Jump to content

மைத்திரியின் செயற்பாட்டினால் இலங்கைக்கு சர்வதேசத்தில் நெருக்கடி – கூட்டமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மைத்திரியின் செயற்பாட்டினால் இலங்கைக்கு சர்வதேசத்தில் நெருக்கடி – கூட்டமைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் இலங்கைக்கு சர்வதேசத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நேற்று(சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இதற்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்பு மிக முக்கிய பங்குவகித்தன.

அத்துடன், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்சவை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன்காரணமாக பல சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.

மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனாதிபதி பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்ததாகவும், இதன்காரணமாகவே கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/மைத்திரியின்-செயற்பாட்ட/

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

மைத்திரியின் செயற்பாட்டினால் இலங்கைக்கு சர்வதேசத்தில் நெருக்கடி – கூட்டமைப்பு

கூட்டமைப்பு என்ட போர்வைல தமிழரசுக் கட்சியின் மாவை சாத்திரியார் வேலை செய்யத் தொடக்கிருக்கிறார்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.