Jump to content

தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன - பிபிசி ஆய்வு #BeyondFakeNews


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன - பிபிசி ஆய்வுபடத்தின் காப்புரிமை WILLIAM WEST/AFP/Getty Images

"அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது புதிய 2000 ரூபாய் நோட்டு, உலகின் சிறந்த நோட்டாக சிறிது நேரத்துக்கு முன்பாக யுனெஸ்கோவால் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது."

இம்மாதிரியான செய்திகள் நமது மொபைல் ஃபோன்களின் மூலம் வாட்சப்பில் அதிகம் பகிரப்படுகிறது. இதில் பெரும்பாலான செய்திகள் போலியானவை. ஆனால் இதை பகிர்பவர்கள் தேசிய கட்டமைப்புக்கு தங்களால் ஆனவற்றை செய்வதாக நினைத்துக் கொண்டு பகிர்கிறார்கள்.

சாதரண குடிமக்களின் பார்வையில் போலி செய்திகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பிபிசியின் ஆய்வில் தெரியவந்த முதல் தகவல் இதுவே.

உணர்வுகள் தொடர்பாகவோ அல்லது தனிநபர்களின் அடையாளம் குறித்தோ வரும் செய்திகள் போலியா அல்லது உண்மையா என்று ஆராயாமல் பகிரப்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன - பிபிசி ஆய்வுபடத்தின் காப்புரிமை Sean Gallup/Getty Images

டிவிட்டர் பதிவுகளையும் இந்த அய்வு அலசுகிறது; மேலும், மறையாக்கம் செய்யப்பட்ட செய்தி செயலியான வாட்சப்பிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கான தகவல்களை சேகரிப்பதற்காக பயனர்கள் தங்களின் அலைபேசிகளை அரிதான வகையில் பிபிசி குழுவினரிடம் தந்தனர்.

2018 நவம்பர் 12 திங்களன்று நடைபெறும் பிபிசியின் Beyond Fake News நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்தியா, கென்யா மற்றும் நைஜீரியாவில் இந்த ஆழமான, தரமான மற்றும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவது குறித்த புரிதலை பெற பல்வேறுபட்ட சமூக வலைதள கணக்குகள், பக்கங்கள் மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

இந்தியாவில் பல்வேறு சம்பவங்களில் வாட்சப்பில் பரப்பப்பட்ட போலிச் செய்திகளால் சுமார் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன - பிபிசி ஆய்வுபடத்தின் காப்புரிமை Jaap Arriens/NurPhoto via Getty Images

வன்முறைகளை தூண்டும் செய்திகளை மக்கள் பகிர்வதற்கு தயங்குகின்றனர். ஆனால் தேசியவாத செய்திகளை பகிர்வதை தங்கள் கடமையாக கருதுகின்றனர்.

இந்தியாவின் முன்னேற்றங்கள், இந்துக்களின் வலிமை மற்றும் இந்துக்களின் தொலைந்து போன பெருமை ஆகிய செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயமலே மக்கள் பகிருகின்றனர்.

தங்கள் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளோடு ஒத்துப்போகும் செய்திகளையே இந்திய மக்கள் பகிர்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே இம்மாதிரியான செய்திகள் உண்மைத் தன்மையை கண்டறியும் தன்மைக்கு எதிராக மாறிவிடுகிறது.

போலிச் செய்திகளுக்கு அப்பால்

வாட்சப் குழுக்களில் தெரிந்தவர்கள் மட்டுமே இருப்பதனால் மக்கள் அதனை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில், ஒரு நபர் தானாக செய்தியை டைப் செய்து அனுப்பாமல் அது ஃபார்வேட் செய்யப்படும் செய்தியானால் அதில் 'Forwarded' என்று குறிப்பிடும் அம்சத்தை வாட்சப் அறிமுகப்படுத்தியது.

