Jump to content

சிங்கள மேலாதிக்கத்தில் பண்டாரநாயக்கவும் மைத்திரியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள  மேலாதிக்கத்தில் பண்டாரநாயக்கவும்  மைத்திரியும்

1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர் .டி பண்டாரநாயக்க தனது அமைச்சரவையை உருவாக்கிய அடுத்த இரண்டு மாதங்களுக்குள்  தனிச்சிங்கள சட்டமூலத்தை கொண்டு வந்தார். 

swrd.jpg 

1956  ஆம் ஆண்டின் 33 ஆவது இலக்க அரசகரும மொழிகள் சட்டம் என்ற பெயருடைய அச்சட்டமூலத்தின் மூலம் அதுவரை ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலம் அகற்றப்பட்டு சிங்கள மொழி அரச கரும மொழியானது மட்டுமன்றி இந்த சட்ட மூலமே தீவெங்கினும் வாழ்ந்து வந்த சிங்கள –தமிழ் இனங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கக்காரணமாயிற்று. 

குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்குள்ள அரச நிறுவனங்களில் பணிகள் முடக்கப்பட்டன. இந்தப் போராட்டங்களையடுத்தே  பண்டாரநாயக்கா 1958 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க திருத்தச்சட்டமொன்றை கொண்டு வந்ததுடன்  தமிழ் மொழிக்கு சில விட்டுக்கொடுப்புகளை வேண்டா வெறுப்பாக ஏற்படுத்தினார். 

தன்படி அரசாங்க பாடசாலைகளில் போதனா மொழியாக தமிழ் , வடக்கு கிழக்குப்பகுதிகளில் அரச சேவைகளை தமிழ் மொழியில் இடம்பெறச்செய்தல், அரச சேவை ஆட்சேர்ப்பு பரீட்சைகளை தமிழில் நடத்துதல், அரசாங்க நிறுவனத்தின் தொடர்பு மொழியாக தமிழை பயன்படுத்தலாம் போன்ற விடயங்களே அவை.  இது சுருக்கமான வரலாறு. 

அதன் பின்னரே 13 ஆவது திருத்தச்சட்டத்தில் தமிழ் மொழியும் அரச கரும அல்லது ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை சிங்கள மொழியே சட்டவாக்க மொழியாக இலங்கையில் இருந்து வருகின்றது. இதை அடிப்படையாக வைத்தே அரசியலமைப்புச்சட்டத்தில் சிங்கள மொழியில் இருந்தவாறே பிரதமரை நியமித்தல் ,பதவி நீக்குதல் ,புதிய அமைச்சரவையை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இது 1956 களில் பண்டாரநாயக்கவால் நியாயப்படுத்தப்பட்ட தனிச்சிங்கள சட்டமூலத்தை மீண்டும் ஞாபகப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மேலும் இதை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஆமோதித்துள்ளார். ஆகவே  மொழிகள்  அமுலாக்கம் தொடர்பில்  என்னதான் திருத்தச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவை சிறுபான்மையினரின் மொழி உரிமை தொடர்பான மேற்பூச்சு நடவடிக்கைகளாகவே இந்நாட்டில் இனியும் இருக்கப்போகின்றது. எந்த வகையிலும் சிங்கள மொழியின் மேலாதிக்கத்தை பேரினவாதம் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அரச கரும மொழியாகவும் இணைப்பு மொழியாகவும் தமிழும் ஆங்கிலமும் இருந்தாலும் எக்காலத்திலும் இவ்விரண்டு மொழிகளும் சட்டவாக்க மொழிகள் என்ற அந்தஸ்தை பெறப்போவதில்லை. 

ஆகவே இது ஒரு பௌத்த நாடு என்பதிலும்  ஆட்சி மற்றும் சட்டவாக்க மொழிகள் சிங்களம் என்ற விடயத்தையும்  இந்நாள் மற்றும் முன்னாள்  ஜனாதிபதிகளான மைத்திரிபால மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும்  அழுத்தி கூறியுள்ளார்கள். 1956 ஆம் ஆண்டு சம்பவத்தை மீண்டும் இது ஞாபகப்படுத்துவதாக இருக்கும் அதே வேளை  சுதந்திரக் கட்சியின் பாரம்பரியத்தையும் இவர்கள் நிலைநிறுத்தியுள்ளனர். 

