Jump to content

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம்: தீர்மானம் மிக்க முடிவு இன்று!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

supreme-court-and-parliament-720x450.jpg

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம்: தீர்மானம் மிக்க முடிவு இன்று!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐ.தே.க., தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 10 மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டதோடு, எஞ்சியவை இன்று பரிசீலிக்கப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன. அத்தோடு, இன்றைய தினம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது விளக்கத்தை முன்வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது, நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயற்பாடு 19ஆவது அரசியலமைப்பிற்கு முரணானதென நீதிமன்றில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நான்கரை வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னர் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் 19ஆவது அரசியலமைப்பில் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

ஏனைய மனுதாரர்களின் சட்டத்தரணிகளும் ஜனாதிபதியின் செயற்பாட்டை விமர்சித்து தமது வாதங்களை முன்வைத்தனர். இவற்றை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், சட்டமா அதிபரின் விளக்கத்தை கோரியுள்ளது. அதன் பிரகாரம் இன்று ஏனைய மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு, உயர்நீதிமன்றின் வியாக்கியானம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடாளுமன்ற-கலைப்பு-தொடர்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

supreme-court-720x450.jpg

உயர்நீதிமன்ற வளாகத்தில் STF பாதுகாப்பு! – விசாரணைகள் ஆரம்பம் (2ஆம் இணைப்பு)

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைகள் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளன.

பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.  அத்தோடு, இன்றைய தினம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது விளக்கத்தை முன்வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினைச் சேர்ந்த பெருமளவானவர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம்: தீர்மானம் மிக்க முடிவு இன்று!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐ.தே.க., தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 10 மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டதோடு, எஞ்சியவை இன்று பரிசீலிக்கப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன. அத்தோடு, இன்றைய தினம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது விளக்கத்தை முன்வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது, நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயற்பாடு 19ஆவது அரசியலமைப்பிற்கு முரணானதென நீதிமன்றில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நான்கரை வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னர் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் 19ஆவது அரசியலமைப்பில் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

ஏனைய மனுதாரர்களின் சட்டத்தரணிகளும் ஜனாதிபதியின் செயற்பாட்டை விமர்சித்து தமது வாதங்களை முன்வைத்தனர். இவற்றை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், சட்டமா அதிபரின் விளக்கத்தை கோரியுள்ளது. அதன் பிரகாரம் இன்று ஏனைய மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு, உயர்நீதிமன்றின் வியாக்கியானம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடாளுமன்ற-கலைப்பு-தொடர்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.