Jump to content

தலைவர் சமபந்தருக்கு வாழ்த்து- வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

எங்கள் அன்புக்குரிய தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
.
இன்றய அரசியல் நெருக்கடியை நீங்கள் கையாளும் ராஜதந்திரம் பாராட்டுக்கு உரியது. சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் தமிழ் மக்களின் உரிமைகளையும் இணைத்து வெற்றிபெற பிரார்த்திக்கிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கவிஞரே போறபோக்கைப் பார்த்தா அடுத்த தேர்தலில் உங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்குவார்கள் போல.

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லும்போது தீபாவளிக்கு தீர்வு வருமென்றாரே அது மறந்து போச்சோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன கவிஞரே போறபோக்கைப் பார்த்தா அடுத்த தேர்தலில் உங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்குவார்கள் போல.

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லும்போது தீபாவளிக்கு தீர்வு வருமென்றாரே அது மறந்து போச்சோ?

அதையெல்லாம் கேட்கக்கூடாது .....வாழ்த்துடன் நிப்பாட்டிப்போடனும் 
கவிஞர்  கடுப்பாயிடுவார் ...எந்தத்தீபாவளி என்று சாணக்கியர் சொன்னாரா ....?
நீங்களாக ஒன்றை கற்பனை பண்ணினால் அதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியுமா ...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, poet said:

இன்றய அரசியல் நெருக்கடியை நீங்கள் கையாளும் ராஜதந்திரம் பாராட்டுக்கு உரியது

வருசா வருசம் அடுத்த தீபாவளிக்கிடையிலை பிரச்சனை முடிப்பம் எண்டு சொல்லுறதை ராஜதந்திரமாம் எல்லே :grin: :grin: :grin: :grin: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, poet said:

எங்கள் அன்புக்குரிய தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
.
இன்றய அரசியல் நெருக்கடியை நீங்கள் கையாளும் ராஜதந்திரம் பாராட்டுக்கு உரியது. சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் தமிழ் மக்களின் உரிமைகளையும் இணைத்து வெற்றிபெற பிரார்த்திக்கிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

அப்படி என்ன ராஜதந்திரம் செய்து கிழித்துவிடடார்?

மகிந்த மேற்கை கூல் பண்ணவும் சில தமிழ் அரசியல் வாதிகளை விலை பேசவும் 
தனது இன வாதத்தை மறைக்கவும் 
ஏற்கனவே சொல்லிவிட்டார் சாணக்கியர்தான் எதிர்க்கடசி தலைவர் என்று 
(அது எவ்வாறு என்று யாருக்கும் புரியவில்லை?) 

சாணக்கியர் வாயுக்குள் இருக்கும் கொழுக்கடையை வெளியிலே 
எடுத்துவிட்டு சொல்வாரா ... ஜநாயகத்துக்கும் அரசியல் யாப்புக்கும் 
எதிரான அரசில் நான் எதிர்க்கடசி தலைவராக இருக்க மாட்டேன் என்று? 

செக்கோ சிவலிங்கமோ எதையும் நக்குவதுதான் ராஜதந்திரமா?

ராஜதந்திரம் என்பது எந்த சூழலிலும் 
எந்த பூகோள அமைவிலும் 
உங்களின் கொள்கைகளை வென்று எடுப்பது.

அடுத்த பெரும்பான்மை ஆசனம் வைத்திருப்பது 
ஐ தே கட்சி  எதிர்கட்சி தலைவராக இருக்க போவது 
அவர்கள்தான் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.

இதை கருத்தில் எடுத்தாவது நான் மேலே சொன்னதை கூறி 
குறைந்த பட்ஷம் சிங்கள ஜெனாயகவாதிகளிடம் என்றாலும் 
ஓசியில் ஒரு நல் எண்ணத்த்தை பெற்று இருக்கலாம்.

தலைவர் ஏன் பம்புறார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, poet said:

எங்கள் அன்புக்குரிய தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
.
இன்றய அரசியல் நெருக்கடியை நீங்கள் கையாளும் ராஜதந்திரம் பாராட்டுக்கு உரியது. சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் தமிழ் மக்களின் உரிமைகளையும் இணைத்து வெற்றிபெற பிரார்த்திக்கிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

ஊரில இருக்குற ஆட்களிடம் உத சொல்லிடாதீங்க கவிஞரே  செம கடுப்பில இருக்கானுகள் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

புலவர்களுக்குள் (poet)சர்ச்சை இருக்கலாம் . சாந்தமாக ..

