Jump to content

விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும்

viyalenthiran-300x225.jpg

வன்னி இனப்படுக்லைக்குப் பின்னால், பல் வேறு நாடுகளின் அதிகாரவர்க்கங்கள் மட்டுமல்ல, புலம்பெயர் அரச ஆதரவாளர்கள், புலிகளின் ஆதரவாளர்களின் வியாபார நோக்கம்ங்களும் காணப்பட்டதை இன்றைய அரசியல் சூழல் மீண்டும் வெளிப்படுத்துகிறது.


இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடந்திய மகிந்த ராஜபக்சவின் கோடிகளுக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விலை போன பின்னர், வெளியாகும் எதிர்வினைகள் மறுபடி ஒருமுறை அணிகளை தெளிவாக வரையறுத்துக்காட்டுகிறது.

கிழக்கு மாகாணத்தின் மீது யாழ்ப்பாண மேலாதிக்கம் திணிக்கப்பட்டிருந்ததையும் அது தொடர்வதையும் யாரும் மறுக்க முடியாது. இவ்வாறான சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான உணர்வை ஒடுக்கும் அரசுகளுக்கு ஆதரவாக மாற்றும் ஒரு கும்பல் வியாழேந்திரன் விலைபோனதை எதிர்த்தால் யாழ் மையவதம் எனக் கிளம்பிவிடுகிறது.

பேரினவாதிகளுக்கும், ஒடுக்குமுறையாளர்களுக்கும் ஆதரவான அனைத்து ஆயுதங்களையு ம் தேடித்தேடிப் பொறுக்கும் இக் கும்பல்கள் இன்று பிரதேச வாதத்தின் ஊடாக வியாழேந்திரனை நியாயப்படுத்துகிறது.

ரனில் என்ற இலங்கையின் மேல்தட்டு மனிதனின் ஆட்சிக் காலத்தில் வெறுப்படைந்த சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் மகிந்த ஆட்சிக்கு வந்ததும் தமது அன்றாட வாழ்க்கை வளமாகும் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். நாளாந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறுகிய காலத்துள் இரண்டுமடங்காக உயர்த்திய ரனிலின் நான்கு வருட ஆட்சி மகிந்தவிற்கு ஆதரவாக மக்களை மாற்றியிருக்கிறது,

அப்படியிருந்தும் மகிந்தவிற்கு ஆதரவாக சிங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி வகுக்கவில்லை. தமது தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கு மகிந்த தேவை என்ற முட்டாள் தனமான வாதத்தை முன்வைக்கவில்லை. மகிந்தவிடம் இணைந்தவர்கள் கடுமையாக ஊடகங்களின் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இன்று மக்களைச் சாரி சாரியாகக் கொன்று குவித்த ஒரு கிரிமினல் மீண்டும் அரசாள முன்வைந்த போது எந்தக் கூச்சமும் இல்லாமல் வெறும் பணத்திற்காக இணைந்து கொள்ளும் வியாழேந்திரன் எமது சமூகத்தின் சாபக்கேடு.

தான் மதிக்கும் ஒரே தமிழ் அரசியல்வாதி விக்னேஸ்வரன் எனக் கூறும் வியாழேந்திரன் அவரைத் தான் ஒரு காலத்திலும் எதிர்க்கப்போவதில்லை என்கிறார்.

மகிந்த என்று இதுவரை பெயர் குறிப்பிடாவிட்டாலும், இனப் படுக்லைக்கு நியாயம் பெற்றுத் தருவதாக பூவோடும் பொட்டோடும் முழங்கி வந்த விக்னேஸ்வரன் இப்போது எங்கே என்ற கேள்வி இத்தோடு தொக்கி நிற்பது இயல்பானது

விக்னேஸ்வரனும் விசிறிகளும் மூச்சுக்கூட விடாமல் மதில்மேல் பூனையாகி விட்டதன் உள்ளார்த்தம் என்ன?
இதுதான் வியாழேந்திரனின் அரசியல் வரலாற்றின் கடைசி அத்தியாயம். இனிமேல் அவர் காணாமல் போய்விடுவார். ஆனால், இன்னும் ஒரு முறை விக்னேஸ்வரன் மகிந்தவோடு குடும்பசகிதம் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தும் அரசியலில் இருப்பார். சிலவேளைகளில் தமிழ்த் தேசிய முன்னோட்டியாகக் கூட முன்னிறுத்தப்படுவார். ஆக, விக்னேஸ்வரனுக்கும் வியாழேந்திரனுக்கும் இடையிலான இடைவெளியில் தான் யாழ் மையவாதம் குடியிருக்கிறது, தவிர, இரண்டு முகங்களுமே வரலாற்றில் தமிழ்ப் பேசும் மக்களின் சாபக்கேடுகள் தான்.

