Jump to content

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட்ஸ் அப்பில வந்தது....
...................…...................
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது.

புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே ஆப்பைக் கடையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான் நான்.

பாராளுமன்றத்தை மூடினேன்.. ஆட்சியைக் கலைத்தேன்.. யாப்பை மீறினேன் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. பாராளுமன்றத்தை மூடினேன் பாராளுமன்றம் கூடாதென்பதற்காக அல்ல ரணில் பெரும்பான்மையைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக. பாராளுமன்றத்தைக் கலைத்தேன் டைம் பாசுக்காக அல்ல ரணில் பிரதமராக இருக்கக் கூடாது என்பதற்காக

உனக்கேன் இவ்வளவு அக்கறை, இலங்கையில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. 
Bites ற்காக கெட்ட கஜுவைத் தின்றுவிட்டு பைட் ஆகி நல்ல கஜுவை வைக்கச்சொன்னனே அதைப்போல

என்னைக் குற்றவாளி என்கிறீர்கள், இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள கஸ்ட்டங்கள் நஸ்ட்டங்கள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். நல்ல கஜு இருக்கவில்லை என் ப்ளைட்டில் நாய் திண்ணா கஜுவைத் தின்றிருக்கிறேன். 
புரியாணிகள் ஃப்ரைட் ரைஸ்கள் தின்றதில்லை நான் ஆனால் ஆப்பையும் வாழையிலைச் சோறும் தின்றிருக்கிறேன்.
கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

இலங்கை திருநாட்டிலே பொலனறுவையில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர். அரசியல்வாதிகளின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சுதந்திரக் கட்சி! என்னை வளர்த்தது. என்னை ஜனாதிபதியாக்கியது. ஜனாதிபதியானதும் ஆவலோடு அலுவலகம் வந்தேன். பிரதமர் கதிரையைப் பிடித்துக்கொண்டு இதோ உங்கள் முன்னிலையில் நிக்கிறானே ரணில், இவன் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். அதிகாரத்தைப் பறிகொடுத்தேன், அவமானப்படுத்தப்பட்டேன் கடைசியில் பைத்தியமாக மாறினேன். தேடிச் சென்ற ரணிலைக் கண்டேன், காணக்கூடாத கோலத்திலே. ஆம் ஒரு பட்டாம்பூச்சியாக.
எனது பெயரோ மைத்ரி தரித்திரமான பெயர். ஜனாதிபதி என்ற மரியாதையுமில்லை. நல்லா இருந்த பெயர் நாசமாகிவிட்டது. கையில் பதவி மனதில் கவலை. அலைந்தேன், ரணிலை விரட்ட நான் அலைந்தேன்.

எனக்கு கருணை காட்ட முன்வந்தனர் பலர். அவர்களிலே வண்ணாத்திக் காளையர்கள் சிலர் அவர்களுடன் காதலைக் கேட்டனர். இதோ உங்கள் முன் நல்லவன் போல் நிக்கிறானே இக்கொடியவன், பகட்டால் என்னைக் கண்டம் பண்ண முயன்றான் நான் தடுத்திராவிட்டால் என்னை அப்போதே கண்டம் பண்ணியிருப்பான்.
மகிந்த பக்தர்களும் எனக்கு கருணை காட்ட முன்வந்தனர். பிரதியுபகாரமாக பிரதமர் பதவியைக் கேட்டனர். அதில் பிரதானமானவந்தான் இந்த மகிந்த. உடனே பிரதமராக்கும்படி கேட்டான். ரணிலை விரட்ட ரணிலிடமிருந்து என்னைக் காக்க. வேறு வழியில்லாம ஏற்றுக்கொண்டேன்.

அப்பத்தை தின்றுவிட்டு அந்தத் திண்ணையிலே படுத்து உறங்கியிருப்பேன். என்னை ஜனாதிபதியாகத் தூண்டி சிக்கலுக்குள் தள்ளிவிட்டது இந்த ரணில்தான். கிடைத்த வாய்ப்பை விட்டுவிட நான் விரும்பவில்லை. அதனால் இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக விரும்பினேன். பதவிக்கு வந்ததும் மனம் மாறுவது விந்தையல்ல. உலக உத்தமர்(?), அஹிம்சா மூர்த்தி(?), ஜீவகாருண்ய சீலர்(?) மகிந்த, அவரே மூன்றாம் முறையும் ஜனாதிபதியாக ஆசைப்பட்டிருக்கிறார். இந்த பதவியின் மேலிருந்த மோகத்தால். அந்த முறையைத்தான் நானும் கையாண்டிருக்கின்றேன்.இது எப்படி குற்றமாகும்.

