Jump to content

சுதந்திர கட்சியிலிருந்து விலகினார், மஹிந்த ராஜபக்ஸ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Drs7JzWV4AAcUEh-720x450.jpg

சுதந்திர கட்சியிலிருந்து விலகினார் மஹிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தின்கீழ் போட்டியிடுவது என்பது குறித்து மைத்திரி, மஹிந்த கூட்டணிக்குள் கருத்து மோதல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்தமுறைபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தின்கீழ் போட்டியிடவேண்டும் என மைத்திரி அணியினரும், அவ்வாறு முடியாது, பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தின் கீழேயே போட்டியிடவேண்டும் என மஹிந்த அணியினரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், இந்த விடயத்தில் அனைத்து தரப்பின் இணக்கப்பாட்டுடன் முடிவொன்று எடுக்கப்படவேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://athavannews.com/சுதந்திர-கட்சியிலிருந்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டு சின்னத்தில் தான் போட்டி போடவேண்டும் மகிந்தா மாத்தையா.....சும்மா பண்டரநாயக்க தொடங்கின கட்சியில் எத்தனை நாளைக்கு செம்பு தூக்கிறது .....நீங்கள் மொட்டு கட்சியில் நின்று ஜெயித்து பண்டாரநாயக்காவின் கட்சியை தோல்வியடைய செய்யுங்கள்......பண்டா ச‌காப்தம் முடிந்து ராஜபக்ச சகாப்தம் மலரட்டும்......பண்டா செல்வா ஒப்பந்தம் மாதிரி.....ராஜ்பக்சா சுமத்திரன் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி டமிழ்ஸ்க்கு தீர்வை வழங்குங்கள்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘அய்யோ சிறிசேன’ என்று போட்டுத் தாக்குகிறார்கள் சமூகவலைத்தளங்களில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை வெற்றிலையாகி இப்போது தாமரை மொட்டாக மாற அடம்பிடிக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, putthan said:

மொட்டு சின்னத்தில் தான் போட்டி போடவேண்டும் மகிந்தா மாத்தையா.....சும்மா பண்டரநாயக்க தொடங்கின கட்சியில் எத்தனை நாளைக்கு செம்பு தூக்கிறது .....நீங்கள் மொட்டு கட்சியில் நின்று ஜெயித்து பண்டாரநாயக்காவின் கட்சியை தோல்வியடைய செய்யுங்கள்......பண்டா ச‌காப்தம் முடிந்து ராஜபக்ச சகாப்தம் மலரட்டும்......பண்டா செல்வா ஒப்பந்தம் மாதிரி.....ராஜ்பக்சா சுமத்திரன் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி டமிழ்ஸ்க்கு தீர்வை வழங்குங்கள்tw_blush:

 

பிறகு எங்கடை இந்தியவம்சாவளி தெமழு எல்லாம் இந்தியாவுக்கு அனுப்புங்க‌ :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

 

பிறகு எங்கடை இந்தியவம்சாவளி தெமழு எல்லாம் இந்தியாவுக்கு அனுப்புங்க‌ :grin:

சீனாக்காரனை கொண்டுவந்து கொழுந்து பறிக்க சொல்லுவோம்

Link to comment
Share on other sites

On 11/11/2018 at 4:20 PM, colomban said:

பிறகு எங்கடை இந்தியவம்சாவளி தெமழு எல்லாம் இந்தியாவுக்கு அனுப்புங்க‌ :grin:

அப்பிடியே எல்லா முசுலீம்களை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு பார்சல் பண்ணிடுங்கோ! :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.