 

http://inioru.com/viyaalenththiran-and-separatism/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி வியாளேந்திரன் விலை போனவர் என்றால் 

இது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புகளின்றி முழு ஆதரவையும் கொடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு பெயரென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

விக்னேஸ்வரனும் விசிறிகளும் மூச்சுக்கூட விடாமல் மதில்மேல் பூனையாகி விட்டதன் உள்ளார்த்தம் என்ன?
இதுதான் வியாழேந்திரனின் அரசியல் வரலாற்றின் கடைசி அத்தியாயம். இனிமேல் அவர் காணாமல் போய்விடுவார். ஆனால், இன்னும் ஒரு முறை விக்னேஸ்வரன் மகிந்தவோடு குடும்பசகிதம் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தும் அரசியலில் இருப்பார். சிலவேளைகளில் தமிழ்த் தேசிய முன்னோட்டியாகக் கூட முன்னிறுத்தப்படுவார். ஆக, விக்னேஸ்வரனுக்கும் வியாழேந்திரனுக்கும் இடையிலான இடைவெளியில் தான் யாழ் மையவாதம் குடியிருக்கிறது, தவிர, இரண்டு முகங்களுமே வரலாற்றில் தமிழ்ப் பேசும் மக்களின் சாபக்கேடுகள் தான்.

இதை எழுத எவ்வளவு கிடைத்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு சேவை செய்ய 
மகிந்தவுடன் சேர்ந்தார் எனும் கருத்தை 
என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது 

மேலிருக்கும் கட்டுரையும் வெறும் காழ்ப்புணர்ச்சியை கொண்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை எழுத எவ்வளவு கிடைத்தது?

கூட்டமைப்புக்காக  கூவிய.... கட்டுரை எழுதியவருக்கு,  அடுத்த தேர்தலில்..   கூட்டமைப்பு  ஒரு சீட்  கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதை எழுத எவ்வளவு கிடைத்தது?

கொள்கைப் பிடிப்பு மட்டும் உள்ளதால் இனியொருகாரர் காசுக்கு கட்டுரை வடிப்பதில்லை.

 விக்கி ஐயா கட்சி தொடங்கிய பின்னர் தெற்கில் அரசியல் பூகம்பம் வந்தது. ஐயா ஏதும் சொன்னமாதிரித் தெரியவில்லையே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கொள்கைப் பிடிப்பு மட்டும் உள்ளதால் இனியொருகாரர் காசுக்கு கட்டுரை வடிப்பதில்லை.

 விக்கி ஐயா கட்சி தொடங்கிய பின்னர் தெற்கில் அரசியல் பூகம்பம் வந்தது. ஐயா ஏதும் சொன்னமாதிரித் தெரியவில்லையே!

கிருபன் கொள்கை பிடிப்பென்றால் வியாளேந்திரன் மட்டுமல்ல மற்றையகூட்டணியில் இருக்கும் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமைக்கு எதிராக எப்பப்ப ஏன் போர்க்கொடி ஏந்துகிறார்கள் என்ன பிரச்சனை என்று கண்டறிந்திருக்க வேண்டும்.

எனக்கும் கூட அவர் கட்சி தாவியதில் வருத்தம் தான்.ஆனால் ஒரு குடும்பத்தின் தலைவன் குடித்து கூத்தாடி வேறு பெண்களுடன் கூத்தாடிக் கொண்டிருந்தால் அவன் மனைவி என்ன செய்வாள்?யாருடனாவது போய் குடும்பம் நடத்தத் தான் யோசிப்பாள்.அது தான் இங்கேயும் நடந்திருக்கிறது.வியாளேந்திரன் துரோகியல்ல துரோகியாக்கப்பட்டார்.

அடுத்து மேலே உள்ள கட்டுரையில் விக்கியரை இழுத்து சீண்டியிருக்கிறார்களே ஏன்? அவருக்கும் இதற்கும் என்ன தான் தொடர்பு?
விக்கியருக்கும் கூட்டணிக்கும் பிரச்சனை வந்ததே கூட கதைக்கிறார் வெளிநாட்டுக்காரர் வர அரசைப் போட்டுக் கொடுக்கிறார்(அரசைப்பற்றிய உண்மையை)என்று தான்.இப்போ அவர் எந்த உறுப்பினருமில்லாத நிலையில் அவர் ஏன் வாய் திறக்க வேண்டும்?
என்ன அதை வைத்து ஏதாவது கட்டுரை எழுதி பிழைக்கலாம் என நினைத்திருப்பார்களோ?
ஊடகம் என்பது உண்மையை எழுத வேண்டுமே தவிர பக்கச் சார்பாக இருக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியொருகாரர் இடதுசாரிகள். சுத்துமாத்து அரசியல்வாதிகள் எல்லோருக்கும் எதிரானவர்கள். இதில் விக்கியரும், சம்பந்தர், சுமந்திரரும் அடக்கம். என்ன பாட்டாளிகள் ஒன்றுபட்டு உலகப்பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காணலாம் என்ற நினைப்பில் இப்பவும் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இனியொருகாரர் இடதுசாரிகள்.

வாசுதேவாவும் இடதுசாரி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

கொள்கைப் பிடிப்பு மட்டும் உள்ளதால் இனியொருகாரர் காசுக்கு கட்டுரை வடிப்பதில்லை.

 விக்கி ஐயா கட்சி தொடங்கிய பின்னர் தெற்கில் அரசியல் பூகம்பம் வந்தது. ஐயா ஏதும் சொன்னமாதிரித் தெரியவில்லையே!

 

ஆனாலும் வியாழேந்திரனது முடிவை விக்கினேஸ்வரன் அய்யாவின் அரசியலுடன் முடிச்சுப் போடுவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

ஆனாலும் வியாழேந்திரனது முடிவை விக்கினேஸ்வரன் அய்யாவின் அரசியலுடன் முடிச்சுப் போடுவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்

அது தான் வாத்தியார் எனக்கும் விளங்கவேயில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.