Jump to content

உயர் நீதிமன்ற தீர்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி – ரணில்


Recommended Posts

Dr4pbPlX4AIml1u.jpg

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமை நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்கள் முதல் வெற்றியை பெற்றுள்ளனர். நாங்கள் முன்னோக்கிச் சென்று எங்கள் மக்களின் இறையாண்மையை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதேவேளை “நாளை நாடாளுமன்றம் கூடும். எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்” என அலரிமளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

http://athavannews.com/நாட்டு-மக்களுக்கு-கிடைத்/

Link to comment
Share on other sites

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்

903249998m-a-sumanthiran-ட-720x450.jpg

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.

இந்தநிலையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு தொடர்பில் ஆதவனின் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இலங்கையின்-200-வருட-நீதித்த/

சட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞை – ஹக்கீம்

5990750-3x2-940x627-720x450.jpg

சட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞை இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.

இந்தநிலையிலேயே ஹக்கீம் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சட்டத்தினையும்-ஜனநாயகத்/

உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி! – ரிஷாட்

Dr4CaJxVAAAhFxw.jpg

சற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக தாம் கருதுவதாக ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

இந்த உத்தரவின் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை கூறினார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இந்த கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/உச்ச-நீதிமன்ற-தீர்ப்பு-ஜ/

Link to comment
Share on other sites

ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்

ranil.jpg

ஆட்சி அதிகார மோகத்தில் உள்ள மைத்திரி - மஹிந்த கூட்டணியை தோல்வியடைய செய்து  வலுவான ஜனநாயக ஆட்சி முறைமையை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் கொடூரமான நிறைவேற்று அதிகாரத்திற்கு மக்களை பலியாக்குவதா அல்லது ஜனநாயகத்தை மேலும் வலுவாக உறுதிப்படுத்துவதா என்ற நெருக்கடியான தீர்மானத்தை கருத்தில் கொள்ள வேண்டிய நிலையில் நாடு தற்போது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/44422

Link to comment
Share on other sites

தேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்

z_p01-Namal-1.jpg

தேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தல் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், “நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது நீதிமன்றத்தின் இறுதி முடிவு அல்ல. எதற்காக தேர்தலை பிற்போடுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என தெரியவில்லை.

தேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும் இறுதியில் மக்களே முடிவு செய்வார்கள்” என கூறியுள்ளார்.

http://athavannews.com/தேர்தல்களை-பிற்போடுவதில/

Link to comment
Share on other sites

மீண்டும் ரணில் வசம் செல்லும் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பு?; மகிழ்ச்சியில் மக்கள் கொண்டாட்டம்!?

 

சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாளைய தினம் நாடாளுமன்றத்தில் கூடி சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக சூளுரைத்துள்ளார்.

அதேவேளை எந்தவொரு அழுத்தங்கள் வந்தாலும், நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமாகவே செயற்படுகின்றது என்பதை உச்ச நீதமன்றம் இன்றைய தினம் நிரூபித்துக் காண்பித்திருப்பதாகவும், அதற்காக தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் ரணில் விக்கிரமசிங்க அலரிம மாளிகையில் அவசரமாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக தெரிவித்தார்.

அதேவேளை நாடாளுமன்றத்தின் உரிமைகளை பாதுகாக்க சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்ட முயற்சிகளுக்கும் நன்றித் தெரிவித்துள்கொண்டார்.

அத்துடன் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக கிடைத்த இந்த வெற்றிக்காக அனைத்து மதத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, மக்களின் அடிப்படை உரிமைகளை காப்பாற்றுவதற்கான தமது போராட்டத்தின் முதல் வெற்றியினை இன்றைய தினம் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

