Jump to content

தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும் ஸ்திரமான நிலையை அடைந்தது இங்கிலாந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும் ஸ்திரமான நிலையை அடைந்தது இங்கிலாந்து

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 91 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்து ஸ்திரமான நிலையை அடைந்தது.

root.jpg

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று கால‍ை 10:30 மணிக்கு காலியில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மத்திய தர வீர்களின் நிதானமான துடுப்பாட்டம் காரணாக முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்து வலுவான நிலைக்கு சென்றது.

eng.jpg

இங்கிலாந்து அணி சார்பாக பென் போக்ஸ் 87 ஓட்டத்தையும், சாம் குர்ரன் 48 ஓட்டத்தையும், ஜென்னிங்ஸ் 46 ஓட்டத்தையும், பட்லர் 38 ஓட்டத்தையும், ரூட் 35 ஓட்டத்தையும், அடீல் ரஷித் 35 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

fockes.jpg

ஆடுகளத்தில் 87 ஓட்டத்துடன் ரூட்டும், ஜெக் லேச் 14 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றுவான் பெரேரா 4 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்சய மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும். 

 

http://www.virakesari.lk/article/43982

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் டெஸ்டிலேயே சதமடித்தார் இங்கிலாந்தின் பென் போக்ஸ்

முதல் டெஸ்டிலேயே சதமடித்தார் இங்கிலாந்தின் பென் போக்ஸ்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில்  இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் பென்போக்ஸ் சதமடித்துள்ளார்.

காலியில் இடம்பெறும் முதலாவது டெஸ்டில் அவர் சதம் பெற்றுள்ளார்

இரண்டாவது நாளான இன்று பென்போக்ஸ் 202 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி திணறிக்கொண்டிருந்தவேளை அவர் சாம் குரான் அடில் ரசீட் ஆகியவர்களுடன் இணைந்து இங்கிலாந்து அணியை பலப்படுத்தினார்.

சாம் குரானுடன் இணைந்து 88 ஓட்டங்களை பெற்ற பென்போக்ஸ் பட்லருடன் இணைந்து 61 ஓட்டங்களையும் அடில் ரசீத்துடன் இணைந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

முதல் நாள் மதிய போசன இடைவேளைக்கு முன்னதாக பட்லருடன் இணைந்து போக்ஸ் முதிர்ச்சியையும் நிதானத்தையும் வெளிப்படுத்தியதுடன் ஓட்டங்களை மெதுமெதுவாக பெறத்தொடங்கினார்.

அவர் தனது 44 பந்திலேயே முதல் பவுன்டரியை பெற்றார்.

ben_foakess_2.jpg

பென்போக்சின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்சில் 342 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தனது முதல் டெஸ்டில்  சதம்பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணிக்க்காக முதல் டெஸ்டில் சதம் பெற்ற விக்கெட் காப்பாளர்கள் வரிசையில் பென் போக்ஸ் இணைந்துகொண்டுள்ளார்.

இதேவேளை தனது இனிங்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள  பென்போக்ஸ் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக்கின் வீடியோ செய்தியொன்றே தனக்கு உத்வேகத்தை அளித்தது என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான வீடியோ செய்தியை வெளியிடுமாறு குக்கிக்கிற்கு தெரிவித்தது யார் என்பது தெரியாது ஆனால் அது மிகச்சிறந்ததாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைவரும் அதனை பார்த்தோம் உத்வேகம் பெற்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/44004

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

203 ஓட்டத்துக்குள் சுருண்டது இலங்கை ; ஸ்திரமான நிலையில் இங்கிலாந்து

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 12 ஓட்டங்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றுள்ளது.

eng.jpg

நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலாம் நாள் முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் இன்னிங்ஸில் 91 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்திருந்த வேளை முதலாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

ஆடுகளத்தில் 87 பென் போக்ஸ், ஜெக் லேச் 14 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் 321 ஓட்டத்துடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களை பெற்றது.

‍இங்கிலாந்து அணி சார்பில் பென் போக்ஸ் 107 ஓட்டத்தையும், ஜென்னிங் 46 ஓட்டத்தையும், சாம் குர்ரன் 48 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

ben.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றூவான் பெரோ 5 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்சய மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 68 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

out.jpg

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 52 ஓடத்தையும், தினேஷ் சந்திமால் 33 ஓட்டத்தையும், திக்வெல்ல 28 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொணடனர்.

math.jpg

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் மொய்ன் அலி 4 விக்கெட்டுக்களையும், ஜேக் லேச், அடீல் ரஷத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அண்டர்சன் மற்றும் சாம் குர்ரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந் நிலையில் 139 ஓட்ட முன்னிலையில் இன்றைய தினமே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது எதுவித விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களுக்கு 32 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் ரோரி பன்ஸ் 11 ஓட்டத்துடனும், ஜென்னிங் 26 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.

http://www.virakesari.lk/article/44040

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் – இலங்கைக்கு 462 வெற்றி இலக்கு!

DrfEmCzWsAAW5Zw.jpg

இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 462 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், தமது இரண்டாவது இன்னிசிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, விக்கட் இழப்பின்றி 15 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இரண்டு நாட்கள் முழுமையாக மீதமுள்ள நிலையில், இலங்கை அணி வெற்றி பெற 10 விக்கட்டுக்கள் கைவசமிருக்க இன்னும் 447 ஓட்டங்களைப் பெறவேண்டும்.

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி காலியில் நடைபெற்று வருகின்றது.

இதில் 462 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இழப்பின்றி 15 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

களத்தில் திமுத் கருணாரத்ன 7 ஓட்டங்களுடனும், கௌஷல் சில்வா சில்வா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

இன்னும் இரண்டு நாட்கள் முழுமையாக மீதமுள்ள நிலையில், இலங்கை அணி வெற்றி பெற 10 விக்கட்டுக்கள் கைவசமிருக்க 447 ஓட்டங்களைப் பெறவேண்டும்.

138 ஓட்டங்கள் முன்னிலையுடன் நேற்றைய தினம் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 6 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், ஜென்னிங்க்ஸ் ஆட்டமிழக்காது 146 ஓட்டங்களைப் பெற, பென் ஸ்டோக்ஸ் 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில், தில்ருவன் பெரேரா, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

முன்னதாக தமது முதல் இன்னிங்சிங்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 342 ஓட்டங்களையும், இலங்கை அணி 203 ஓட்டங்களையும் பெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/இங்கிலாந்திற்கு-எதிரான-ம/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிய உணவு இடைவேளை: இலங்கை நிதான துடுப்பாட்டம்

SSL-SLjpg-720x450.jpg

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், 462 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி காலியில் நடைபெற்று வருகின்றது.

இதில் 462 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களுடன் இன்றைய நான்காம் நாளில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி, மதிய உணவு இடைவேளையில், 3 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

களத்தில் குசால் மென்டிஸ் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

138 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், ஜென்னிங்க்ஸ் ஆட்டமிழக்காது 146 ஓட்டங்களைப் பெற, பென் ஸ்டோக்ஸ் 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில், தில்ருவன் பெரேரா, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

முன்னதாக தமது முதல் இன்னிங்சிங்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 342 ஓட்டங்களையும், இலங்கை அணி 203 ஓட்டங்களையும் பெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/மதிய-உணவு-இடைவேளை-இலங்கை/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.