நான் விட்டுக்கொடுத்திருந்தால் ரணிலின் வண்ணாத்திக் குடும்பத்திலே நானும் சிறகடித்திருக்கலாம், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணியிருந்தால் ரணிலின் மடியில் ஒருநாள் மங்களவின் மடியில் ஒருநாள் என்று ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?
மகிந்த ஒரு பக்கம் விரட்டினான் ஓடினேன், கோத்தபாய என்னை விரட்டினான் ஓடினேன், ரணிலும் என்னை விரட்டினான் ஓடினேன்…. ஓடினேன் ஓடினேன் கோல்பேஸ் தொங்கல் வரை ஓடினேன்.. அங்கே ஆப்பைக் கடையிருந்ததால் அங்கயே அமர்ந்துவிட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும் ஆட்சியை நிம்மதியாய் செய்ய விட்டிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? நிம்மதியாக ஆழவிட்டார்களா என்னை?

ஜனாதிபதியான என்னை அதிகாரமில்லாமல் ஆக்க நினைத்த பாவிக்கு பாடம் புகட்ட நினைத்ததில் என்ன தவறு?
நான் பாராளுமன்றத்தை மூடியது ஒரு குற்றம்,பிரதமரை மாற்றியது ஒரு குற்றம், பாராளுமன்றத்தைக் கலைத்தது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்..? என்னை அதிகாரம் பண்ண விடாமல் தடுத்தது யார் குற்றம்? நல்லாட்சியின் குற்றமா? இல்லை நல்லாட்சியைச் சொல்லிச் சொல்லி என்னை மட்டம்தட்டிய ரணிலின் குற்றமா?
மோசடி செய்த அர்ஜுன மகேந்திரனை தப்பிக்க விட்டது யார் குற்றம்? பொலிசாரின் குற்றமா? இல்லை தன் பதவியைப் பயன்படுத்தி தப்பிக்க விட்ட ரணிலின் குற்றமா?
என்னைக் கொல்ல சதி செய்தது யார் குற்றம்? இந்திய ரோவின் குற்றமா? இல்லை அதைத் திட்டம் தீட்டிய ரணிலில் குற்றமா?
இக்குற்றங்கள் புரிந்த ரணிலை வீட்டுக்கு அனுப்பும் வரை மைத்ரியும் அவனது அட்டகாசங்களும் குறையப்போவதில்லை. இதுதான் நான் திண்ட அப்பம், வாழையிலைச் சோறு என்பன என்னுள் வளர்த்துவிட்ட பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.

 

:grin::grin::grin:

Link to comment
Share on other sites

பகிடியாக எழுதுவதாக நினைத்து ஓரினச்சேர்க்கையாளர்களை கொச்சைப்படுத்தி எழுதியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பகிடியாக எழுதுவதாக நினைத்து ஓரினச்சேர்க்கையாளர்களை கொச்சைப்படுத்தி எழுதியுள்ளனர்.

நானும் அதைக்கவனித்தேன் நிழலி

ஆனால்  95 வீதம் இன்றைய நடப்புடன் பொருந்துவதால்  இணைத்தேன்

 

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

பகிடியாக எழுதுவதாக நினைத்து ஓரினச்சேர்க்கையாளர்களை கொச்சைப்படுத்தி எழுதியுள்ளனர்.

இனம் இனத்தோடுதானே சேரும். ஓரினம் சேரக்கூடாதா.?  மனிதர் மனிதரோடுதானே சேரவேண்டும்.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

பகிடியாக எழுதுவதாக நினைத்து ஓரினச்சேர்க்கையாளர்களை கொச்சைப்படுத்தி எழுதியுள்ளனர்.

ஜனாதிபதியே கொச்சை படுத்தி பேசினால், யாரும் எழுதுவார்கள் தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.