Jump to content

வியாழேந்திரன் ஏமாற்றப்பட்டாரா?; இன்று மட்டக்களப்பு செல்கிறார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரன் ஏமாற்றப்பட்டாரா?; இன்று மட்டக்களப்பு செல்கிறார்!

November 6, 2018
45318227_2340499245979998_79482886915484

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அண்மையில் கட்சி தாவி, மஹிந்த அணயை ஆதரிப்பாக அறிவித்துள்ளார் சதாசிவம் வியாழேந்திரன் எம்.பி. மட்டக்களப்பில் அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று அவர் மட்டக்களப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

கட்சி தாவியதால் மட்டக்களப்பில் அவருக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தனக்கு நெருக்கமானவர்களை இன்று மந்திராலோசனைக்காக அழைத்துள்ளார்.

இதேவேளை, கட்சி தாவ வைக்கப்பட்டு தம்மை ஏமாற்றி விட்டார்கள் என வியாழேந்திரன் தரப்பு உணர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வியாழேந்திரன் தரப்பிலிருந்த சிலர் இது குறித்து ஓரளவு வெளிப்படையாக தமது அதிருப்தியை பதிவுசெய்துள்ளதாக, அவர்களிற்கு நெருக்கமான தரப்புக்களிருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

இப்படியான அரசியல் டீல்களில், பேசப்படும் பணத்தை முழுமையான கொடுப்பதில்லை என்பதையும், பகுதி பகுதியாக தரப்படுவதாக சொல்லப்பட்டாலும், முதலாவது தவணைக்கு பின்னர் பனம் வழங்கப்படுவதில்லையென்பதையும் எற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இப்படியான சம்பவமொன்றே வியாழேந்திரன் தரப்பிற்கும் நடந்திருக்கலாமென கருதப்படுகிறது.

இதேவேளை, சுதந்திரக்கட்சியில் இருந்த மஹிந்த எதிர்ப்பாளரான துமிந்த திசாநாயக்க அண்மையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருந்தார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

துமிந்த திசாநாயக்கவை அமைச்சராக பதவியேற்க வைத்தால்- சு.கவில் உள்ள அதிருப்தியணி தலைவரே அமைச்சராகி விட்டார், இனி யாரும் கட்சி தாவ மாட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கலாமென மைத்திரி, மஹிந்த அணி திட்டமிட்டதாக தெரிகிறது. எனினும், பதவியேற்றுவரை துமிந்த அதற்கு சம்மதிக்கவில்லையென்று சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பெரும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டே அவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார் என நேற்று முன்தினம் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியை உறுதிசெய்யும் விதமான தகவலொன்றை தமிழ்பக்கமும் பெற்றிருக்கிறது. துமிந்த திசநாயக்க பதவியேற்றதற்கு மறுநாள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதானியொருவரை சந்தித்து பேசியிருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு என்னவென்பதை அறிந்து கொள்ளவே துமிந்த அந்த சந்திப்பை விரும்பியதாக தமிழ்பக்கத்திற்கு தகவல் தந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.

அந்த சந்திப்பின் இறுதியில், “நான் இப்பொழுது அமைச்சராக்கப்பட்டுள்ளேன். எனது உண்மையான முடிவை சேம்பரில்தான் காட்டுவேன்“ என கூறியதாக தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

துமிந்த திசநாயக்க தற்போது நாட்டைவிட்டு வெளியேறி சென்று விட்டதாக செய்திகள் வெளியாவதும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.pagetamil.com/22328/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.