Jump to content

உயிர்த்தியாகம் செய்தவர்களுக்காக பேரணியாக சென்று மரியாதை செலுத்திய உலகத் தலைவர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்தியாகம் செய்தவர்களுக்காக பேரணியாக சென்று மரியாதை செலுத்திய உலகத் தலைவர்கள்!

World-leaders-pay-tribute-720x449.jpg

மில்லியன் கணக்கான போர் வீரர்கள் மரணித்த முதலாம் போரில் தத்தமது நாட்டு வீரர்களின் பங்களிப்பதை பறைசாற்றும் விதமாக உலகத் தலைவர்கள் பாரிஸ் நகரில் கூடியுள்ளனர்.

அந்த வகையில் நிகழ்வை தலைமையேற்று நடத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உலகத் தலைவர்களை ஒன்றுகூட்டி மழையையும் பாராமல் நடைபவனி ஒன்றையும் நடத்தியுள்ளார்.

வான் வழியில் ஜெட் விமானங்கள் பறந்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்த பாரிஸ் பெருந்தெரு வழியே அரச தலைவர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கல், உட்பட பல இளவரசர்கள், முடியாட்சி நாடுகளின் தலைவர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஜனாதிபதி மக்ரோனுடன், உலகப் போர் நூற்றாண்டு நினைவுகூரல் பேரணியில் கலந்து கொண்டனர்.\

பின்னர், அரச தலைவர்கள் அமர்ந்திருந்த சபையில் பாரிம்பரிய வயலின் கலைஞர்களின் அஞ்சலி இசையும், மேலைத்தேய இசை கலைஞர்களின் பேன்ட் வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.

 

http://athavannews.com/உயிர்த்தியாகம்-செய்தவர்/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.