Jump to content

“பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் செல்வோம்”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் செல்வோம்”

November 10, 2018

sumanthiran-mp.jpg?resize=640%2C480

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்றையதினம்  பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள் மிகத் தெளிவாக காணப்படுகின்றது எனவும் அதனை தவறாக அர்த்தப்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைப்பதனை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையகமும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டுகளைக் கடப்பதற்கு முன்னர் அதனை ஜனாதிபதி கலைக்க முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்பதை 19 ஆவது திருத்தம் தெளிவாகக் கூறுகின்றது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பான உத்தரவை தாம் நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு சிறிது கால அவகாசம் தேவை எனத் தெரிவித்துள்ள சுமந்திரன் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் அல்லாடும் தரப்புகளுக்கு இந்தக் கால அவகாசம் ஒரு வாய்ப்பாக அமைந்து வீடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/102799/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜதேக யே சும்மா இருக்க , சும், ஏன் சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி துள்ளிக் குதிக்கிறார்?

இவர் பங்களிப்புடன் தயாரான புதிய அரசியல்மைப்பு நகல் நவம்பர் 7 ம் திகதி பாராளுமன்றில் தாக்கலாக இருந்த நிலையில் சிங்களம் தனது வழக்கமான தமிழர் முதுகில் கடைசி நேரத்தில் குத்திவிட்டது என தமிழகத்தின் வைக்கோவிற்கு புரிந்தது இவருக்கு ஏன் புரியவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LLB.png

பொதுவாக லோயர்மார் இரண்டு தொழில் செய்வினம் ஒன்று "அரசியல் "மற்றது "சட்டம் " இரண்டில் ஒன்று வாய்ப்பு இல்லாத போது "தொழில் முறை சட்டத்தரணி" கை கொடுக்கும் ?

Link to comment
Share on other sites

நாடாளுமன்றக் கலைப்பு சரியா, பிழையா- உயர் நீதிமன்றத்தின் கருத்தை சுயாதீனத் தேர்தகள் ஆணைக்குழு அறியவுள்ளது

தீர்மானத்தை தெரிந்த பின்னரே தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலனை எனவும் தெரிவிப்பு
 
 
main photo
 
இலங்கை நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவானதா என்பது குறித்து இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கோரவுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. மஹிந்த ராஜபக்ச தரப்பு பொரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன இலங்கை அரச வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளமை அரசியல் யாப்பு விதிகளை மீறும் செயல் என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிகின்றது. 
 
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட வேண்டிய நிலையில் எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்குரிய ஏற்பாடுகளை செய்வது என்பது குறித்தும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

 

இது சட்டப் பிரச்சினை என்றும் இது தொடர்பாகவும் உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிவதுடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்துரையாட வேண்டும் எனவும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை, நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் முடிவுறாத நிலையில் மைத்திரிபால சிறிசேன எவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என ஐக்கியதேசியக் கட்சி உடனடியாகவே கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்பு விதிகளுக்கு அமைவானதுதான் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் அரசியல் யாப்பின் 70 ஆவது சரத்தில் உறுப்புரையின் முதலாவது பந்தியில் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை மைத்திரிபால சிறிசேன மீறியுள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிய முற்படுகின்றமை மைத்திரி - மஹிந்த ஆகியோரின் நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் இலங்கை நீதித்துறையின் சுயாதீனத் தன்மை தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகளின் சட்டத்தரணிகளே கேள்விக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால் தேர்தல் நடத்தப்படும் திகதியை அரசியல் கட்சித் தலைவர்களுடன் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரே கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி தேர்தல் நடைபெறும் என அரச வர்த்தமானியில் அறிவித்துள்ளமை குறித்தும் கொழும்பில் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் ஜனாதிபதி தொடர்ந்தும் அதிகாரத்துடன் செயற்படுவதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் நடைபெறும் திகதியை ஜனாதிபதி தீர்மானிக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறுகின்றது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=480&fbclid=IwAR1G6vRnFlQlbD1YLZ3Iz9O8RuDtyISLZZCyf8YiaJ04niBoUYDmXdI733Q

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

ஜதேக யே சும்மா இருக்க , சும், ஏன் சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி துள்ளிக் குதிக்கிறார்?

இவர் பங்களிப்புடன் தயாரான புதிய அரசியல்மைப்பு நகல் நவம்பர் 7 ம் திகதி பாராளுமன்றில் தாக்கலாக இருந்த நிலையில் சிங்களம் தனது வழக்கமான தமிழர் முதுகில் கடைசி நேரத்தில் குத்திவிட்டது என தமிழகத்தின் வைக்கோவிற்கு புரிந்தது இவருக்கு ஏன் புரியவில்லை?

அடுத்த தேர்தல் என்றால் மக்களிடம் எப்படி முகம் கொடுப்பது.

ஏற்கனவே மக்களுக்கு பயந்து இரண்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு வேறை.

கூட்டமைப்பு பாடு ரொம்ப பரிதாபம்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன தான் சொல்லப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பாராளுமன்றத்தையேகலைக்கும் சக்தி நமது கைகளாலேயே நிகழ்ந்தது, அந்தக் கைகளைை பலப்படுத்துங்கள் அப்பதான் சர்வேசத்தாேடு பேரம்பேசி ஐநாவில் பாேர்க்குற்ற விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் எல்லாவற்றையும் நீர்த்துப்பாேகச்செய்கிறாேம், ஒன்றுபட்ட நாட்டு்க்குள் சேர்ந்து வாழ்வாேம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.