Jump to content

கடாபிக்கு ஏற்பட்ட நிலை மைத்திரிக்கும்....? வெளிவந்தது கடுமையான எச்சரிக்கை!


Recommended Posts

நாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் முழுமையாக ஓரங்கட்டிவிட்டு சர்வாதிகாரியாக செயற்பட்டுவரும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு, லிபிய அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட துர்பபாக்கியமான நிலமையே ஏற்படும் என்று முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை அகற்றி, மைத்ரிபால சிறிசேனவை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு முன்னின்று உழைத்த முக்கிய தலைமை பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

இதனால் மைத்ரிபால சிறிசேன தான் செய்துவரும் தவறுகளை உடனடியாக சரிசெய்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் முக்கியஸ்தரான கலாநிதி தம்பரே அமில தேரர், அவ்வாறு செய்ய அவர் செய்யத் தவறிால், நாட்டின் சுதந்திரத்தை இல்லாது ஒழித்த லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு லிபிய மக்கள் வழங்கிய தீர்ப்பைப் போல் ஒரு நிலை மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்றும் கூறியிருக்கின்றார்.

இதுகுறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

“கொழும்பில் இருந்து பொலன்னறுவை வரை சகலவற்றுக்கும் தீ வைத்த ஆஞ்சநேயரை போல மைத்திரிபால சிறிசேன என்ற நவீன ஆஞ்சநேயர் எல்லாவற்றுக்கும் தீ மூட்டுக்கின்றார். முதலில் அரசியலமைப்பு என்ற அதி உயர் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு அதற்கு தீவைத்தார். நெறிமுறைகளுக்கு தீவைத்தார். சர்வதேச உறவுகளுக்கு தீவைத்தார். நாட்டில் காணப்பட்ட நல்லிணக்கத்துக்கும் தீவைத்துள்ளார். எந்தவித பிரச்சினையும் இன்றி நாட்டில் நிலவிய ஆட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கி தீ வைத்துள்ளார். இன்னும அதனை நிறுத்தவில்லை தீ வைக்கும் நடவடிக்கை தொடர்கின்றது.

இதேபோலத்தான் லிபியாவில் கடாபி மேற்கொண்ட அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு மக்கள் கடாபிக்கு தகுந்த தீர்ப்பை வழங்கினார்கள். நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தை ஒழித்தார் என்பதால் குழிக்குள் மறைந்திருந்த கடாபியை வெளியில் எடுத்து தமது சுதந்திரத்தை கைப்பற்றினர். அந்த வரலாற்றை வாசிக்குமாறு சிறிசேனவிடம் கேட்டுக்கொள்கின்றேன். அரசியலமைப்பின் பக்கங்களில் ஒளிந்துகொண்டுஅடுத்து என்ன செய்வது என பக்கங்களை புரட்டிக் கொண்டுள்ளனர்.” என்றார்.

நாட்டில் இடம்பெறும் அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்களை தடுத்து நிறுத்தி, ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துகொள்ள வேண்டுமானால், நாட்டு மக்கள் தமக்கிடையிலான அனைத்து முரண்பாடுகளையும், கட்சி அரசியல்களையும் முழுமையாக ஓதுக்கிவைத்துவிட்டு வீதிக்கு இறங்கி போராட முன்வர வேண்டும் என்றும், தம்பர அமில தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

”தற்போது பறிக்கப்பட்டு கொண்டுள்ள ஜனநாயகத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வீதிக்கு இறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி இந்த யுதத்தம் முன்னெடுக்கப்படுவதுடன் ஜனநாயகத்தை பாதுகாபதற்காக போராட்டம் முன்னெடுக்கபடபவுண்டும். இன்று நாட்டில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் முன்னெக்கப்படுவதை காணமுடிகின்றது. யாரும் ஏற்பாடு செய்யாம்ல இளைஞர் சுயாதீனமாக முறையில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி முன்னெடுத்த யுதத்தத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டும். அதனைவிட பெரிதாக போராடுவேதுடன் வெற்றியடையும் வரை போராட்டத்தில் ஈடுபடவேண்டும். எங்களிடம் ஊடக, பணம் பலம் இல்லை மக்கள் பலம் மட்டுமே உள்ளது. அரசியலமைப்பு முரண்பாடாக செயற்படும் ஆட்சியாளர்களுக்கு பொதுமக்கள் பாடம் கற்பிக்கபோவது உறுதி.” என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/108965?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.