இது, அந்த செய்தி ஃபார்வேட் செய்யப்பட்ட ஒரு செய்தி என்ற தகவலை பயனாளர்களுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும் இந்த வசதி போலி செய்திகள் பரவுவதை தடுக்கவில்லை என பிபிசியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் தங்களுக்கு வரும் செய்திகளின் ஆதாரங்கள் குறித்து மக்கள் சோதிப்பதில்லை. மாறாக அதனை தங்களுக்கு அனுப்பும் நபர்களையே கருத்தில் கொள்கின்றனர். சமூகத்தில் மதிக்கப்படும் நபர்களால் வரும் செய்திகளை மக்கள் அதிகம் ஃபார்வேட் செய்கின்றனர்.

தவறான தகவல்களை சரிபார்க்கமால் அனுப்புவது என்பது சமூகத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். Image caption தவறான தகவல்களை சரிபார்க்கமால் அனுப்புவது என்பது சமூகத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

தாங்கள் மதிக்கப்படும் நபர்களிடம் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை எவரும் ஆராய்வதில்லை. செய்திகளை பகிர்வதை தங்கள் கடமையாக கருதுகின்றனர்.

சமீப காலமாக போலி செய்திகளை பரப்புவதில் வெகுஜன ஊடகங்களின் செயல்பாடுகளும் கேள்விக்குள்ளாகிறது. ஊடகங்கள் பெரும்பாலும் அரசியல் மற்றும் வணிக நலன்களின் அழுத்தம் காரணமாக இயங்குகின்றன என்றும் அதன் காரணமாக எப்போதும் அவற்றை நம்பமுடியாது என்றும் மக்கள் நம்புவதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் போலி செய்திகளுக்கும், நரேந்திர மோதி ஆதரவாளர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

<div class="embed-image-wrap" style="max-width: 500px"> <a href="https://www.youtube.com/watch?v=Gr20D38vgwY&amp;feature=youtu.be"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: “போலிச் செய்திகள் உருவாக்குவோர் சமூக பொறுப்பற்றவர்கள்” – வாஸந்தி #BeyondFakeNews" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=Gr20D38vgwY&amp;feature=youtu.be~/tamil/india-46176480" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure> </a> </div>

இந்தியாவில் ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் செயல்பாடு சார்ந்த தரவுகளை பகுப்பாய்வு செய்து பார்த்ததில், இடதுசாரி கொள்கையுடையவர்களை விட, வலதுசாரி கொள்கையுடையவர்கள் மிகவும் ஒன்றிணைந்து செயல்படுவதை பிபிசி கண்டறிந்துள்ளது.

சென்னையில் பிபிசி நடத்துகிற பயிலரங்கம் Image caption சென்னையில் பிபிசி நடத்துகிற பயிலரங்கம்

இந்து மதம், மோதி, தேசியவாதம் ஆகியவற்றிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் ஒன்றோடொன்று இணைந்து பாஜகவின் ஆதரவாளர்களாக செயல்படுவதால், ட்விட்டரில் பாஜகவிற்கு மிகப் பெரிய பலம் உள்ளது.

எனவே, இந்த வலுவான பிணைப்பின் காரணமாக இடதுசாரி கொள்கை கொண்டவர்களைவிட வலதுசாரி கொள்கையுடைவர்கள் பரப்பும் போலி செய்திகள் மேலும் திறம்பட பரவுகிறது.

போலி செய்திகளை பரப்புவதில் மற்றொரு அணியினராக விளங்கும் இடதுசாரி கொள்கையுடையவர்கள் மோதி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு போன்ற தங்களது வேறுபட்ட ஒற்றுமைகளை முதலாக கொண்டு செயல்படுகிறார்கள்.

இடதுசாரி கொள்கை உடையவர்களும் போலி செய்திகளை பரப்பினாலும், வலதுசாரிகளோடு ஒப்பிடுகையில் அவர்களது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன - பிபிசி ஆய்வுபடத்தின் காப்புரிமை Getty Images

வலதுசாரி கொள்கை உடையவர்கள் பரப்பும் போலி செய்திகள் ஆளுங்கட்சியான நரேந்திர மோதி தலைமையிலான அரசின் செயல்பாட்டுக்கு ஆதரவளிப்பதாக உள்ளது. ஆனால், இடதுசாரிகள் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி உள்ளிட்டவர்களுடன் ஒன்றுபட்டு செயல்படவில்லை.