இதற்கமைய நாட்டில் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், நீதியையும் நிலைநாட்டுவதற்கான தமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்த ரணில், நாட்டின் அதியுயர் சட்டமான அரசியல சாசனத்தை பயன்படுத்தி விளையாட அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல அரசியல் சாசனத்தை தாம் வழிரும்புவது போல் மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியாது என்றும் கூறிய ரணில், இதனையே உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் வழங்கிய அதிரடி தீர்ப்பின் மூலம் நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றின் இன்றைய தீர்ப்பை அடுத்து நவம்பர் 14 ஆம் திகதியான நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவே அறிவித்திருந்தார் என்றும் தெரிவித்துள்ள ரணில் அதற்கமையவே தாங்கள் நாடாளுமன்றில் கூடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர்களது விசுவாசிகள் கூறுவது போல் சபாநாயகர் கரூ ஜயசூரிய தான்தோன்றித் தனமாக நாடாளுமன்றத்தை கூடடவில்லை என்றும் தெரிவித்த ரணில், நாடாளுமன்றம் கூடியதும் பெரும்பாண்மையினை நிரூபிக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மைத்ரி – மஹிந்த தரப்பினரின் நடவடிக்கைகளால் பெரும்பாண்மையானது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த ரணில், அதை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் துணையாக இருப்பதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

அனைத்து அரச பணியாளர்களையும், அரசியல் சாசனத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை மைத்ரி – மஹிந்த கூட்டணியின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக நவம்பர் 15 ஆம் திகதியான நாளை மறுதினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை லிபட்டன் சுற்றுவட்டத்தில் நடத்தவுள்ளதாகவும் ரணில் அறிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/109105?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

அரசியலமைப்பை பயன்படுத்தி யாரும் உதைப்பந்தாட்டம் விளையாடமுடியாது: ரணில்

ranil-2-720x450.jpg

 

 

நாட்டின் அரசியல் யாப்பை மீறி யாராலும் செயற்பட முடியாதென்பதை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே அரசியல் யாப்பை விளையாட்டாக கருதி உதைப்பந்தாட்டம் விளையாடக்கூடாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றை கலைக்கும் வகையிலான ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பின்னர், அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”மக்களின் இறையாண்மைக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. அத்தோடு, அரசியல் யாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச ஒழுக்க விழுமியங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.

அரசியல் யாப்பை கிழித்தெறிய முற்பட்டபோது, அரசியல் யாப்பை உதைத்தெறிந்து செல்ல முடியாதென இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது ஆட்சேபங்களை தெரிவிக்க நீதமன்றம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. நாம் அதற்குரிய காரணங்களை தெரியப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

நாடாளுமன்றின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றியமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவரின் செயற்பாடுகள் காரணமாகவே நாட்டில் இன்று ஜனநாயகம் காணப்படுகிறது.

அடுத்ததாக இதற்காக உழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். மும்மத தலைவர்களுக்கும் எமது நன்றிகள்.

இவை அனைத்தையும் மக்களின் அடிப்படை உரிமையையும் அரசியல் யாப்பை பாதுகாக்கவும் முனைந்தோம்.

அரசியலமைப்பை பயன்படுத்தி யாரும் உதைப்பந்தாட்டம் விளையாடமுடியாது. அதேபோல் அரசியல் யாப்பை ஒருவர் நினைத்தவாறு மாற்ற முடியாது. அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. இது தற்காலிக வெற்றி மாத்திரமே. எமது தொடர் போராட்டத்தை வெற்றிகொள்ள வேண்டும். நாடாளுமன்றில் பெரும்பான்மையை காண்பிப்போம். அதற்கமைய நாளை நாடாளுமன்றில் ஒன்றுகூடுவோம். நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டவில்லை. மாறாக ஜனாதிபதியே கூட்டியுள்ளார். எனவே நாளை நாடாளுமன்றில் எமது அதிகாரத்தை காட்டுவோம். ஆகவே அரச ஊழியர்களை அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செயற்படுங்கள். நாடாளுமன்றத்தை மதித்து செயற்படுகள். சபாநாயகரை பொலிஸார் சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள முடியும். இந்த வெற்றியை கொண்டாட 15ஆம் திகதி லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

http://athavannews.com/அரசியலமைப்பை-பயன்படுத்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியால் திண்டாடிய கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இதையே இவர் தமிழர்களின் பிரச்சனைக்காக இப்படி வழக்குகள் நடாத்த முன்வரவில்லை.

