Jump to content

யாழில் வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

IMG_0356.jpg?resize=800%2C450

யாழ்ப்பாணத்திலுள்ள வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாண காவற்துறைப் பிரிவு சிரேஸ்ட் காவற்துறை  அத்தியட்சகர் வர்ணஜெயசுந்தர தலைமையில் யாழ்ப்பாணம் காவற்துறை நிலைய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் பொதுமக்களால் சட்டவிரோதமான முறையில் புகையிரத கடவைபாதை அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவருகின்றன இவற்றை உடனடியாக அகற்றுவதற்கு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து,நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் 5 சட்டவிரோத ரயில்வே கடவைகளை அகற்றுமாறு சிரேஸ்ட் காவற்துறை அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்தோடு இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட சுமார் 30 இடங்களில் வீதி சமிஞ்ஞை கோடுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்படவேண்டும்.அவ்வாறு அமைக்கப்படின் ஏற்படும் வீதிவிபத்துக்களை குறைக்கமுடியம் எனவும்,குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விபததுக்கள் அனைத்தும் பிரதான வீதிக்கும்,பிரதான வீதிகளை இணைக்கும் இணைப்புவீதிகளிற்கும் அண்மையிலேயே இடம்பெறுகின்றன எனவும் சிரேஸ்ட் காவற்துறை அத்தியட்சகர் சுட்டிக்காட்டியதோடு,விபத்துக்களை தடுக்கும் முகமாக உடனடியாக வீதி சமிஞ்ஞை கோடுகள் அமைப்பதை செயற்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதேவேளை யாழ்ப்பாண நகரின் ,ஸ்டான்லி றோட் மற்றும் மின்சார நிலைய வீதிகளில் காணப்படும் வீதி நெரிசல்களை கட்டுப்படுத்தும் முகமாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸாரும் இணைந்து நெரிசலை கட்டுப்படுத்துவதாகவும் இன்றைய தினம் முடிவெடுக்கப்பட்டது.அத்தோடு,சனநெரிசலான வீதிகளில்,போக்குவரத்து காவற்துறையிரை நாளைய தினத்தில் இருந்து கடமையில் ஈடுபடுத்துவதெனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு கடந்த 30 வருடகாலமாக போர் நடைபெற்ற இடம் என்பதால் தற்போது யாழ்.குடாநாட்டில் வாகன பாவனை அதிகரித்து வருகின்றது. ஆனால் யாழ்.குடாநாட்டில் இடப்பற்றாக்குறை நிலுகின்றது குறிப்பாக யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் 27 போக்குவரத்து காவற்துறைரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட் காவற்துறை அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர குறிப்பிட்டார்.

காலை,மாலை வேளைகளில் பாடசாலை மற்றும் பொது இடங்களில் எமது காவற்துறையினர் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுவருகின்றார்கள். எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து யாழ்ப்பணத்தில் நிலவும் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை காணவேண்டும் எனவும் வர்ணஜெயசுந்தர இதன்போது வலியுறத்தினார். மேலும் யாழ்ப்பாணம்,மருதனார்மடம்,மானிப்பாய் பகுதிகளில் வீதி சமிஞ்ஞை விளக்குளை பொருத்த நடவடிக்கை எடுப்பதாகவும் சிரேஸ்ட் காவற்துறை  அத்தியட்சகர் தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம் வர்த்தக சங்க பிரதிநிதிகள்,தனியார்,அரச பேருந்து சங்க பிரதிநிதிகள்,முச்சக்கர வண்டி சங்கத்தினர் மற்றும் இலங்கை மின்சாரசபை,வீதிஅபிவிருத்தி அதிகார சபையினர், யாழ்.மாநகரசபை பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாணப்காவற்துறை  பிரிவுக்குட்பட்ட பொலிஸ்நிலையங்களின் போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

http://globaltamilnews.net/2018/102542/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.