இந்தியாவை சேர்ந்த 16,000 பேரின் ட்விட்டர் கணக்கு செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

நீங்கள் பகிர்வது போலி செய்தியா? - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு

p06rf3cl.jpg
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நீங்கள் பகிர்வது போலி செய்தியா? - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு

Exit player
 
நீங்கள் பகிர்வது போலி செய்தியா? - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு

ட்விட்டரில் அடிக்கடி போலி செய்திகளை பரப்பும் சில கணக்குகளை பிரதமர் நரேந்திர மோதி பின்தொடர்வதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

நரேந்திர மோதி பின்தொடரும் 56.2 சதவீத கணக்குகள் ட்விட்டர் நிறுவனத்தால் சரிபார்க்கப்படாத கணக்குகளாக உள்ளன. அதுமட்டுமின்றி, நரேந்திர மோதி பின்தொடரும் 61 சதவீத சரிபார்க்கப்படாத கணக்குகள் பாஜகவை வெளிப்படையாக ஆதரிக்கும் வகையில் இருக்கின்றன. ஆனால், சாதாரண மக்களை பின்தொடர்வதன் மூலம் அவர்களுடன் இணைவதற்கு பிரதமர் மோதி முயல்வதாக பாஜக கூறுகிறது.

தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன - பிபிசி ஆய்வு

ஆனால், சாதாரண மக்கள் என்று குறிப்பிடப்படும் அந்த ட்விட்டர் கணக்குகளை குறைந்தது சராசரியாக 25,000 பேர் பின்தொடர்வதுடன், 48,000க்கும் மேற்பட்ட பதிவுகளையும் இட்டுள்ளது பிபிசியின் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 11 சதவீத சரிபார்க்கப்படாத கணக்குகளையும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 37.7 சதவீத சரிபார்க்கப்படாத கணக்குகளையும் பின்தொடர்வதும் தெரியவந்துள்ளது.

போலி செய்தியும் ஆப்பிள் பழமும் - ஒரு வித்தியாசமான ஒப்பீடு

p06r9lgd.jpg
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போலி செய்தியிடம் வீழாமல் தப்பிப்பது எப்படி?

Exit player
 
போலி செய்தியிடம் வீழாமல் தப்பிப்பது எப்படி?

"போலி செய்திகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பெரிதும் கவலைப்படுவதைப்போன்று காட்டிக்கொள்ளும் சாதாரண மக்கள் ஏன் போலி செய்திகளை பகிர்கிறார்கள் என்ற முக்கியமான கேள்வி இந்த ஆய்வின் மூலம் எழுகிறது" என்று பிபிசி உலக சேவையின் பார்வையாளர்கள் ஆராய்ச்சி பிரிவின் தலைவரான சாந்தனு சக்ரவர்த்தி கூறுகிறார்.

போலி செய்திகளின் பரவலை தடுக்கும் உறுதிப்பாட்டில் தீர்க்கமான அடியை பிபிசியின் Beyond Fake News செயற்திட்டம் எடுத்துவைப்பதற்கு தேவையான விலைமதிப்பற்ற தகவல்களை இந்த ஆய்வு முடிவுகள் வழங்குவதாக பிபிசி உலக சேவையின் இயக்குநரான ஜேமி ஆக்கஸ் கூறுகிறார்.

போலிச் செய்திகளுக்கு அப்பால்படத்தின் காப்புரிமை ULLSTEIN BILD DTL

"மேற்கத்திய நாடுகளின் போலி செய்தி விவகாரங்களில் பெரும்பாலான ஊடக கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தும் சூழ்நிலையில், உலகின் மற்ற பகுதிகளில் உருவாகி வரும் முக்கியமான பிரச்சனைகள் குறித்த வலுவான ஆதாரங்களை இந்த ஆய்வு வழங்குகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

இன்று (திங்கட்கிழமை) இந்தியாவின் ஏழு நகரங்களில் போலி செய்திக்கெதிராக பிபிசி நடத்தும் நிகழ்வுகளில் அரசியவாதிகள், நடிகர்கள், வல்லுநர்கள், மாணவர்கள், பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-46176480
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.