Jump to content

ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி

புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 14 புதன்கிழமை, மு.ப. 12:40 Comments - 0

குற்றமிழைத்தவர்களே, நீதி விசாரணை நடத்துவதும், தீர்ப்பை எழுதுவதும் இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயமல்ல.  அப்படியான, சமூக - அரசியல் ஒழுங்கிணை ஒரு பாரம்பரியமாக, இலங்கை பேணி வருகிறது. அதன் அண்மைக்கால உதாரணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.  

அவரின் நீதிக்கு முரணான அத்துமீறிய செயற்பாடுகளால், நாட்டையும் நாட்டு மக்களையும் அலற வைத்திருக்கிறார். அது மாத்திரமின்றி, அவரின் செயற்பாடுகளுக்குள் அவரே, ‘ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்டு’ம் முழிக்கிறார்.   

தற்போதைய குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மூலகாரணமாக இருக்கும் மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய அத்துமீறிய செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக, தொலைக்காட்சிகளில் தோன்றி உரையாற்றத் தொடங்கியிருக்கின்றார்.   

அதன்மூலம், எதுவுமே அறியாத அப்பாவி தான் என்கிற தோரணையை, அவர் வரவழைக்க முயல்கிறார். கடந்த மூன்று வாரங்களில் அவர், இரண்டு தடவைகள் தொலைக்காட்சி வழி, நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருக்கிறார்.   

அரசியலுக்கும் ஆட்சியதிகாரத்துக்கும் வர விரும்புகிறவர்கள், தங்களுடைய தாழ்வுச் சிக்கல்களை ஆரம்பத்திலேயே களைந்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்தத் தாழ்வுச் சிக்கல்களால், சம்பந்தப்பட்ட நபர் மாத்திரமல்ல, அவரை நம்பியவர்களும் நாட்டு மக்களும் பாதிக்கப்பட நேரிடும்.மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் உணர்த்திக் கொண்டிருப்பது அப்படியானதொரு கட்டத்தையேயாகும்.   

மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை (11) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாடாளுமன்றத்தை 14ஆம் திகதி கூட்டியிருந்தால், நாடாளுமன்றத்துக்குள் அடிதடி நிகழ்ந்து, சிலர் மரணிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 - 500 மில்லியன் ரூபாய் வரை, விலை கொடுத்து வாங்கப்படும் நிலை காணப்படுவதாகவும் அதன் காரணமாகவே நாடாளுமன்றத்தைக் கலைத்ததாகவும் நியாயம் பேசுகிறார்.   

அரசமைப்புக்கு முரணாக, ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்த முனைந்த ஒருவர், (அதாவது, சதிப்புரட்சிக்கு ஒத்துழைத்தவர்) அதன் விளைவுகள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பது வேடிக்கையானது.   

அதுவும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களை, தன்னுடைய அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு அலைபேசி வழி அழைக்கும் ஒலிப்பதிவுகள், இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் நிலை காணப்படுவதால், நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக நியாயம் பேசுவது வேடிக்கையானது. மக்கள் எதையும் அறியமாட்டார்கள் என்கிற தோரணையில், நடந்து கொள்வது, உண்மையிலேயே அவரின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கின்றது.   

ஜனாதிபதியாக, நாட்டின் அதியுயர் பீடத்தில் அமர்ந்திருக்கின்ற மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பாலும் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.   

இலங்கையின் ஆட்சியாளர்கள் யார் என்பதை, தேர்தல்களின் வழி மக்கள் தேர்தெடுத்தாலும், அவர்களுக்கான அங்கிகாரத்தைப் பௌத்த பீடங்கள் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, தென்னிலங்கையின் வழக்கம்.   

ஆனால், இலங்கையின் மூத்த பௌத்த பீடங்களான மல்லவத்த - அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர், மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதையே தவிர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி உண்மையானால், இலங்கை வரலாற்றில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தலைவர் ஒருவர், சந்திக்கும் பெரும் அவமானமாகும்.   

நல்லாட்சிக் கோசத்தின் வழி, ஜனாதிபதிப் பதவிக்கு வந்த மைத்திரிபால, அந்தப் பதவியைத் தக்க வைப்பதற்காகக்  கடும்போக்காளர்களோடு கரம் கோர்க்க முயன்றார். ஆனால், அந்தக் கடும்போக்காளர்களின் பிரதான பீடங்களே, அவரை இன்றைக்கு நிராகரித்திருக்கின்றன என்றால், அவரின் செயற்பாடுகளை அங்கிகரித்தால், நாட்டு மக்களின் பரிகசிப்புக்கு ஆளாக வேண்டி வரும் என்கிற நிலையில், மைத்திரிபாலவின் வருகையைக் கண்டு கொள்ளவில்லை. 

அதுமாத்திரமின்றி, ராஜபக்‌ஷக்களோடு உடன்பாடொன்றுக்கு வருவதனூடு, ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற முடியும் என்கிற அவரின் கணக்கும், தற்போது சந்தேகத்துக்குரியதாக மாறியிருக்கின்றது.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரிபால கைப்பற்றியதும், அதற்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ராஜபக்‌ஷக்கள் ஆரம்பித்தார்கள். அதன் வழி, கடும்போக்குச் சிங்கள வாக்குகளைக் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெற்றார்கள். அந்த வாக்குகளில் பெருவாரியானவை, சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளாகும்.   

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இரண்டு நாள்களுக்குள்ளேயே, மஹிந்த ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், 30க்கும் அதிகமானவர்கள் பொதுஜன பெரமுனவில் இணைந்திருக்கின்றார்கள். அதன் தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்‌ஷ இன்னும் சில தினங்களில் ஏற்கக் கூடும்.  

