Jump to content

இலங்கை அரசியல் சிக்கல்: "ரணில், ராஜபக்ஷவை கட்டுப்படுத்தும் உலக சக்திகள்"


Recommended Posts

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டவை.

_104276350_-2.jpg

சட்டத்துறையினை சார்ந்தவர் என்ற வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்?

பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமாணி அறிவிப்பினை வெளியிட்டிருப்பது வெளிப்படையாகவே நாட்டின் அரசியல் அமைப்பிற்கு முரணான நடவடிக்கையாகும்.

பாராளுமன்ற கலைப்பானது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். ஜனாதிபதியின் சட்டத்தரப்புகள் பாராளுமன்றத்தை கூட்டுவது, கலைப்பது மற்றும் ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை கூறும் உறுப்புரை 33 இரண்டு சியை குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

ஆனால் உறுப்புரை 70 உப பிரிவு ஒன்றில் உள்ள காப்பு வாசகத்தில் மிக தெளிவாக பாராளுமன்றம் முதலாவதாக கூட்டப்பட்டு நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றம் கலைக்கப்பட முடியாது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றபட்டு ஜனாதிபதியை கேட்டுக்கொண்டால் மட்டுமே பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே மேற்படி இரு சட்டப்பிரிவுகளையும் ஒன்றாகத்தான் படித்து பொருள்கோடல் செய்ய வேண்டும். பொதுவாக அரசியல் அமைப்பில் முறையற்ற அல்லது தெளிவற்ற விடயங்கள் இருக்க கூடும். ஆனால் இந்த பிரிவில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை தனது தற்துணிவின் பால் கலைக்க முடியாது என்பதில் எந்த மயக்கங்களும் இல்லை.

_104276352_gettyimages-1059795186.jpg

பாராளுமன்றம் கலைப்பு உட்பட அரசியல் அமைப்பினை மீறிய ஜனாதிபதியின் நடவடிக்கை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டால் நீதிமன்றம் எவ்வாறான தீர்ப்பினை வழங்கும்?

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிதிகளை மீறிய செயல் என்று ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதாக கூறுகின்றன.

நீதிமன்றம் பாராளுமன்ற கலைப்பு விடயம் விதிமுறைகளுக்கு முரணானது என்ற ஒரு முடிவினைத்தான் எடுக்கும் என்பது எனது திடமான கருத்தாகும்.

அவ்வாறான தீர்ப்பு வரும் போது மீண்டும் பாராளுமன்ற கூட்டப்படும், பாராளுமன்ற கலைப்பு அறிவிப்பு ரத்துச் செய்யப்படுவதோடு, தேர்தலுக்கான அறிவிப்பும் ரத்துச் செய்யப்படும்.

மேலும் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவினை நீக்கிய விடயங்கள் தொடர்பிலும் கேள்விக்கு உட்படுத்துவார்கள்.

அத்தோடு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய வர்த்தமாணி அறிவித்தல், அமைச்சு நியமனம் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கேள்விக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்ட போது அவர் நீதிமன்றத்தை நாடாதிருந்தமைக்கான காரணம் என்னவாக இருக்கும்?

பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்திற்கு ரணில் விக்கிரம சிங்க சென்றிருந்தால், அதன் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் ரணில் விக்கரமசிங்க வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்திருப்பார்.

அந்த காலப்பகுதிக்குள் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜபக்ச வாங்கிவிடுவார் என்ற அச்சத்தில்தான் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் அதில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் சொல்லிவந்தார்.

தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூடுவதற்கான சந்தர்ப்பங்கள் அடியோடு இல்லாத நிலையில்தான் காலம் தாள்த்தினாலும் நீதிமன்றத்தை நாட விரும்பியுள்ளார்.

அரசியல் அமைப்பு மீறப்பட்ட நிலையில், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வு எந்த வகையில் சாத்தியமாகும் என்று எண்ணுகின்றீர்கள்?

தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு நாட்டிற்குள் அரசியல் அமைப்பு ரீதியில் தீர்வு ஒன்று வேண்டும் என்று கோரி நிற்கும் நிலையில் தொடர்ச்சியாக அரசியலமைப்பு மீறப்படுகின்றது என்பது எதிர்காலத்தில் அரசியல் அமைப்பு ரீதியில் தீர்வு ஒன்று எட்டப்பட்டாலும், அதன் நிலைத்தகு தன்மை தொடர்பில் கேள்வி எழும் சம்பவமாக ஜனாதிபதியின் தற்கால செயற்பாடு உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக அரசியல் அமைப்பினை மீறும் நடவடிக்கைகயில் ஈடுபட்டு வருவதற்கான காரணம் எதுவாக இருக்கும்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த தேர்தலில் சிங்கள மக்களின் பொரும்பான்மையான வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்ற தாழ்வு மனப்பாங்கில் உள்ள ஒருவர்.

இந்த நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு தலைவராகவும், மஹிந்தவிற்கு ஒப்பான தலைவர் என்ற நிலைக்கு தான் வர வேண்டும் என்றும் அடுத்த தேர்தலிலும் தான் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு அச்சம் என்று மஹிந்த தரப்பினரும், அரசியல் அமைப்பினை மீறிவிட்டார்கள் என்று ரணில் தரப்பினரும் கூறும் நிலையே இப்போது உள்ளது.

