோனாலும் முதுகை வளைப்பது ஒன்றும் புதியது இல்லயே?

காரணம் வடகிழக்கில் இழக்கும் செல்வாக்கு அடுத்துவரும் போட்டிக்கு கிழக்கில் உருப்படியானது இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

darwin-apes.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.