Jump to content

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

November 14, 2018

 

இலங்கை மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. அதில் ஏற்கனவே முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை வெல்வதில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டுகிறது.

இதேவேளை முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணிக்கும் இந்தப் போட்டிய முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/2018/103233/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை

285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

eng1.jpg

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள், ஒரு இருபதுக்கு 20 மற்றும் மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இதில் ஒருநாள் போட்டியை 3:1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியதுடன் இருபதுக்கு 20 தொடரையும் கைப்பற்றியதுடன்.

அத்துடன்  கடந்த 09 ஆம் திகதி நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 75.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸுக்கா 285 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜோஸ் பட்லர் மற்றும் ஷாம் குர்ரன் தலா 63 ஓட்டங்களையும், றோறி பேர்ன்ஸ் 43 ஓட்டங்களையும், அடீல் ரஷீத் 31 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

eng2.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றூவான் பெரேரா 4 விக்கெட்டுக்களையும், மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

eng3.jpg

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கை அணி முதலாம நாள் ஆட்ட நிறைவின்போது 12 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஆடுகளத்தில் திமுத் கருணாரத்ன 19 ஓட்டத்துடனும், மலிந்த புஷ்பகுமார ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/44489

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாரத்ன – றோஷன் சில்வாவின் சிறப்பான ஆட்டம்: முதல் இன்னிங்சில் 336 ஓட்டங்களை பெற்றது இலங்கை!

DsCoA4rU0AIiBms.jpg

கருணாரத்ன மற்றும் றோஷன் சில்வாவின் அரைச் சத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்சில் அனைத்து விகாட்களையும் இழந்து 336 ஓட்டங்களை பெற்றுகொண்டுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்சை நேற்று ஆரம்பித்த இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில் முதலாவது நாள் ஆட்டம் முடிவிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 2 ஆம் நாள் ஆட்டத்தில் புஷ்பகுமாரா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து கருணாரத்னவுடன் தனஞ்ஜய டி சில்வா ஜோடி சேர்ந்தார். அதன் படி கருணாரத்ன 63 ஓட்டங்களுடனும் டி சில்வா 59 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் மெண்டிஸ் 1 ஓட்டங்களுடனும், மத்யூஸ் 20 ஓட்டங்களுடனும் வெளியேறினார்கள். 7-வது வீரராக களம் இறங்கிய றோஷன் சில்வா 85 ஓட்டங்கள் எடுத்து இறுதி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 103 ஓவரில் 336 ஓட்டங்களுக்குள் அணைந்தது விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் லீச் மற்றும் ரஷித் தலா மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.

இந்நிலையில் 46 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. இன்று ஒரேயொரு ஓவர் மட்டுமே எதிர்கொண்ட இங்கிலாந்து ஓட்டங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. நாளைய தினம் 3 ஆம் நாள் ஆட்டம் அரம்பமாகும்.

DsCoBDUVAAAEebd.jpg

DsCoAwAUUAAAWq1.jpg

 

http://athavannews.com/கருணாரத்ன-றோஷன்-சில்வாவ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ ரூட்டின் அபார சதம் – இங்கிலாந்து அணி 278 ஓட்டங்கள் முன்னிலை!

joy-root.jpg

இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 278 ஓட்டங்கள் முன்னிலையுடன் உள்ளது.

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, அதன் முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பின்னர் தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி கருணாரத்ன மற்றும் றோஷன் சில்வாவின் அரைச் சத்தின் உதவியுடன் 336 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 46 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இன்றைய 3 ஆம் நாள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இதில் அணித்தலைவர் ஜோய் ரூட் 124 ஓட்டங்களையும், ரோரி பேர்ன்ஸ் 59, பென் ஃபோக்ஸ் அட்டமிழக்கத்து 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 23 ஓவர்கள் வீசி 6 விக்கெட்களையும், டில்ருவன் பெரேரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி இன்றைய நாள் முடிவில் 278 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது. நாளை (சனிக்கிழமை) 4 ஆம் நாள் ஆட்டம் அரம்பமாகும்.

lanka.jpg

sri.jpg

 

 

http://athavannews.com/ஜோ-ரூட்டின்-அபார-சதம்-இங்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வெற்றி இலக்கு 301

கண்டி பல்லேகல  இடம்பெற்றுவரும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. 

sl.jpg

கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுக்களையும் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். 

அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களை பெற்றக்கொண்டது. 

துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ரொஷன் சில்வா 85 ஓட்டங்களையும், திமுத் கருணரத்ன 63 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். 

இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் நிறைவில் 46 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸின் வெற்றியிலக்காக 301 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை. இங்கிலாந்து. வெற்றி இலக்கு 301. 2 வது இன்னிங்ஸ்

 

 

http://www.virakesari.lk/article/44648

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையிலிருப்பில் 3 விக்கெட்டுக்கள் ; வெற்றியை அடையுமா இலங்கை?

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட  நிறைவின்போது இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை குவித்துள்ளது.

eng.jpg

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பாமன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிக்காக 336 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணி 46 ஓட்டத்துடன் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து மூன்றாம் நாளான நேற்றைய தினம் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 76 ஓட்டங்களை எதிர்கொண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 278 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.ஆடுகளத்தில் பென் போக்ஸ் 51 ஓட்டத்துடனும், அண்டர்சன் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் இன்று ஆரம்பமான போட்டியின் நான்காம் நாளான ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி 80.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 301 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

அணி சார்பில் ஜோ ரூட் 124 ஓட்டங்களையும், பென் போக்ஸ் 65 ஓட்டத்தையும், றொறி பெர்ன்ஸ் 59 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரோ 3 விக்கெட்டுக்களையும், மலிந்த புஷ்பகுமார 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

301 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவின் போது 65.2 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டினை இழந்து 226 ஓட்டங்களை குவித்துள்ளது.

அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் 88 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 57 ஓட்டங்களையும், ரோஷான் சில்வா 37 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

mathiw.jpg

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜெக் லேச் 4 விக்கெட்டுக்களையும், மொய்ன் அலி 2 விக்கெட்டுக்களையும், அடீல் ரஷதித்  ஒரு விக்கெட்டினையும் பெற்றுக் கொண்டனர்.

இதனால் இலங்கை அணிக்கு வெற்றிக்கு இன்னும் மூன்று விக்கெட் கைவசமிருக்க 75 ஓட்டங்கள் மாத்திரம் தேவை என்ற நிலையில் உள்ளது. 

எனினும் நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை  அணி வீரர்கள் இங்கிலாந்து  அணிப் பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு தாக்குப் பிடித்து வெற்றியடைவார்களா அல்லது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தொடரை 2:0 என்ற கணக்கில் பறிகொடுப்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

http://www.virakesari.lk/article/44680

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

57 ஓட்டத்தினால் தோல்வியை தழுவி தொடரை இழந்தது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

eng3.jpg

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பாமன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிக்காக 336 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணி 46 ஓட்டத்துடன் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 346 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 301 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

301 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவின் போது 65.2 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டினை இழந்து 226 ஓட்டங்களை பெற்றிருந்தது.

eng2.jpg

இதனையடுத்து போட்டியின் ஐந்தாம் நாளான இன்று 226 ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 74 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 57 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.

cric.jpg

அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் 88 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 57 ஓட்டங்களையும், ரோஷான் சில்வா 37 ஓட்டத்தையும், திக்வெல்ல 35 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேக் 5 விக்கெட்டுக்களையும், மொய்ன் அலி 4 விக்கெட்டுக்களையும், அடீல் ரஷித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

eng.jpg

இதனால் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வவரும் 23 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 

http://www.virakesari.lk/article/44705

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.