Jump to content

நான் கட்சியிலிருந்து விலகவில்லை: தவராசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

thawarasa-720x450.png

நான் கட்சியிலிருந்து விலகவில்லை: தவராசா

ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து நான் விலகவும் இல்லை. என்னைக் கட்சி விலக்கவும் இல்லையென வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் முக்கியஸ்தருமான எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று (வியாழக்கிழமை) ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்கள், ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்கின்ற நீங்கள் மீளவும் அக்கட்சியில் இணைந்து செயற்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில்  எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“ஈழ மக்கள் ஐநயாகக் கட்சியிலிருந்து மாகாண சபைக்கு வந்து, அக்கட்சி உறுப்பினராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், கட்சி செயற்பாடுகளில் முன்னரைப் போன்று கூடுதலாகச் செயற்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அதற்கு பல காரணங்ள் உள்ளன.

அதற்காக  நான் கட்சியிலிருந்து விலகியதாகவோ அல்லது கட்சி என்னை விலக்கியதாகவோ அர்த்தம் இல்லை.

மேலும்  கட்சியின் செயலாளர் நாயகம் தற்போது மீள்குடியேற்ற இந்து கலாசார வடக்கு அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பெடுத்திருக்கும் நிலையில், வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் அமைச்சின் செயற்பாட்டை உத்வேகத்துடன் கொண்டு செல்வதற்கு என்னுடைய பங்களிப்பை அல்லது ஆலோசனை வழங்குமாறு என்னிடம் விடுத்த கோரிக்கைகையை  நான் நிராகரிக்கவில்லை.

மாகாணத்தின் அபிவிருத்திக்காக நானும் என்னாலான சேவைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய என்னுடைய முடிவுகள் அமையலாம்.

ஆகவே, ஐனாதிபதியின் தீபாவளிப் பண்டிகை நிகழ்வில் நானும் கட்சித் தலைமையும் கலந்து கொண்டிருந்ததை இணைந்துவிட்டோமென செய்திகள் வந்திருக்கலாம். அதற்காக பிரிந்திருந்தவர்கள் மீளவும் சேர்ந்து விட்டோமென அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது.

இருவருக்கும் குறித்த நிகழ்வுக்கான அழைப்பு வந்தது அதற்கமைய சென்று நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றோம்” என தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/நான்-கட்சியிலிருந்து-வில/

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து நான் விலகவும் இல்லை. என்னைக் கட்சி விலக்கவும் இல்லை

ஒரு இடத்தில் எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி முடிந்துவிட்டதால் மறு இடத்தில் எலும்புத் துண்டுகளைப் பொறுக்க தவராசா தயார்!

ஆனால் இவரே எலும்பாக மாறிவிடுவாரோ தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவரை துரத்தி விட்டு உவரின் தலைவர் ஊடக அறிக்கை வழங்கினதும்.. உவருக்கு மறந்து போச்சு. இவர் எல்லாம் ஒரு முன்னாள் எதிர்கட்சி தலைவர். நாட்டு நிலவரம் அப்படி. ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.