Link to comment
Share on other sites

கவிஞரே இவ்வளவு பேருக்கும் அதென்ன இராஜதந்திரம் என  காதுக்குள் கூற முடியுமா?? யாருக்கும் சொல்ல மாட்டோம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

கவிஞரே இவ்வளவு பேருக்கும் அதென்ன இராஜதந்திரம் என  காதுக்குள் கூற முடியுமா?? யாருக்கும் சொல்ல மாட்டோம்.:grin:

இதைத்தான்  போன  கிழமை  குறிப்பிட்டேன்

தங்களை நல்லவர்களாக  காட்ட

அல்லது பரிசுத்தராக  காட்ட

தமிழர் நலன்களை  பலி கொடுக்கிறார்கள்  என்று

இங்கையும் அது தான்

சம்பந்தரோடு  உறவை  வலுவாக்க

அவருக்கு  மகுடம்

தமிழருக்கு  சம்பந்தர் செய்தவை...................??????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

இதைத்தான்  போன  கிழமை  குறிப்பிட்டேன்

தங்களை நல்லவர்களாக  காட்ட

அல்லது பரிசுத்தராக  காட்ட

தமிழர் நலன்களை  பலி கொடுக்கிறார்கள்  என்று

இங்கையும் அது தான்

சம்பந்தரோடு  உறவை  வலுவாக்க

அவருக்கு  மகுடம்

தமிழருக்கு  சம்பந்தர் செய்தவை...................??????????????????

அவற்றை வெளியே சொல்ல முடியாது அவையெல்லாம் இராஜதந்திரமும் சாணக்கியமும் நிறைந்த ஊமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அவற்றை வெளியே சொல்ல முடியாது அவையெல்லாம் இராஜதந்திரமும் சாணக்கியமும் நிறைந்த ஊமல்.

 

 தமிழரின் தலையில்

60  வருடங்களுக்கும் மேலாக அரைக்க முடிகிறதே

அந்த  இராஜதந்திரமும் சாணக்கியமும் நிறைந்த ஊமல்.

அது தானே  அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

 

 தமிழரின் தலையில்

60  வருடங்களுக்கும் மேலாக அரைக்க முடிகிறதே

அந்த  இராஜதந்திரமும் சாணக்கியமும் நிறைந்த ஊமல்.

அது தானே  அண்ணா?

தமிழர் தரப்பிற்கு சந்தர்ப்பங்கள் வராவிட்டால் எம்மை நாமே நொந்து கொள்ளலாம்.


ஆனால் தமிழர் தரப்பு அமிர்தலிங்கம் தொடக்கம்  சம்பந்தன் போன்ற அரசியல்வாதிகளுக்கு   இன்றுவரைக்கும்  நிறைய சந்தர்ப்பங்கள் வந்து போயிருக்கின்றன. அவற்றையெல்லாம் சாதகமாக பயன்படுத்தாமல் அதை இன்றும் ராஜதந்திரம், சாணக்கியம் என்று புகழ் பாடிக்கொண்டிருந்தால்.................

நாம் பல்லை நெருடுவதைத்தவிர வேறென்ன செய்வது?

இன்னுமொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

வெளிநாட்டு ராஜதந்திரிகளோ அல்லது தூதுவர்களோ இல்லையேல் பிரமுகர்களோ ஈழத்தமிழர் பிரச்சனை என்று வரும் போது சம்பந்தனை மட்டுமே சந்திக்கின்றார்கள்.

அந்தளவிற்கு வலிமையான தலைவர் அவர்.

இருந்தும் என்ன பலன்?


வெளிநாட்டு பிரமுகர்கள் ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக டக்ளசையோ கருணாவையோ பிள்ளையானையோ தவராசாவையோ சிவாஜிலிங்கத்தையோ சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.

ஏனென்றால் தமிழர் பிரச்சனையென்று வரும் போது அனைவருக்கும் தெரிந்த ஒரேயொரு முகம்,பெயர் சம்பந்தன் மட்டுமே.

அதையும் பாழடிக்கின்றது அந்த கும்பல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

தமிழர் தரப்பிற்கு சந்தர்ப்பங்கள் வராவிட்டால் எம்மை நாமே நொந்து கொள்ளலாம்.


ஆனால் தமிழர் தரப்பு அமிர்தலிங்கம் தொடக்கம்  சம்பந்தன் போன்ற அரசியல்வாதிகளுக்கு   இன்றுவரைக்கும்  நிறைய சந்தர்ப்பங்கள் வந்து போயிருக்கின்றன. அவற்றையெல்லாம் சாதகமாக பயன்படுத்தாமல் அதை இன்றும் ராஜதந்திரம், சாணக்கியம் என்று புகழ் பாடிக்கொண்டிருந்தால்.................