அப்படியான கட்டத்தில், சுதந்திரக் கட்சிக்குள் இன்றைக்கு மிஞ்சியிருப்பவர்களில் ஒரு பகுதியினர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் விசுவாசிகள். அவர்கள் என்றைக்கும், ராஜபக்‌ஷக்களுடனான கூட்டொன்றில் ஒட்டிக்கொண்டு இருக்க மாட்டார்கள். எஞ்சியுள்ள சிலரே மைத்திரிபால சிறிசேனவின் விசுவாசிகள். அவர்களில், மக்களின் பெரும் அபிமானம் பெற்றவர்களாக, யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இந்த நிலையில், இலங்கையை அதிககாலம் ஆட்சி செய்த கட்சியொன்றை, ஏதுமற்ற நிலைக்குக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டிருக்கின்றார்.   

நாடாளுமன்றத் தேர்தலைத் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே எதிர்கொள்ள வேண்டும் என்பதும், அதன் மூலம் அரசாங்கத் தலைமை என்கிற அடையாளத்தை மீண்டும் அடைந்து கொள்வதுமே ராஜபக்‌ஷக்களின் நோக்கமாகும். அதற்காக அவர்கள், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவோடு தமது தந்தையார் டி.ஏ. ராஜபக்‌ஷ இணைந்து ஆரம்பித்த சுதந்திரக் கட்சியைக் குழிதோண்டிப் புதைக்கும் நிலைக்கு வந்திருக்கின்றார்கள். மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று வேறு தெரிவுகள் இல்லை. ராஜபக்‌ஷக்களின் இழுவைக்கு ஆடியே ஆக வேண்டும்.   

ராஜபக்‌ஷக்களிடையே இருக்கின்ற அதிகாரப் போட்டி நிலைமை மாத்திரமே, மைத்திரிபால சிறிசேனவுக்கு இப்போதுள்ள ஒரே ஆறுதல். அதாவது மஹிந்த, தன்னுடைய மகன் நாமலை ஜனாதிபதியாக்கும் வரை, அதிகாரத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கிறார். அந்தக் காலப்பகுதியை, தன்னுடைய சகோதரர்களின் கைகளில் கொடுப்பதை அவர் விரும்பவில்லை.

எனெனில், அதிகாரத்தைக் கொடுத்தால், மீளப்பெறுவது முடியாதது என்கிற ஒரே காரணத்தால் ஆகும். அந்த ஒரு விடயம் மாத்திரமே, மைத்திரிபாலக்கு ஒரே ஆறுதல். அதைக் கொண்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் ஆதரவோடு ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்பதாகும்.   

ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் தற்போதையை நடவடிக்கைகள், அவர் மீதான நம்பிக்கைகளை தவிடி பொடியாக்கியுள்ள நிலையில், ஐ.தே.க சஜித் பிரேமதாஸ போன்ற ஒருவரை, குறிப்பாக கடும்போக்கு சிங்களவர்களிடமும் அபிமானம் பெற்ற ஒருவரை, வேட்பாளராக அறிவிக்குமாக இருந்தால், மைத்திரிபாலவின் எதிர்காலத்துக்கான கனவும் காணாமற்போகும்.   

 இன்றைக்கு, இந்தியா உள்ளிட்ட அயல்நாடுகளும், மேற்கு நாடுகளும் மைத்திரிபாலவைத் தீண்டத்தகாத ஒருவராகப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. அப்படியான தருணத்தில், அவரைக் கடும்போக்கு சிங்களவர் ஆதரித்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடைபெறவில்லை. மாறாக, பௌத்த பீடங்களும், அதன் துணை நிறுவனங்களும், சொந்தக் கட்சியினரும் கூட நிராகரித்திருக்கின்றனர்.   

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகவோ, ஆதரவாகவோ என்ன வகையிலான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கினாலும், அதிவிரைவாகத் தேர்தலொன்றை, நாடு எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கும். அந்தக் கட்டத்தை மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியிருக்கின்றார். அப்படியான நிலையில், அவரும் மக்களை நோக்கி வர வேண்டியிருக்கின்றது.

அப்போது, அவருக்கான பதிலை மக்கள் வழங்குவார்கள். அதை உணர்ந்து கொண்டுதான், மொட்டுக்காரர்கள், தங்களது சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார்கள்.  
இன்னொரு பக்கம், சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இணைந்த கூட்டு அரசாங்கமொன்றை அமைக்க வேண்டிய தேவை, ராஜபக்‌ஷக்களுக்கு இருப்பதாக சிரேஷ்ட கல்வியாளர் ஒருவர் கூறுகிறார்.  

ஏனெனில், தனிக்கட்சியொன்று ஆட்சி அமைக்கும் போது, அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கும் மேலாக அதிகரிக்க முடியாது. அது, சிக்கலை ஏற்படுத்தும். 

அதனால், சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன ஆகியன, தனிக்கட்சிகளாத் தேர்தலை எதிர்கொண்டு, கூட்டு அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்மூலம், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அதன்மூலம், தமது தரப்பினரை திருப்திப்படுத்த முடியும் என்றும் நினைக்கின்றன.

ஆனால், முடிவு எதுவாக இருந்தாலும், அடுத்து வரப்போகும் அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன செல்லாக் காசாகவே இருப்பார். அவரை நம்பிப் பயணிப்பதற்கு யாரும் தயாரில்லை என்பதுதான், தற்போதைய உண்மை.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆப்பிழுத்த-குரங்காக-மாட்டிக்கொண்ட-மைத்திரி/91-225196

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.