Jump to content

பிரதமர், அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யலாம் - ஆனால் சபாநாயகரை நாடாளுமன்றம் கூடும் முன் மாற்ற முடியுமா?


Recommended Posts

பிரதமர், அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யலாம் - ஆனால் சபாநாயகரை நாடாளுமன்றம் கூடும் முன் மாற்ற முடியுமா?

மைத்திரி-மஹிந்த குழப்பம் - சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆராய்வு
 
 
main photomain photomain photo
  •  
மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்சவும் இலங்கை நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் விடயத்தில் இக்கட்டான நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் இணைந்து மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என்றும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் கொள்கையளவில் இணங்கியுள்ளனர். ஜே.வி.பி இதனை வெளிப்படையாகவும் அதிகாரபூர்வமாகவும் இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. ஆனால், ஜனநாயகத்திற்கு விரோதமாக அரசியல் யாப்பை மீறும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்க முடியாதென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் ஆறு ஆசனங்கள் உள்ள ஜே.வி.பி 15 ஆசனங்கள் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தால் பெரும்பான்மையை நிரூபிப்பது கடினமானதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

 

 

மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னரான சூழலில் கொழும்பில் ஒரு வகையான பதற்றமும் வர்த்தகர்கள் மத்தியில் நம்பிக்கையற்ற நிலையும் காணப்படுகின்றது.

 

அதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரியவின் இறுக்கமான தீர்மானங்களும் மஹிந்த தரப்புக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் அதுவரையும் மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமருக்குரிய ஆசனம் வழங்கப்படமாட்டாது என்றும் சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரியிடம் உறுதியாகக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னரான ஆசன ஒதுக்கீட்டின்படியே 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய, மஹிந்த தரப்புக்கு அறிவித்துமுள்ளார்.

ஆனால் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது இலங்கை அரசியலமைப்பு மரபு வழிறைகளின் பிரகாரம் ஜனாதிபதி என்ற முறையில் மைத்திரிபால சிறிசேன சிம்மாசன உரையாற்றுவார் என்றும் வாக்கெடுப்பு இடம்பெறாதெனவும் மஹிந்த தரப்பு அமைச்சர் லக்ஸ்மக் யாப்பா அபயவர்த்தன இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஆனால் நாடாளுமன்றம் கூடிய பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையை நிரூபிக்காமல், மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் சிம்மாசன உரையாற்ற முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னதாகவே புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களை ஜனாதிபதி ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக நியமித்திருக்கின்றார். நாடாளுமன்ற சபை முதல்வர் கூட நியமிக்கப்பட்டுள்ளார்.

சரி அதனை அரசியல் யாப்புக்கு அமைவானது என்று சட்ட வியாக்கியானம் கொடுத்திருந்தாலும், ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக புதிய சபாநாயகரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது. அதாவது தற்போதைய சபாநாயகரை மாற்றமுடியாது.

அதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று கூறுகின்றனர் சட்ட வல்லுனர்கள். அந்த நம்பிக்கையில்தான் சபாநாயகர் கரு ஜயசூரியவும் இறுக்கமான முடிவுகளை அறிவித்துள்ளார் என்று தெரிகின்றது.

அதேவேளை, 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி ஐந்து வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னராக நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது.

அவ்வாறு கலைப்பதாக இருந்தால் நான்கு வருடங்கள் நிறைவடைந்து ஆறு மாதங்கள் சென்றிருக்க வேண்டும். ஆகவே தற்போதைய நாடாளுமன்றம் மூன்றரை ஆண்டுகள் மாத்திரமே பூர்த்தி செய்திருக்கின்றது.

அப்படி இல்லையேல் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைய வேண்டும். அப்படித் தோல்வியடைந்தாலும் இன்னுமொரு வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும்.

ஆனால் அவ்வாறனதொரு சூழல் தற்போதைக்கு இல்லை. அல்லது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமா, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமா என்று சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்த விடயம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்த முடியுமா இல்லையா என்பது தொடர்பாக அரசியலமைப்பில் தெளிவாகக் கூறப்படவில்லையென சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்சவும் தமது சட்ட வல்லுநர்களுடன் ஆரய்ந்து வருவதாக உயர்மட்டத்தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, தமது பெரும்பான்மையை நிரூப்பிப்பதற்காக மஹிந்த தரப்பும் ரணில் தரப்பும் கொழும்பில் மக்கள் செல்வாக்கைக் காண்பித்து வருகின்றன.

கடந்த 2 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் நடத்திய பேரணியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடியதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

அதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை மஹிந்த தரப்பு கொழும்பு பத்தரமுல்லையில் நடத்திய பொதுக் கூட்டத்திலும் அதேயளவு மக்கள் ஒன்று கூடியதாகவும் சுயாதீன தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், இன்று எட்டாம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாகவிருந்து ஆரம்பித்த ஐக்கியதேசியக் கட்சியின் எதிர்ப்புப் பேரணி மாலை நான்கு மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் உள்ள டி.எஸ். சேனாநாயக்கவின் சிலைக்கு முன்பாக நிறைவடைந்தது.

இவ்வாறு இரு தரப்பும் தொடர்ந்து நடத்தும் ஏட்டிக்குப் போட்டியான பேரணிகள். பொதுக் கூட்டங்களினால் கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னரான சூழலில் கொழும்பில் ஒரு வகையான பதற்றமும் வர்த்தகர்கள் மத்தியில் நம்பிக்கையற்ற நிலையும் காணப்படுகின்றது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச பிரதமரக நியமிக்கப்பட்டமை ஆயுதங்கள் அற்ற சதிப் புரட்சியென சபாநாயகர் கரு ஜயசூரிய கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு கடந்த 5 ஆம் திகதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=472&fbclid=IwAR2RV87xT10BKJqCgI0y-0YwjYDhNN81m_eU61Mfz-D3YKw3cxk79SExnX0

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.