Jump to content

சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்


Recommended Posts

சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
 

    
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi


ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில், சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவில் எம்.பி.ஏ., முடித்த விசாகன், தமிழகத்தில் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன் வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

குடும்பத்தினரது சம்மதத்துடன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/13122618/1212723/Soundarya-Rajinikanth-to-marry-Vishagan-Vanangamudi.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்காலிப் பக்கமும் பிரச்சணை தான்.

விசாகனும் விவாகரத்து ஆன பார்ட்டி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பொரு காலம் மக்கள் ஒரே கணவன் மனைவி என்று வாழ்ந்தார்களாம் என்று கதை எத்ர்காலத்தில் மாறிடும் போல் இருக்கு சர்வசாதாரன நிகழ்வாகிவிட்டது விவாகரத்து .

எதொச்சையாய் மகளின் புத்தக அலுமாரியை பொழுதுபோக்காய் கிண்டியதில் சிறுவர்களுக்கான கதைகள் எழுதுவதில் இங்கு புகழ்பெற்ற jacqueline wilson கதை புத்தகங்களில் அசாதரான நிகழ்வாய் விவாகரத்து ஆனா தாய் மற்றொரு கணவனுடன் சேர்ந்து வாழ்கிறா அதனால் அந்த பிள்ளை தகப்பனை தேடிப்போகின்றா அவரும் நான்கு தெரு தள்ளி இன்னொரு ஸ்டெப் மம் உடன் வாழ்கிறார் ஸ்டெப் மம் க்கு ஏற்கனவே இரு பிள்ளைகள் இப்படி கதை போகுது அரிவரி பிள்ளகளுக்கு எழுதும் கதைகளில் அது சாதாரண நிகழ்வு போல் சித்தரிப்பது அந்த பிள்ளகளின் மனதில்  எதிர்காலத்தில் எப்படி இருக்கும் ? 

குமாரசுவாமி சொல்வது போல் புட்டுக்கு உப்பு இல்லையென்றாலும் டிவேர்ஸ் தான் புலம்பெயர் நாடுகளில். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.