Jump to content

தமிழத்தேசியத்துடன் முந்தானை விரித்து படுத்தெழும்ப ஆயத்தமாகும் விபச்சாரிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை மையப்படுத்தி வடக்கு கிழக்கில் தற்போது பெரும் அரசியல் தகிடுதாளங்கள் தொடங்கியுள்ளன. வடக்கு, கிழக்கு மக்களுக்கு உள்ள தமிழ்த்தேசியப்பற்றையும் புலிகள் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு உள்ள செல்வாக்கையும் வைத்து அதனை மூலதனமாக்கி தமக்கான வாக்கு வேட்டை நடாத்தவே தற்போதய தமிழ் அரசியல்வாதிகள் முன்னிலையில் நிற்கின்றார்கள்.

வடக்கில் தற்போது 3 அணிகள் தமிழ்த்தேசியத்தையும் புலிப்பபுராணத்தையும் வைத்து களமிறங்க ஆயத்தமாகியுள்ளன. வீட்டுச்சின்னம் மற்றும் சைக்கிள், இன்னொன்று தற்போது புதிதாய் அவதாரம் எடுத்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அணி என்பனவாகும்.

தற்போது முஸ்லீம் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய பாதையில் பயணிக்க ஆயத்தமாகி வரும் சமயத்தில் தமிழ்த் தரப்புக்கள் பல்வேறு துண்டங்களாக பிரிந்து சிதறிப் போயுள்ளன. குறிப்பாக தமிழ்த்தேசியத்தை மையப்படுத்தி அரசியலில் குதித்தவர்களது அந்தரங்கத்தை தற்போது அனைவரும் பார்க்க கூடியதாக உள்ளது. வடக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த மாகாணசபைக்குள்ளேயே இவர்களின் வண்டவாளங்கள் வெளிப்பட்டன.

அதிகாரங்கள் அற்ற வடக்கு மாகாணசபைக்குள்ளேயே யார் பெரியவர், யார் அதிகாரம் மிக்கவர் , யார் அதிக ஊழல் செய்தவர் என்று தமக்குள்ளேயே அடிபட்டவர்கள் தற்போது வெளியே வந்துள்ளார்கள். இதை மக்கள் பார்க்காமல் இருப்பார்கள் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்துடன் உண்ணி போல் ஒட்டியிருந்து தமக்கு மட்டுமே நன்மைகளைப் பெற்ற தமிழ்த்தேசியநாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றார்கள். இந்த உறுப்பினர்கள் இவ்வளவு காலமும் தமிழர்களுக்கு என்ன நன்மைகளைப் பெற்று கொடுத்தார்கள் என்று அவர்கள் கூறுவார்களா? குறைந்தது ஒரு அரசியல்கைதியையாவது அவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்களா? ஒன்றுமே அவர்கள் செய்து முடிக்கவில்லை. இந் நிலையில் நாடாளுமன்றில் ரணிலுக்கு ஆதரவாக எதற்காக குரல் கொடுக்க இருந்தார்கள் என்பதை வாக்களிக்கப் போகும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.  அவர்கள் ரணில் பக்கம் நிற்பதற்கான முழுக் காரணம் என்னவென்றால் ரணில் தரப்பால் கொடுக்கப்படவிருந்த பல கோடிரூபா பேரத்தொகையே காரணமாகும்.

தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. இனி இவர்களுக்கான அந்த பேரத்தொகை கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே.

இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரப்போகின்றது. தற்போது அதற்கான ஆயத்தங்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் மும்முரமாக செய்து கொண்டிருப்பார்கள். இந் நிலையில் எமக்கு கிடைத்த தகவல்களின் படி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முன்னர் போட்டியிட்ட அதே முகங்களே மீண்டும் களமிறங்கப் போகின்றார்கள். சைக்கிள் கட்சியிலும் அதே நிலைதான் என தெரியவருகின்றது. இதே வேளை முதலமைச்சர் அணி என்ற ஒன்று கிளம்பியுள்ளது. அந்த அணியில் அனந்தி, அருந்தவராஜா, ஐங்கரநேசன், சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளார்கள் என அறியமுடிகின்றது.

