Jump to content

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து ; மியன்மாரின் பாதையில் இலங்கை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து ; மியன்மாரின் பாதையில் இலங்கை?

 

- பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட

நவம்பர் 9 வெள்ளிக்கிழமை இரவு பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பின் பிரத்தியேகமான ஏற்பாடொன்றை மீண்டும் ஒருதடவை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்திருக்கிறது. 

my3.jpg

பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அடிக்கடி ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவாரானால் அது சர்வாதிகார ஆட்சிக்கே கதவைத்திறந்துவிடும். சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான அரசியலமைப்பு நெருக்கடி இதுவாகும்.நாட்டில் அரசியலமைப்பின் வழியிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றின் முற்றுமுழுதான நிலைகுலைவின் தொடக்கத்தையும் இது குறித்து நிற்கிறது.

 ஜனாதிபதி சிறிரேன அரசியலமைப்பை மீறுவதைப்போன்று மகிந்த ராஜபக்ச கூட தனது ஆட்சிக்காலத்தில் நடந்துகொண்டதில்லை.தனது அரசியல் இலக்குகளை அடைவதற்கு நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு போதுமானதாக இல்லை என்று கண்டபோது ராஜபக்ச அதற்கு ஒரு திருத்தத்தைத்தான் கொண்டுவந்தார்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணான முறையில் அக்டோபர் 26 நீக்கிய தனது நடவடிக்கையை அடுத்து மூண்ட ஒரு அரசியல் நெருக்கடியை அவரால் தீர்க்கமுடியாமல்போய்விட்டது.பாராளுமன்றத்தை இடைநிறுத்தி மூடிவைத்த ஜனாதிபதி சிறிசேனவினால் பிரதமராக மகிந்த ராஜபக்சவின் நியமனத்தைச் சட்டபூர்வமானதாக்கக்கூடியதாக  பெரும்பான்மைப்பலத்தைத் திரட்டமுடியாமல் போனதையடுத்து அரசியல் சிக்கல் மேலும் மோசமடைந்தது.இது அவராகவே உருவாக்கிக்கொண்ட சிக்கல்.அரசியலமைப்பை பாரதூரமான முறையில் ஒரு தடவை மீறிய தனது செயலினால் உருவான நெருக்கடியைக் கையாள்வதற்கு அரசியலமைப்பையும் அரசியலமைப்புரீதியான தார்மீகப் பொறுப்பையும் துச்சமென மதிக்கும்பாதையில் செல்வதற்கு சிறிசேன தீர்மானித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் நியாயத்தைப் பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கும் இலங்கையின் எந்தவொரு பிரஜைக்கும் இப்போது இருக்கின்ற ஒரே மார்க்கம் உச்சநீதிமன்றத்தை நாடுவதேயாகும்.ஆனால்,அந்த மார்க்கத்தை ஐக்கிய தேசிய கட்சி தேர்ந்தெடுக்குமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டால், மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல் சிக்கல் ஒன்று குறித்து நீதியரசர்கள் தீர்மானிக்கவேண்டியிருக்கும். உச்சநீதிமன்றத்தி்ன் சுயாதீனத்தன்மையையும் அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக விழுமியங்களையும் மற்றும் பிரஜைகளின் ஜனநாயக சுதந்திரங்களையும் பேண்ப்பாதுகாப்பதில் அதற்கு இருக்கின்ற அரசியலமைப்புசார் கடமையையும் பரிசோதிக்கும் ஒரு களமாக இந்த விவகாரம் அமையும்.

சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு விரோதமானதுமான வழியில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு  பொதுத் தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல. அரசியல் எதிராளிகளுக்கிடையிலான படுமோசமான மோதல்களுக்கு வழிவகுக்கக்கூடியதாகவே தேர்தல் பிரசாரங்கள் அமையக்கூடிய ஆபத்து இருக்கிறது.

எந்த விதமான பச்சாதாபமுமின்றி ஜனாதிபதி சிறிசேன செய்துகொண்டிருக்கின்ற அரசியலமைப்பு மீறல்கள் அவரின் தற்போதைய அரசியல் தெரிவுகளைப்பற்றி மிகவும்  பாரதூரமான கேள்விகளைக் கிளப்பகின்றன.ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கு அவர் நாட்டைக்கொண்டுசென்று அமிழ்த்தக்கூடும்.அதன் மூலமாக மியன்மாரின் வழியில் லங்கை செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது.சட்டத்தையோ அரசியலமைப்பையோ பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாத ஒரு நாடாக இலங்கை மாறிவிடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான அரசியலமைப்பு நெருக்கடியிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குப் போராட நாட்டு மக்கள் அனைவரும் ஐக்கியப்படவேண்டும். இந்த நெருக்கடி தொடர்பில் பொது அபிப்பிராயம் மிகவும் ஆழமாகப்பிளவுபட்டதாகவ இருக்கின்றதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.ஒவ்வொருவருமே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அக்கறைகொண்டவர்களாக இருக்கவும் மாட்டார்கள்.

இலங்கையின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பிரஜைகளை உள்ளடக்கிய பரந்தளவிலான ஒரு ஜனநாயக முன்னணி அமைக்கப்படவேண்டியது அவசியமானதாகும்.

 

http://www.virakesari.lk/article/44266

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.