Jump to content

இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்து

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த நாள் தொடக்கம் இலங்கை அராஜகநிலையை நோக்கிவிரைந்துகொண்டிருக்கிறது. அபாயகரமான நிலைவரம் ஒன்று உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

புதிதாக நியமிக்கப்பட்ட தரப்பினர் பாராளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதென்பதை நிரூபிக்கும்வரை சபைக்குள் அக்டோபர் 26 க்கு முன்னர் இருந்த நிலைவரத்தையே அங்கீகரிப்பதற்கு தான் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த திங்கடகிழமை வெளியிட்ட அறிக்கை பதற்றத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.

Mr1.jpg

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் தனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதை காண்பித்த மறுகணமே நிலைமை வழமைக்குத் திரும்பிவிடும் என்பதை சபாநாயகர் குறிப்பாகத் தெரிவித்திருக்கின்ற போதிலும், பெரும்பான்மையைக் காட்டுவதற்கான நடைமுறைகள் பற்றி தெளிவெதுவும் இல்லை.

1978 ஆம் ஆண்டில் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும்  மகாதேசாதிபதி அல்லது ஜனாதிபதி சிம்மாசனப் பிரசங்கத்தை நிகழ்த்தும் நடைமுறை இருந்துவந்தது. அந்தப் பிரசங்கம் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. சிம்மாசனப் பிரசங்கம் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டால் அது பதவியில் இருந்த பிரதமரின் அரசாங்கத்தின் தோல்வியாகவே கருதப்படும். அவ்வாறு 1964 ஆம் ஆண்டில் ஒரு தடவை நடைபெற்றது.         

தற்போதைய அரசியலமைப்பின் கீழ் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரைத் தொடக்கிவைத்து ஜனாதிபதி கொள்கை விளக்கவுரை நிகழ்த்துகிறார். ஆனால், அது கட்டாயமானதல்ல. அவ்வாறு அவர் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தினாலும்கூட அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழமையல்ல. அது கட்டாயமானதுமல்ல.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அல்லது ஆளும் கட்சியில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு மாறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்தப்படுகிறது. அவ்விரு நாடுகளிலும் மாநில சட்டசபைகளிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.        

ஆனால், இலங்கையில் தற்போதைய அரசியலமைப்பில் எதிரணியினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்ற சந்தர்ப்பத்தைத் தவிர, பிரதமர் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கவேண்டிய தேவைக்கான ஏற்பாடு எதுவும் இல்லை.

ஆனால், இப்போது இலங்கை பாராளுமன்றத்தில்  பிரதமர் யார்? பாராளுமன்றத்தின் முன்னைய நிலைவரத்தையே தான் அங்கீகரிப்பதால் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் என்று சபாநாயகர் கூறுகிறார். அதேவேளை, பாராளுமன்றத்தை நவம்பர் 14 கூட்டவிருக்கும் ஜனாதிபதி தன்னால் இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தின் பிரகாரம் பிரதமராக மகிந்த ராஜபக்சவையே பிரதமராக அங்கீகரிக்கிறார்.            

நடைமுறையில் நோக்கும்போது பாராளுமன்றம் கூடும்போது மகிந்த ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் சபைக்குள் எங்கே அமரப்போகிறார்கள்? வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாராளுமன்றத்திற்குள் பிரதமரின் ஆசனம் ராஜபக்சவுக்கே ஒதுக்கப்படும் என்று சபாநாயகரால் வெளியிடப்பட்ட முன்னைய அறிவிப்பு அவர் பின்னர் சபைக்குள் முன்னர் இருந்த நிலைவரத்தையே அங்கீகரிப்பதாக எடுத்த நிலைப்பாட்டினால் செல்லுபடியாகாததாகின்றது. அதன் பிரகாரம்  பிரதமர் ஆசனத்தில் விக்கிரமசிங்கவே அமருவார். அவர் அவ்வாறு செய்வதற்கு ராஜபக்ச விசுவாசிகள் அனுமதிப்பார்களா? இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்புக்கு அது வழிவகுக்குமா? அத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்கு அனுமதிக்கலாமா?

ராஜபக்ச விசுவாசிகளும் விக்கிரமசிங்க விசுவாசிகளும் சபைக்குள் எந்தப் பக்கத்தில் அமரப்போகிறார்கள்? ஏட்டிக்குப்போட்டியாக இரு தரப்பிரரும் ஆளும் கட்சி பக்கத்தில் அமருவதற்கு மோதிக்கொள்வார்களா? பாராளுமன்ற அலுவல்களைப் பொறுத்தவரை ஏக அதிகாரம் கொண்டவர் என்றவகையில் சபாநாயகர் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துவைக்கப்போகிறார் என்பது தெளிவில்லை. ஏனென்றால் எமது நாட்டில் இத்தகைய சூழ்நிலை முதல் தடவையாக இப்போதுதான் ஏற்பட்டிரு்கிறது.

பாராளுமன்றம் கூடவிருக்கின்ற தினத்தில் இரு தரப்பினரும் தங்களது  ஆதரவாளர்களை ஆயிரக்கணக்கில் கொழும்புக்குள் கொண்டுவரவும் கூடும் அவ்வாறு நிகழுமானால் , பாராளுமன்றத்திற்குள் நிகழக்கூடிய எந்தவொரு துரதிர்ஷ்டவசமான சம்பவமும் வீதிக்கலகமாக மாறக்கூடிய ஆபத்தை நிராகரிப்பதற்கில்லை. இன்றைய அரசியல் நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை எதுவும் தோன்றாதிருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக  நிதானத்துடனும் விவேகத்துடனும் செயற்பட்டு  இணக்கபூர்வமான முறையில் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவார்களா? 

நவம்பர் 14 சபாநாயகர் ஒருவாறாக நிலைவரத்தை சுமுகமாகக் கையாண்டு,  பிரதமர் பதவிக்கு போட்டிபோட்டு உரிமைகோரிக்கொள்கின்ற இருவரில் எவராவது தனக்கு சபைக்குள்  பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபித்தாலும் கூட இந்த பாராளுமன்றம் அதன் எஞ்சிய காலத்துக்கு எந்தத் தரப்புக்குமே அறுதிப்பெரும்பான்மை இல்லாத ஒரு தொங்கு பாராளுமன்றமாகவே தொடரக்கூடிய சாத்தியமே இருக்கிறது.

அதனால், இரு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றி புதிய பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கவேண்டும் என்பதே பெரும்பாலான அரசியல் அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது. 2020 பெப்ரவரி வரை பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கு அரசியலமைப்பு அனுமதிக்காதென்பதால் இதுவே அரசியல் உறுதிப்பாடின்மை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான உருப்படியான வழி போலத் தெரிகிறது.

(வீரகேசரி இணையத்தள அரசியல் ஆய்வுக்களம் )

 

http://www.virakesari.lk/article/44066

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.