வட பகுதியில் தற்போது கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் இருக்கும் விசனத்தை மூலதனமாகக் கொண்டு சைக்கிள் அணியும் முதலமைச்சர் அணியும் களமிறங்கினால் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது பெறலாம் என அரசியல்அவதானிகள் பலரும் கருத்துத் தெரிவித்திருந்த வேளையில் அந்த இரு அணியும் சேருவதற்கு வாய்பே இல்லை என் நிலை வந்துள்ளது. கூட்டமைப்பு உட்பட தமிழ்த்தேசியத்தை முன்னிலைப்படுத்தி போட்டியிடப் போகும் இவ்வாறானவர்கள் தேர்தல்காலத்தில் கூட ஒன்றிணையவில்லை. அதன் பினர் இவர்கள் தனித்தனியே வென்று நாடாளுமன்றம் சென்றால்கூட தமிழர்களுக்கு ஆதரவாக வரும் வாய்ப்புகளை ஒ்ன்றாக நின்று பெற்றுக் கொடுப்பார்களா??

எழிலனின் மனைவி என்ற ஒரே ஒரு பெயரை வைத்து வடக்கு மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பாக வென்று மாகாணசபை சென்ற அனந்தி தன்னைத் தேர்ந்தெடுத்தவர்களுக்காக என்ன செய்தார்? தனது அந்தரங்ககாரியதரிசியாக ஒரு முஸ்லீம் இளைஞனையே வைத்திருந்த அனந்திக்கு அந்த பதவிக்கு தமிழ் இளைஞர்கள் கிடைக்காமல் போய்விட்டார்களா?

அனந்தி மகளீர் அமைச்சராக இருக்கும் போது இறுதியுத்தத்தில் ஆயுதப்படைகளால் கேவலப்படுத்தப்பட்ட பெண்கள் தொடர்பான விபரங்களை பெற்றாரா? அவற்றை பெற்று அவர்களுக்கு நீதி கிடைக்க வழி சமைத்தாரா? எதுவுமே அனந்தி செய்யாது தனக்கு சொத்துத் சேர்ப்பதிலேயு குறியாக இருந்தார்.

அதே போலவே ஐங்கரநேசன் பெரும் ஊழல் செய்தது தொடர்பாக வடக்கு மாகாணசபையில் பெரும் களோபரம் உருவாகி மாகாணசபையே ஐங்கரநேசனால் அழிந்து போகும் நிலையையும் உருவாக்கியவர் அவர். முன்னாள் ஆயுததாரியான சுரேஸ் தற்போது எந்தவித மக்கள் செல்வாக்கும் இல்லாது இருக்கும் நிலையில் முதலமைச்சருடன் ஒட்டினாலேயே தனக்கு விடிவு காலம் என்று அறிந்து அவருடன் ஒட்டினார்.

இ்வ்வாற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மாவை, சித்தார்த்தன், சுமந்திரன்,சரவணபவன் போன்றோரும் நாடாளுமன்றிலோ அல்லது வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டத்திலோ இறுதி யுத்தத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட யுத்த மனித உரிமை மீறல்கள்இன அழிப்புக்கள் தொடர்பாகவோ மூச்சுக்கூட விடவில்லை.

இவ்வாறான நிலையில் இனிவரும் நாட்களில் உங்கள் வீடுகளுக்கு கை கூப்பி கும்பிட்டுக் கொண்டு வரும் தமிழ்த்தேசிய அரசியல் போலிகளை நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமது பதவிக்கும், புகழுக்கும் இவர்கள் தமிழ்த்தேசியத்துடன் முந்தானை விரித்துப் படுக்கவே இவர்கள் ஆயத்தமாவார்கள்.

16693-1-9dab130956f9716f052f07ca50bfa896.jpg

http://www.jaffnaboys.com/news/16693

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.