நாம் பல்லை நெருடுவதைத்தவிர வேறென்ன செய்வது?

இன்னுமொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

வெளிநாட்டு ராஜதந்திரிகளோ அல்லது தூதுவர்களோ இல்லையேல் பிரமுகர்களோ ஈழத்தமிழர் பிரச்சனை என்று வரும் போது சம்பந்தனை மட்டுமே சந்திக்கின்றார்கள்.

அந்தளவிற்கு வலிமையான தலைவர் அவர்.

இருந்தும் என்ன பலன்?


வெளிநாட்டு பிரமுகர்கள் ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக டக்ளசையோ கருணாவையோ பிள்ளையானையோ தவராசாவையோ சிவாஜிலிங்கத்தையோ சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.

ஏனென்றால் தமிழர் பிரச்சனையென்று வரும் போது அனைவருக்கும் தெரிந்த ஒரேயொரு முகம்,பெயர் சம்பந்தன் மட்டுமே.

அதையும் பாழடிக்கின்றது அந்த கும்பல்.

அப்படியும் பார்க்கலாம்   அண்ணா

அல்லது  நல்ல  கொழுத்த  ஆடாக அவர்களே  வளர்த்து  எடுத்துவிட்டார்கள்  என்றும் எடுத்துக்கொள்ளலாம்

அதற்கு  சாட்சியாக அவர்கள் தமிழர்  நலன்  சார்ந்து எதுவுமே பேசுவதுமில்லை

எந்த  முடிவுகளும்  எடுப்பதில்லையே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே, ஒருவரை வாழ்த்துவதும் வைவதுவும் உங்கள் உரிமை.

ஆனால், ராஜதந்திரத்தில் ஏறிய சம்பந்தன், எதுவரைக்கும் பயணிப்பது, மற்றும் எங்கு இறங்குவது  பற்றி தெளிவாக இருக்கவேண்டும்.

இது தான் விக்கி ஐயா அவர்களும், வேறு மொழியில் கூறிவருகிறார்.

Link to comment
Share on other sites

நலமா ஈழப்பிரியன்?  ” என்ன கவிஞரே போறபோக்கைப் பார்த்தா அடுத்த தேர்தலில் உங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்குவார்கள் போல.”

உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. என்னைத் தேடிவராத பதவிகள் குறைவு. வன்னியில் முக்கிய பணிகள் செய்தேன். ரஜதந்திர பதவி தொடர்பாகக் கேட்டபோது முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும் எல்லைப்புற சிங்கள மக்கள் தொடர்பாகவும்  உலகம் அங்கீகரிக்கக்கூடிய ஒரு நிலைபாட்டை எடுப்பதை முன் நிபந்தனையாக வலியுறுத்தினேன். தோழர் அஸ்ரப் உட்பட பலர் நான் பொறுப்புகளில் இருக்க வேண்டுமென விரும்பினார்கள்.  தங்களுக்கு ஆற்றும் பணிகளுக்கான  தங்கள் உதவிகளை நான் மறுப்பது தொடர்பாக அதனால் என் பணிகள் முடங்குவது தொடர்பாக கவலைபட்ட வன்னி என்னை நோர்வே வெளிஉறவு அமைச்சில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளையாவது ஏற்றுக்கொள்ளுங்கள் என வற்புறுத்தினார்கள். அதன் அடிப்படையில் பிறீலான்ஸ் ஆலோசகரக அவ்வப்போது பணிபுரிந்தேன். சின்ன வயதில் சாதி வெறியருக்கு எதிராக வன்முறையாளானாக அரசியலுக்கு வந்தேன். பொலிசுக்கு அடித்தது டாக்ருக்கு அடித்த்து நிவாக சேவை அதிகாரியான டி.எல்,ஓ வுக்கு அடித்து அடைத்துவைத்ததென 1972ல் என்மீதான என்கவுண்டர் என் அதிட்டத்தாலோ/ புத்தியாலோ தோல்வியில் முடிந்தது.  ஆரம்பித்ததில் இருந்து அறத்தின்பால் நண்பனாக நிமிர்ந்து நின்றதே அன்றி பணியாளாக கைகட்டி வாழ்ந்ததில்லை நண்பா. என் சுயசரிதை யில் சொல்லவிருந்த விடயங்கள். முன்கூட்டியே வாய்திறக்க வைத்துவிட்டீங்க. புலி புல்லுதின்பதில்லை நண்பா

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.