Jump to content

டிரம்ப் மீது வழக்கு தொடுத்த, CNN


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

à®à®©à¯à®© நà®à®¨à¯à®¤à®¤à¯

டிரம்ப் மீது வழக்கு தொடுத்த சிஎன்என்.. பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வியால் சிக்கலில் வெள்ளை மாளிகை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் வழக்கு தொடுத்து இருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையின் எச்.ராஜா அல்லது ரஜினி என்றுதான் கூற வேண்டும். அவருக்கும் செய்தியாளர்களுக்கும் இப்போதெல்லாம் ஏழாம் பொருத்தம்தான்.

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அமெரிக்க அதிபரை வைத்து செய்வதையே வேலையாக வைத்து இருக்கிறது செய்தி நிறுவனங்கள். அந்த வகையில் கடந்த வாரம் அவர் செய்த சர்ச்சை ஒன்றால் தற்போது அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பில்தான் அந்த சம்பவம் நடந்தது. அவரிடம் சிஎன்என் நிரூபர் ஜிம் அகோஸ்டா நிறைய கேள்விகளை கேட்டார். அமெரிக்காவில் குடியேறும் மெக்சிகோ மக்கள் பற்றியும், அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடும் பற்றியும் கேட்டார். ஆனால் டிரம்ப் அதற்கு பதில் அளிக்காமல், அவரை அமரும்படி கோபமாக பேசினார்.

ஆனால் ஜிம் அகோஸ்டா டிரம்ப் பேச்சை கேட்காமல் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இதனால் டிரம்ப்பின் உதவியாளர்களில் ஒருவரான பெண் ஒருவர், ஜிம் அகோஸ்டாவின் மைக்கை வந்து பிடுங்கினார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இது வீடியோவாகவும் வெளியானது.

பà¯à®¯à¯à®¯à®¾à®© பà¯à®à®¾à®°à¯

ஆனால் அந்த பெண் மைக்கை வாங்கும் போது ஜிம் அகோஸ்டா அந்த பெண்ணை தவறாக தீண்டினார் என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் வீடியோ வெளியே வந்த காரணத்தால் ஜிம் அகோஸ்டா எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபணம் ஆனது. ஆனால் வெள்ளை மாளிகைக்குள் செய்தி சேகரிக்கவும், உள்ளே வரவும் ஜிம் அகோஸ்டாவிற்கு டிரம்ப் தடை விதித்தார். அந்த பெண்ணை தவறாக சீண்டினார் என்று கூறி தடை விதித்தார்.

இந்த நிலையில்தான் தற்போது டிரம்ப் மீது செய்தி நிறுவனமான சிஎன்என் வழக்கு தொடுத்து இருக்கிறது. தன்னுடைய பத்திரிகையார் ஜிம்மிற்கு தடை விதித்தது தவறு. அவர் மீதான தடையை நீக்க வேண்டும். டிரம்ப் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இது அமெரிக்காவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/new-york/power-fourth-piller-cnn-sues-trump-over-jim-acosta-controversy-334162.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CNN)CNN's Jim Acosta will return to his post at the White House on Friday following a court ruling that forced the Trump administration to reinstate his press pass.

The ruling by federal judge Timothy J. Kelly was an initial victory for CNN in its lawsuit against President Trump and several top aides. The suit alleges that CNN and Acosta's First and Fifth Amendment rights were violated by last week's suspension of his press pass.
Kelly did not rule on the underlying case on Friday. But he granted CNN's request for a temporary restraining order on Fifth Amendment grounds. And he said he believes that CNN and Acosta are likely to prevail in the case overall. 
"Let's go back to work," Acosta said in brief comments outside the courthouse.
 
 
 
 
 
 
The White House said it would follow the court order and "temporarily reinstate the reporter's hard pass."

வெள்ளைமாளிகை பத்திரிகையாளர் பகுதியிலிருந்து தடை செய்யப்பட்ட சி என் என் பத்திரிகையாளர் மீண்டும் உள்நுழைய நீதிமன்று அனுமதியளித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/14/2018 at 5:47 AM, தமிழ் சிறி said:

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையின் எச்.ராஜா அல்லது ரஜினி என்றுதான் கூற வேண்டும். அவருக்கும் செய்தியாளர்களுக்கும் இப்போதெல்லாம் ஏழாம் பொருத்தம்தான்.

அரசியல் மற்றும் உலக அறிவு இல்லாதவர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.