அரசியல் அமைப்பினையும் ஜனநாயகத்தையும் மோத விடுகின்ற நிலையே உள்ளது.

தற்கால நெருக்கடி நிலைக்கும் நிறைவேற்று அதிகார முறமையில் மாற்றம் கொண்டுவந்தமைக்கும் இடையில் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா?

19 ஆவது திருத்தத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்தார் என்பது தெரிந்த விடயம். இதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்து அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரங்களை வழங்குவதாகவே அத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

தான் எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியால் பதவியில் இருந்து தூக்கி எறியப்படலாம் என்பதை ரணில் முன்னுனர்ந்தே அத்திருத்தத்தை கொண்டுவந்திருந்தார்.

வரலாற்றில் அரசியல் கட்சிகள் தமது நலன் சார்ந்தே அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவது வழமையாகும்.

அரசியல் நெருக்கடியில் பூகோள அரசியல் எந்த வகையில் செல்வாக்கு செலுத்துகின்றது?

இந்த விடயம் தொடர்பில் சீனா மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி மாற்றத்திற்கு உதவியாக உள்ளது. அமெரிக்காவும், இந்தியாவும் ரணில் விக்கரமசிங்கவின் பக்கம் நிற்கின்றன. வழமைக்கு மாறாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வெளிப்படையாக அமெரிக்கா அறிவிக்கின்றது.

நாடுகள் ஒரு விடயத்தை வெளிப்படையாக சொல்வது குறைவு, இந்த விடையத்தில் அமெரிக்கா வெளிப்படையாகவே பிதமர் நியமனம் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டிருப்பதை அவதானித்து பார்க்க வேண்டும்.

தொடர்ந்து ராஜபக்ச, ரணில் ஊடாக பூகோள அரசியலை வெளியுலக சக்திகள் நடத்துகின்றன.

தற்போது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்திருக்கும் ராஜபக்சவினை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்க இந்தியாவும், அமெரிக்காவும் எந்த அளவிற்கு செயற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதன் விளைவாக பொருளாதார தடை , போக்குவரத்து தடை என்பவற்றை கொண்டுவருவார்களா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

போர்குற்ற காலத்தில் இவ்வாறான தடைகளை கொண்டுவர வேண்டும் என்று கேட்ட போது அமைதியாக இருந்த அமெரிக்கா தற்போது அதனை கொண்டுவருவது தொடர்பில் சிந்திப்பது யாருடைய நலன் அங்கு கருதப்படுகின்றது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-46179678

Link to comment
Share on other sites

சுய மரியாதையை காத்துக்கொள்ள மஹிந்த பதவி விலக வேண்டும் – மங்கள

mangala-1.jpg

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என மங்கள சமரவீர கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அதில் மேலும் “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சுய-மரியாதையை-காத்துக்கொ/

Link to comment
Share on other sites

இலங்கையில் மதிப்பீடுகளை மேற்கொள்ள தயாராகும் ஐரோப்பிய ஒன்றியக் குழு!

EU-720x450.jpg

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை குறித்து மதிப்பீடு செய்யும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் இக்குழு இலங்கைக்கு விஜயம் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய குழுவொன்று இவ்வருடத்தின் நடுப்பகுதியிலும் இலங்கைக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.

குறித்த ஆய்வின் அடிப்படையிலான அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெறும் பயனாளி என்ற அடிப்படையில், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 சர்வதேச மரபுகளை திறம்பட செயல்படுத்துவதற்கு இலங்கை உறுதிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஐரோப்பிய-ஒன்றியக்-குழு-இ/

Link to comment
Share on other sites

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆதரிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி!

mahinda-and-subramanyan-swamy-720x450.jpg

இலங்கை நாடாளுமன்றை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை சரியானதென பா.ஜ.க.வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை தொடர்ந்து அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருந்தால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்காதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையானது, ஜனநாயகத்தின் தார்மீகத்தை மக்கள் தீர்மானிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/நாடாளுமன்றம்-கலைக்கப்ப-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, போல் said:

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆதரிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி!

mahinda-and-subramanyan-swamy-720x450.jpg

இலங்கை நாடாளுமன்றை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை சரியானதென பா.ஜ.க.வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை தொடர்ந்து அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருந்தால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்காதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையானது, ஜனநாயகத்தின் தார்மீகத்தை மக்கள் தீர்மானிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/நாடாளுமன்றம்-கலைக்கப்ப-3/

Swamy+PC+-+Copy.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருந்தால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்காதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழருக்கு எந்த ஒரு உரிமையையும் வழங்காத நாடாளுமன்றம் கூடினால் என்ன கலைந்தால் என்ன? எங்கேயாே இருக்கிற  இவர் ஏன் குத்தி முறியிறார்?. எள்ஏன் காயுது எண்ணெய்க்காக எலிப்புளுக்கை  ஏன் காயுது கூட இருந்த குற்றத்திற்காக

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.