Jump to content

பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றார் மஹிந்த ராஜபக்ச - 45 பேர் இணைவு


Recommended Posts

பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றார் மஹிந்த ராஜபக்ச - 45 பேர் இணைவு

தலைமைப் பதவியையும் ஏற்பார் - நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம்
 
 
main photo
 
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை இன்று ஞாயிற்றுக்கிழமை பெற்றுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்த மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராகவும் செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுன கட்சியில் அவர் இணைந்துள்ளார். கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் முன்னிலையில் உறுப்புரிமையை மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டுள்ளார். நேற்றுச் சனிக்கிழமை அவரது மகன் நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றிருந்தார். 
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் பல மூத்த உறுப்பினர்கள் 45 பேர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளதாகவும் மேலும் பலர் உறுப்புரிமையை பெறுவார்கள் எனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெதுஜன பெரமுனவின் மெட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச அணி நாற்பத்தொன்பது இலட்சத்து 94 ஆயிரத்து 962 வாக்குகளைப் பெற்று 249 சபைகளைக் கைப்பற்றியிருந்தது.

 

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்திலேயே மஹிந்த ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் போட்டிவுள்ளதாகக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனயை சிறிய கட்சிகளும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப் பொறுப்பை மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்வார் எனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச அணி நாற்பத்து ஒன்பது இலட்சத்து 94 ஆயிரத்து 962 வாக்குகளைப் பெற்று 249 சபைகளைக் கைப்பற்றியிருந்தது.

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் அதே மாதம் அதே திகதியில் 2016 ஆம் ஆண்டு பசில் ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டது.

 

மொத்தம் 341 சபைகளில் 249 சபைகளைக் கைப்பற்றி மூவாயித்து 386 உறுப்பினர்களையும் பொதுஜன பெரமுன பெற்றிருந்தது.

ஆனால் மைத்திரிபால சிறிசிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதின்நான்கு இலட்சத்து 87 ஆயிரத்து 960 வாக்குகளைப் பெற்று பதினொரு சபைகளை மாத்திரமே பெற்றிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி முப்பத்தி ஆறு இலட்சத்து 25 ஆயிரத்தி 510 வாக்குகளைப் பெற்று இரண்டாயிரத்து 93 உறுப்பினர்களோடு 41 சபைகளை கைப்பற்றியிருந்தது.

ஆகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையப் பெற்று அந்தக் கட்சியை முன்னிலைப்படுத்த மஹிந்த ராஜபக்ச முற்படுகின்றாரா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரா் பசில் ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் அதே மாதம் அதே திகதியில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் இருப்­ப­வர்கள் உடனடியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்துகொள்ள வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் இடம்பெற்ற நிழக்வு ஒன்றில் அழைப்பு விடுத்திருந்தார்.

பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் மஹிந்தவுடன் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=484&fbclid=IwAR3-JDmaI0a9B5yv41uS5CzUXIegmNItvKfCBBE2YJPhU7IA-77A_bsxpQA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி எதுவித பிரச்சனையும் இல்லாமல் புதுக்கட்சி தொடங்காமல் சந்திரிகா தலைமை பதவியை எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.