Jump to content

எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

à®à®¤à¯ à®à®°à®¿à®¯à®¾ à®°à®à®¿à®©à®¿ à®à®¾à®°à¯

எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில்!

ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா என கடுப்பாகி நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நன்றாகவே தெரியும். அட வரலாறு தெரியலன்னா கூட கடந்த 2 நாட்களாக தினசரி செய்தித்தாள் படிச்சிருந்தாலாவது யார் இந்த 7 பேர் என்ற விஷயம் தெரிந்திருக்கும்.

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு 2016ம் ஆண்டு அனுப்பப்பட்டது. அந்த மனுவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பவே இல்லை என்ற உண்மை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது.

முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த 7 பேரின் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தமிழக அரசியலில் தொடர்ந்து பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவது 7 பேரின் விடுதலை விவகாரம்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம் 7 பேரின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த 7 பேர் என்று கேட்டிருக்கிறார். ராஜீவ் கொலை குற்றவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரைவிடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லையே அது பற்றிய உங்களது கருத்து என்று கேட்டதற்கு நான் இப்போது தான் வருகிறேன் எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்கிறார்.

அதான் சொன்னேன்ல தெரியாதுன்னு:  மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னர் மீண்டும் இது பற்றி இன்னொரு செய்தியாளர் கேட்டார். அதான் தெரியாதுன்னு சொன்னேனே என்று கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு கோபத்தை காட்டினார் ரஜினி.

7 பேர் விடுதலைக்கான தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தெரியாது என்று சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், எந்த 7 பேர் விவகாரம் என்று கேட்டதை தான் எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை.

தமிழகத்தில் சிறு பிள்ளைக்குக் கூட தெரியும் 7 பேர் விடுதலை என்றால் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களைத் தான் சொல்கிறார்கள் என்று. ஆனால் தமிழகத்தில் நல்ல தலைவர் இல்லை, தலைவருக்கு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும் ரஜினி இதைத் தெரியாது என்று சொல்கிறாரே. அரசியல் தலைவராக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் ரஜினிக்கு அது தெரியாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை, தமிழகத்தின் முதலமைச்சராக வர நினைப்பவர் இப்படி இருந்தால் எதிர்காலத்தில் இது யாருக்கு ஆபத்தாக இருக்கும்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-about-rajiv-assasination-convicts-release-334046.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா என கடுப்பாகி நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

அதுதானே ஐயா வேறு கிரகத்திலிருந்தெல்லே குதித்திருக்கார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம் 7 பேரின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த 7 பேர் என்று கேட்டிருக்கிறார். ராஜீவ் கொலை குற்றவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரைவிடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லையே அது பற்றிய உங்களது கருத்து என்று கேட்டதற்கு நான் இப்போது தான் வருகிறேன் எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்கிறார்.

இதுகளையெல்லாம் தமிழ்நாட்டுச்சனம் தலையிலை வைச்சு கொண்டாடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

symbol-of-rajinikanth-political-party-fa

இறை நிலையில்  இருந்து நிகழ்காலத்திற்கு வர ரைம் எடுக்கும் கண்டியளோ ..அதற்குள் மைக்கை நீட்டி அலப்பறை செய்யப்படாது.. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியை கதற விடும் பவர் ஸ்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் கௌதமன்... ரஜனியை  பற்றிய கருத்தை தெரிவிக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாடும் சனத்திற்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®®à¯à®à®¿à®¤à®¾à®©à¯ பலà®à®¾à®²à®¿

ரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்!

ராஜிவ் காந்தி கொலையாளிகள் மற்றும் பாஜக குறித்த தனது பிரஸ் மீட்டுக்கு இன்று செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் குறித்தும், பாஜக குறித்தும் ரஜினிகாந்த் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.

7 பேர் என்றால் யார் என்று கேட்ட ரஜினிகாந்த், எதிர்க்கட்சிகள், பாஜகவை ஆபத்தான கட்சி என்று கூறினால், அப்படித்தானே இருக்கும் என்று கிண்டலாக பதில் அளித்தார்.

இதனிடையே, போயஸ் இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அவர் கூறியதாவது: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் பற்றி ரஜினிகாந்த்துக்கு தெரியாது என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர். தெரியும் என்றால் தெரியும் என்பேன், தெரியாது என்றால் தெரியாது என்பேன். இதில் வெட்கம் இல்லை. பேரறிவாளனிடம் 10 நிமிடம் போனில் பேசி ஆறுதல் கூறியவன்தான் இந்த ரஜினிகாந்த். இந்த வழக்கு பல நீதிமன்றங்களுக்கு சென்று வந்துள்ளது. 27 ஆண்டுகள் அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டனர். போதும். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

எல்லா கட்சிகளும் பாஜகவை தோற்கடிக்க ஒன்றாக சேர்ந்துள்ளார்களே, அந்த கட்சி அவ்வளவு ஆபத்தான கட்சியா என்று கேட்டனர். எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்து கொண்டுள்ளார்கள். அப்படியானால் பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சிதானே? பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.

இப்போது எல்லாம் வீடியோவாக எடுக்கிறார்கள். எனவே திரித்து செய்தி வெளியிடாதீர்கள். பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்ற எனது கருத்தை நான் இப்போது சொல்ல முடியாது. நான் முழுமையாக இன்னும் அரசியலில் இறங்கவில்லை. அன்றாட நிகழ்வுகளுக்கு நான் கருத்து கூற முடியாது. அதை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். இதே கேள்வி-பதிலை சொல்லி கொண்டிருந்தால் மக்கள் கடுப்பாகிவிடுவார்கள்.

10 பேர் எதிர்த்துக்கொண்டு ஒருவருக்கு எதிராக யுத்தத்திற்கு சென்றால், யார் பலசாலி? அந்த 10 பேரா, அல்லது ஒருவரா? இதைவிட கிளியராக நான் எதையும் சொல்ல முடியாது? ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டுப்போனது என அமைச்சர் கூறியுள்ளார். அவர் பதவிக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும். பதிலுக்கு நான் அதே போன்ற கேள்வியை கேட்டால் நன்றாக இருக்காது. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் நடித்த 2.O மற்றும் பேட்ட ஆகிய இரு திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ள நிலையில், சர்ச்சைகளை தவிர்க்க அவர் முற்பட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-meet-the-press-clarification-334094.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவி முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க பார்க்கிறாரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க பார்க்கிறாரே?

 ரஜனிகாந்த் சுய சிந்தனை இல்லாதவர்.

யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை ஊடகங்கள்  பள்ளிகளுக்கு சென்று படிக்க வேண்டும்.

குரங்கிட்டை மூத்திரம் கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம்....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 ரஜனிகாந்த் சுய சிந்தனை இல்லாதவர்.

யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை ஊடகங்கள்  பள்ளிகளுக்கு சென்று படிக்க வேண்டும்.

குரங்கிட்டை மூத்திரம் கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம்....:grin:

வாவ்....  ரஜனிக்கு  ஏற்ற நல்ல அருமையான பழமொழி. :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.