Jump to content

ஈராக்கில் 200 க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகளை விட்டுச்சென்ற ஐ.எஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் 200 க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகளை விட்டுச்சென்ற ஐ.எஸ்

iraq-720x450.jpg

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான சடலங்களைக் கொண்ட 200 க்கும் மேற்பட்ட மனிதப்புதைகுழிகள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்புதைகுழிகள் 12000 வரையான சடலங்களைக் கொண்டிருக்கக்கூடுமென ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் ஈராக்கின் சிலபகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ் குழு, அப்பகுதிகளில் மிகவும் கொடூரமான ஆட்சியை நடத்தியதுடன் தமக்கு எதிராக செயற்பட்ட அனைவரையும் கொன்று குவித்தது.

பின்னர் அமெரிக்காவின் ஆதரவுடன் ஈராக் அரசு முன்னெடுத்த தாக்குதல்களினால் ஐ.எஸ் குழு தோற்கடிக்கப்பட்ட போதிலும்கூட இப்போதும் சில பகுதிகள் ஐ.எஸ் குழுவின் செயற்பாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்புதைகுழிகள் மற்றும் சான்றுகள் அடங்கிய அறிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு மட்டுமல்லாமல், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை வழக்குகள் ஆகியவற்றை வழக்கறிஞர்கள் முன்னெடுப்பதற்கு உதவுமென நம்பப்படுகிறது.

இதுவரையில் 202 மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நினேவா என்னுமிடத்தில் 95, கிர்குக் எனுமிடத்தில் 37, சலாஹ் அல் தின் எனுமிடத்தில் 36, அன்பார் எனுமிடத்தில் 24 என்ற எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்புதைகுழிகள் 6,000 முதல் 12,000 வரையான சடலங்களைக் கொண்டிருக்கக்கூடுமென தெரிவித்துள்ள விசாரணையாளர்கள், இச்சடலங்கள் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், குறைபாடுகள் உள்ளவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஈராக்கிய பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் என பலருடையதாகவும் இருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஈராக்கில்-200-க்கும்-அதிகமா/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.