Jump to content

நடுநிலை வகிக்க மைத்திரி கோரிக்கை முடிவு மாறாது என்றது கூட்டமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைமை அமைச்­சர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக் கை­யில்­லாத் தீர்­மா­னம் மீதான வாக்­கெ­டுப்­பின்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நடு­நி­லமை வகிக்­க­வேண் டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கோரிக்கை முன்­வைத்­துள்­ளார். இருப்­பி­னும், கூட்­ட­மைப்பு அந்­தக் கோரிக்­கையை அடி­யோடு நிரா­க­ரித்­துள்­ள­து­டன், தமது கட்சி நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிக்­கும் முடிவை ஏற்­க­னவே எடுத்­துள்­ள­தா­க­வும் கூறி­யுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­தி­ரன், செல் வம் அடைக்­க­ல­நா­தன், த.சித்­தார்த்­தன் ஆகி­யோ­ருக்­கும் இடை­யில் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று ஒன்­றரை மணி­நே­ரம் சந்­திப்பு இடம்­பெற்­றது.

இந்­தச் சந்­திப்­பின் ஆரம்­பத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கருத்­துத் தெரி­வித்­துள்­ளார். 2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் தமிழ் மக்­க­ளின் வாக்­கு­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­டேன் என்­ப­தில் தொடங்கி, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி நீக்­கி­யமை வரை­யி­லான விட­யங்­க­ளைக் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதன் பின்­னர் தற்­போ­தைய அர­சி­யல் குழப்­பங்­கள் தொடர்­பில் இரு தரப்­பி­ன­ரும் ஆராய்ந்­துள்­ள­னர். நாடா­ளு­மன்­றத்­தில் புதிய தலைமை அமைச்­சர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தத் தீர்­மா­னம் மீதான வாக்­கெ­டுப்­பின்­போது கூட்­ட­மைப்பு நடு­நி­லமை வகிக்­க­வேண்­டும் என்று அரச தலை­வர் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

ஆனால் கூட்­ட­மைப்பு அதனை நிரா­க­ரித்­துள்­ளது. மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­கச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்று கட்சி முடிவு எடுத்து அறி­வித்­துள்­ள­மையை அரச தலை­வ­ருக்­குச் சுட்­டிக்­காட்­டி­னர். மகிந்த ராஜ­பக்­சவை கூட்­ட­மைப்பு ஆத­ரிக்க முடி­யா­தி­ருப்­பதை தான் ஏற்­றுக் கொள்­வ­தாக அரச தலை­வர் இதன்­போது கூறி­யுள்­ளார்.

இதே­வேளை அரச தலை­வ­ரு­ட­னான சந்­திப்­புத் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, நாட்­டில் தற்­போது நில­வும் சூழ்­நிலை தொடர்­பில் மிக நீண்ட கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. இதன்­போது அரச தலை­வர் சில முடி­வு­கள் எடுக்­கப்­பட்­ட­தன் பின்­னணி குறித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் குழு­வி­ன­ருக்கு விளக்­க­ம­ளித்­தார்.

இதன்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னா­லும் அதன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­லும் எடுக்­கப்­பட்­டத் தீர்­மா­னங்­க­ளுக்­கான கார­ணங்­களை மைத்­தி­ரிக்கு கூட்­ட­மைப்­பி­னர் எடுத்­துக் கூறி­னார்­கள். இந்­தத் தீர்­மா­னங்­கள் ஏற்­க­னவே பகி­ரங்­க­மாக முழு நாட்­டுக்­கும் உல­கிற்­கும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.தாம் ஏற்­க­னவே எடுத்த தீர்­மா­னங்­களை மாற்ற முடி­யாது என்­றும் அந்­தத் தீர்­மா­னங்­க­ளின்­ப­டியே தாம் செயற்­ப­டு­வோம்­என்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் மைத்­தி­ரிக்கு கூறி­னார்­கள்.

அனைத்­துக் கட்­சி­க­ளி­னு­டைய இணக்­கப்­பாட்­டோடு நாட்­டின் அர­சி­யல் சூழ்­நி­லையை சுமூ­க­நி­லைக்கு கொண்டு வரு­வ­தற்­காக எதிர்­கா­லத்­தில் அரச தலை­வர் எடுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவ­ரோடு கலந்­தா­லோ­சித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது முழு­மை­யான ஆத­ர­வைக் கொடுக்­கும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு குழு மைத்­தி­ரிக்கு உறு­தி­ய­ளித்­தார்­கள்.

இந்த நிலையை விரை­வாக அடை­வ­தற்­குத் தற்­போது யோசித்­துள்ள திக­திக்கு முன்­ன­தான ஒரு திக­தி­யில் நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­ப­ட­வேண்­டு­மென்று அரச தலை­வ­ருக்கு கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யது. இந்த வேண்­டு­கோ­ளைத் தான் கவ­ன­மாக ஆராய்­வ­தாக மைத்­திரி உறு­தி­ய­ளித்­தார் – என்­றுள்­ளது.

https://newuthayan.com/story/10/நடுநிலை-வகிக்க-மைத்திரி-கோரிக்கை-முடிவு-மாறாது-என்றது-கூட்டமைப்பு.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

இந்த வேண்­டு­கோ­ளைத் தான் கவ­ன­மாக ஆராய்­வ­தாக மைத்­திரி உறு­தி­ய­ளித்­தார் – என்­றுள்­ளது.

அடுத்த தீபாவளிக்கு தான்  எந்தக் கட்சியில் அமர்வது  என்றுதான் ஆராய்வார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.