Link to comment
Share on other sites

5 hours ago, ஈழப்பிரியன் said:

தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியால் திண்டாடிய கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இதையே இவர் தமிழர்களின் பிரச்சனைக்காக இப்படி வழக்குகள் நடாத்த முன்வரவில்லை.

தமிழர்களுக்கு பல்வேறு சவால்கள் வந்தபோது அமைதிகாத்து தமிழர்களை ஏமாற்றிய சுமந்திரன் கும்பல் ரணிலுக்கு இக்கட்டு வந்த போது விரைவாகவும் ஆவேசமாகவும் செயற்பட்டது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இது சுமந்திரனின் எடுபிடி அரசியலுக்கு இன்னொரு ஆதாரமாக அமைகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, போல் said:

தமிழர்களுக்கு பல்வேறு சவால்கள் வந்தபோது அமைதிகாத்து தமிழர்களை ஏமாற்றிய சுமந்திரன் கும்பல் ரணிலுக்கு இக்கட்டு வந்த போது விரைவாகவும் ஆவேசமாகவும் செயற்பட்டது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இது சுமந்திரனின் எடுபிடி அரசியலுக்கு இன்னொரு ஆதாரமாக அமைகிறது.

அட போங்க ஐயா..

எதிர்க் கட்சி தலைவர் ஐயாவின்ட, பென்ஸ் கார், அரச வீடு.... வயசு போன காலத்தில அலவன்சுகள்.... போயிடும் எண்டால் சும்மாவே....

Link to comment
Share on other sites

41 minutes ago, Nathamuni said:

அட போங்க ஐயா..

எதிர்க் கட்சி தலைவர் ஐயாவின்ட, பென்ஸ் கார், அரச வீடு.... வயசு போன காலத்தில அலவன்சுகள்.... போயிடும் எண்டால் சும்மாவே....

இல்லை நாதமுனி!

சுமந்திரனின் அண்மைக்கால முயற்சி சம்மந்தனை தலைவர் பதவியிலிருந்து ஓரங்கட்டுவது!

அதற்கான சதித்திட்டங்களை அவர் முன்னெடுக்க ஆரம்பித்த வேளையில் தான் மைத்திரி-மகிந்த கூத்து ஆரம்பமாகியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அட போங்க ஐயா..

எதிர்க் கட்சி தலைவர் ஐயாவின்ட, பென்ஸ் கார், அரச வீடு.... வயசு போன காலத்தில அலவன்சுகள்.... போயிடும் எண்டால் சும்மாவே....

சரி ஒரு கதைக்கு மீண்டும் ஒரு தேர்தல் இப்போது வந்திருந்தால் தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் எப்படி இருந்திருக்கும்?

மக்கள் மத்தியில் எப்படி போய் நிற்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, போல் said:

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 இடைக்கால தடையை எப்படி வெற்றியாக கருதமுடியும். அல்லது செய்தி எனக்கு விளங்கவில்லையா? :oO:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு மீண்டுமொரு முறை....எழுதப்படுகின்றது!

இலங்கையின் சுதந்திர முன்னெடுப்புகளை...முன்னின்று நடத்தி...இலங்கைக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தவர்..சேர். பொன். இராமநாதன்!

அவர் விட்ட ஒரு மாபெரும் தவறு...சிங்களவர்களும்...தமிழர்களும் சேர்ந்து வாழலாம் என நம்பியது!

அதன் பின்னர்....பண்டா செல்வா ஒப்பந்தம்....!

திரு செல்வநாயகம் விட்ட தவறு......பண்டாரநாயக்காவை நம்பியது!

இப்போது .....திரு. சுமந்திரன் அவர்கள்.....ரணில் விக்கிரமசிங்காவுக்கு....ஒரு வழி சமைத்துக் கொடுத்திருக்கிறார்!

அவர் விடும்....தவறு....கூட....ரணிலை...நம்புவது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.