இலங்கையில் உள்ள சட்டங்களைப்பொறுத்தவரை சிங்கள மொழியில் உள்ளவற்றை மட்டுமே நீதிமன்றங்களும் ஏற்றுக்கொள்கின்றன. அதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நியதியும் இருக்கின்றது. இந்நிலையில் தேசிய நல்லிணக்கத்தில் மொழிகளின் வகிபாகம் குறித்து வாய் கிழிய பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. ஆகவே அது தொடர்பான அமைச்சுக்களினாலும் என்ன பயன் ஏற்படப்போகின்றது என்று தெரியவில்லை. 

அமைச்சர் வாசுவின் பங்கு 

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த வாசுதேவ நாணயக்காரவிற்கு தற்போது தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் என்ற அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அரச கரும மொழிகளில் தமிழ் மொழி அமுலாக்கத்தை துணிச்சலாக முன்னெடுத்தவர் வாசு. பல சந்தர்ப்பங்களில் அரச நிறுவனத்தலைவர்களை வெளிப்படையாகவே இது தொடர்பில் விமர்சித்திருந்தார். 

பல்வேறு பட்ட அரச பணிகள் தொடர்பான படிவங்கள் சிங்கள மொழியில் மட்டும் இருப்பதை கண்டித்தார். அரசாங்க அதிகாரிகளே தேசிய மொழிக்கொள்கையை மீறுவதை வெளிபடுத்தினார். இவரது காலகட்டத்திலேயே தேசிய கீதத்தை தமிழில் பாடுவது தொடர்பிலான சர்ச்சை உச்சத்தை அடைந்திருந்தது. 

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எந்தத் தடைகளும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இது பேரினவாத சக்திகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. வாசுதேவ கடும் விமர்சனங்களுக்கும் உட்பட்டிருந்தார். அவர் ஓர் இடது சாரி என்ற காரணத்தினால் மொழி மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் எந்த வித பக்கச்சார்புமின்றி கருத்துக்களை தெரிவிக்க முடிந்தது, ஆனால் நாட்டின் சிங்கள மேலாதிக்கமோ அவரை ஒரு சிங்கள பௌத்தராகவே பார்க்க விரும்பியது. அதன் காரணமாகவே அவரால் முன்னெடுக்கப்பட்ட பல செயற்பாடுகளை அரசாங்க நிறுவனங்களின் சிங்கள அதிகாரிகள் புறக்கணித்தனர். இதை அரசாங்கமும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவருக்குப்பிறகு நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த அமைச்சுப்பதவியை மனோ கணேசன் வகித்தார். ஆரம்பத்தில் ஒரு சிங்கள பௌத்தருக்கே மொழி அமுலாக்கம் தொடர்பில் அத்தகைய சவால்களும் எதிர்ப்பும் இருந்திருக்குமென்றால் சிறுபான்மை தமிழ் பிரதிநிதிக்கு எத்தகைய சவால்கள் இருந்திருக்கும் என்பதை கூறத்தேவையில்லை. அப்படியே இவருக்கும் நடந்தது. 

அரசாங்க திணைக்களங்கள் பெரும்பாலானவற்றில் மொழிக்கொள்கையானது அமுல்படுத்தப்படாமலேயே இருந்தது. இதை நல்லாட்சி அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்ததில் பெரும்பங்கு வகித்தது சிறுபான்மை மக்களே என அவ்வப்போது இம்மக்களை ஞாபகப்படுத்தும் அறிக்கைகளும் உரைகளும் மட்டுமே அமைச்சர் மனோ கணேசனிடத்திலிருந்து வந்தன. 

தற்போது மீண்டும் அந்த  பொறுப்பை எடுத்துள்ள அமைச்சர் வாசுதேவ இவ்விடயத்தில் என்ன செய்யப்போகிறார் என்பது முக்கிய விடயம்.. ஏனெனில் ஒரு நாட்டின் சட்டமானது அங்கு வாழ்ந்து வரும் எல்லா இன மக்களுக்கும் பொதுவானது என்றால் எல்லா மொழிகளிலும் அது ஒரே அர்த்தத்தை கொண்டதாக அல்லவா இருக்க வேண்டும்? 

தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் இல்லாத சொற்பிரயோகங்கள் சிங்கள மொழியில் மட்டும் இருந்தால் ஏனையோர் அச்சட்டங்களை எவ்வாறு விளங்கிக்கொள்ளப்போகின்றனர்? தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உள்ளவாறான அரசியல் அமைப்புச்சட்டங்கள் பற்றியே இன்று இவ்விரு மொழிகளிலும்  இயங்கும் பாடசாலைகளிலும் போதிக்கப்படுகின்றது. சிற்சில சந்தர்ப்பங்களில் இதை அடிப்படையாகக்கொண்டே வாதங்கள் ,பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் நாட்டின் எல்லா பிரஜைகளும் சட்டங்கள் பற்றிய தெளிவை மும்மொழிகளிலும் தெரிந்து வைத்திருக்கின்றனரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. 

மொழி உரிமை மீறல் இல்லையா? 

அரசியலமைப்பின் சிங்கள மொழியில் உள்ளவாறே தான் செயற்பட்டிருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். 13 ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தமிழும் சிங்களமும் ஆட்சி (நிர்வாக) மொழிகள் . அப்படியிருக்கும் போது அரசியலமைப்பில் சிங்கள மொழியில் உள்ளவாறு தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு இல்லை என்பது மொழி உரிமை மீறல் அல்லவா ?அது குறித்து புதிய அரச கரும மொழிகள் அமைச்சர் என்ன கூறப்போகின்றார்? அல்லது இப்படியான ஓர் அமைச்சு  அரசியலமைப்பு மொழிகள் விடயத்தில் தலையிட  முடியாதா போன்ற கேள்விகள் எழுகின்றன. இங்கு மொழி சமத்துவமின்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

 அதுவும் தற்போதைய அரசியல் நெருக்கடி சூழ்நிலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அரசியலமைப்பு மீறப்பட்டது குறித்தே  அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பௌத்த மேலாதிக்க சிந்தனைகள் கொண்ட தேசிய தலைவர்கள் இதை சிங்கள மக்களிடத்தில் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை நன்கு திட்டமிட்டே செயல்படுத்தியுள்ளனர். அதன் விளைவாக உருவானதே  அரசியல் அமைப்பின் சிங்கள வாசகங்கள் விவகாரம். சிங்களத்தில் இருக்கின்ற அரசியல் யாப்பின் 48(1) உறுப்புரையிலிருக்கின்ற வாசகங்களின் அடிப்படையிலேயே  ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதாகவும் அவருக்குப்பதிலாக மஹிந்தவை பிரதமராக நியமித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்து விட்டார். 

mith.jpg

நாட்டின் பேரினவாத சிந்தனையாளர்களை திருப்பதிப்படுத்த இது போதாதா? என்னதான்   கட்சி மற்றும் கொள்கைகள் அடிப்படையில் பெரும்பான்மையினத்தவர்கள் வேறுபட்டு நின்றாலும் மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் அனைவருமே ஒன்றாகத்தான் பயணிக்கின்றனர். நாட்டின் அரசியலமைப்புச்சட்டத்தை விட வேறு ஒன்று உயர்வானதாக இல்லை. ஆகவே அதையும் மீறி செயற்பட முடியாத அளவுக்கு அங்கு சிங்கள மேலாதிக்கம்  செல்வாக்கு செலுத்துகின்றது. ஆகவே, அவர்களைப்பொறுத்த வரை தேசிய நல்லிணக்கம் என்பது ஒரு மொழி, ஒரு மதம், ஒரு நாடு என்ற ரீதியிலான அரசியல்பயணம் தான். அதை விட வேறொன்றுமில்லை. 

 சிவலிங்கம் சிவகுமாரன்

 

http://www.virakesari.lk/article/44262

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்[உ ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள். எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
    • பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 
    • இனி…. எப்படியும் தெரிய வரும். 🤣 ஆதவனுக்கு ஏழரையா… சவுக்குக்கு ஏழரையா… என்று தெரியவில்லை. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.