Jump to content

பாராளுமன்று கலைப்புக்கு இடைக்காலத் தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

SC stays proclamation dissolving parliament.

http://www.dailymirror.lk/article/SC-stays-proclamation-dissolving-parliament--158295.html

அய்யோ சிறிசேன

தீடீரென சன்னதம் கொண்டு ஆடி, நாட்டினைப் இரு வாரங்களாக கடும் பரபரப்பில் வைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாராளுமனற கலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

நாளை நாடாளுமன்றம் கூடுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், முன்னாள் பாராளுமனற உறுப்பினர்கள், மீண்டும் இந்நாள் உறுப்பினர்களான அதிசய அரசியல் நிகழ்வு  இலங்கையில் நடந்துள்ளது.

பதவிப் பேராசையால், மைத்திரிபலாவை மடக்கி, கையாண்ட மகிந்தவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப் படுகின்றது.

நாடாளுமன்றம் மீண்டும் கூடினால், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் மகிந்த பதவி  இழப்பார்.

மீண்டும் ஒருமுறை பதவி கிடைக்கும். அதுவும் இவ்வாண்டு முடிவுக்குள் நடக்காவிடில், இனி இல்லை என்ற சோதிடத்தினை மீண்டும் நம்பி, ஒரு வருடம் பொறுத்திருக்க முடியாமல், இப்படி பரிசுகேட்டினை சந்தித்துள்ளார்.

நான்கு அரை ஆண்டுகள் பின்னரே ஜனாதிபதி சட்டரீதியாக கலைக்க முடியுமாயினும்,  அந்த நான்கு அரை ஆண்டுகள் கழிய முன்பே, ஜனாதிபதி தேர்தல் நடந்து, புதிய ஜனாதிபதி பதவியில் இருப்பார். அது மைத்திரியாக இருக்க முடியாது.

https://tamil.oneindia.com/news/colombo/sri-lanka-supreme-court-stays-the-implementation-the-gazette-which-dissolved-the-parliament-334133.html

மேலதிக தகவல்: சுஜ ஆக்கம்

Link to comment
Share on other sites

வெளியாகியது நாடே எதிர்பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!!!

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

இச் சம்பவத்தின் காரணமாக நாட்டில் யார் பிரதமர்? என்ற குழப்ப நிலை நிலவி வந்த நிலையில் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு வர்த்தமானியில் கையெழுத்திட்டார்.

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி 12 மனுக்களும் இவ் விடயம் தொடர்பாக 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானதே என கூறி 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

;குறித்த மனு விசாரணையானது உச்ச நீதிமன்றில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/44416

Link to comment
Share on other sites

இறுதியில் சர்வதேச அழுத்தங்களுக்கு பயந்தது சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத கட்டமைப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுமக்களுக்கு கிடைத்த பெருவெற்றி என ரணில் டீவீட்டர் செய்தி அனுப்பி உள்ளார்.

http://www.dailymirror.lk/article/People-won-their-first-victory-Ranil-158296.html

கொழும்பு வெடி சத்தங்களினால் அதிரும் அதேவேளை, குழப்பங்களை, கலவரங்களை தடுக்கும் நோக்கில், ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல்கினால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.