Jump to content

மத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா?

Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:15 

image_944c696f55.jpg

- தமிழ் மிரரின் விவரணப் பிரிவு

ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை, முக்கியமான நாளாக, இன்றைய தினம் (06) அமைந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அந்நாடு எப்பாதை நோக்கிச் செல்லுமென்பதைத் தீர்மானிக்கின்ற நாளாக இது அமையவுள்ளது. ஐ.அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாள் தான் இது.

image_c99ec12150.jpgமத்தியகாலத் தேர்தல் என்றால்?

ஐ.அமெரிக்காவில், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றம், இரண்டு அவைகளைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை என அழைக்கப்படுவது, கீழவையாகக் காணப்படுவதோடு, செனட் என்று அழைக்கப்படுவது, மேலவையாக உள்ளது. இதில், பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும். செனட்டுக்கான தேர்தலும், 2 ஆண்டுகளுக்கொரு முறை இடம்பெற்றாலும், செனட்டராகத் தெரிவாகும் ஒருவர், 6 ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். எனவே, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கிட்டத்தட்ட மூன்றிலொரு பகுதி செனட்டர்கள், தேர்தலை எதிர்கொள்வர்.

பிரதிநிதிகள் சபையில், வாக்களிக்கும் தகுதிகொண்ட 435 உறுப்பினர்கள் உள்ளனர். செனட்டில், 100 செனட்டர்கள் உள்ளனர்.

ஐ.அமெரிக்காவில், ஜனாதிபதியின் பதவிக் காலம், 4 ஆண்டுகள் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் போது, பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த அனைவருக்குமான தேர்தலும், சுமார் மூன்றிலொரு பங்கு செனட்டர்களுக்குமான தேர்தல் இடம்பெறும்.

அதேபோல், ஜனாதிபதி பதவியேற்று இரண்டு ஆண்டுகளிலும், பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த அனைவருக்குமான தேர்தலும், சுமார் மூன்றிலொரு பங்கு செனட்டர்களுக்குமான தேர்தலும் இடம்பெறும். ஆனால் இத்தேர்தல், மத்தியகாலத் தேர்தல் எனப்படும். ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் நடுவில் இடம்பெறுவதால், அப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

இம்முறை தேர்தலில், செனட்டில், வழக்கமாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய 33 பேரோடு, விசேட தேர்தல் இரண்டும் இடம்பெறவுள்ளன. ஆகவே, 35 செனட்டர்கள், இம்முறை தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

தற்போதைய நிலை

பிரதிநிதிகள் சபையில், 435 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையைப் பெறுவதற்கு, 218 ஆசனங்கள் தேவை. தற்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு, 241 ஆசனங்கள் உள்ளன. ஜனநாயகக் கட்சிக்கு, 194 ஆசனங்கள் உள்ளன.

செனட்டில் உள்ள 100 ஆசனங்களில், கடந்த தேர்தலில் 52 ஆசனங்களை, குடியரசுக் கட்சி வென்றது. ஜனநாயகக் கட்சிக்கு 46 ஆசனங்களும், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து செயற்படும் சுயாதீன வேட்பாளர்களுக்கு 2 ஆசனங்களும் கிடைத்தன. எனவே நடைமுறையில், ஜனநாயகக் கட்சிக்கு 48 ஆசனங்கள் கிடைத்தன.

இதன் பின்னர், அலபாமாவின் செனட்டராகப் பணியாற்றிய ஜெப் செஷன்ஸ், நாட்டின் சட்டமா அதிபராகப் பதவியேற்ற நிலையில், அவரது இடத்துக்கு விசேட தேர்தல் நடத்தப்பட்டது. அதன்போது, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டக் ஜோன்ஸ் வெற்றிபெற்றார். எனவே தற்போது, குடியரசுக் கட்சிக்கு 51 ஆசனங்களும் ஜனநாயகக் கட்சிக்கு 49 ஆசனங்களும் உள்ளன.

பெரும்பான்மையைப் பெற

காங்கிரஸின் இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையைக் கொண்டுள்ள குடியரசுக் கட்சி, தமது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ளக் கடுமையாக முயல்கிறது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெற வேண்டுமாயின், ஆகக்கூடியது 23 ஆசனங்களையே, குடியரசுக் கட்சி இழக்க முடியும். மறுபக்கமாக செனட்டில், ஓர் ஆசனத்தை இழக்க முடியும். செனட்டில் ஓர் ஆசனத்தைக் குடியரசுக் கட்சி இழந்தால், இரு கட்சிகளுக்கும் தலா 50 உறுப்பினர்கள் என்ற நிலை வரும். ஆனால், அப்படியான சமநிலை காணப்பட்டால், வாக்களிப்பின் போது, அந்தச் சமநிலையை முறியடிக்கும் வாக்கை, செனட்டின் தலைவராகச் செயற்படும் உப ஜனாதிபதி அளிக்க முடியும். எனவே, ஓர் ஆசனத்தைக் குடியரசுக் கட்சி இழந்தாலும், அக்கட்சியால் சமாளிக்கக்கூடியதாக இருக்கும்.

அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது?

அண்மைய சில நாள்களில், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கான ஆதரவு சிறிதளவு அதிகரித்திருந்தாலும், அதிகளவில் பிரபலமில்லாத ஒரு ஜனாதிபதியாகவே அவர் உள்ளார். மறுபக்கமாக, அவருக்கெதிரான எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில், “நீல அலை” எனக் கூறப்படும் ஆதரவு அலை, ஜனநாயகக் கட்சியின் பக்கம் வீசுகிறது என்று கருதப்படுகிறது. (ஜனநாயகக் கட்சியின் நிறம் நீலம்; குடியரசுக் கட்சியின் நிறம் சிவப்பு)

அதேபோல், ஐ.அமெரிக்காவின் அண்மைக்கால அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரை, ஜனாதிபதியாக முதற்தடவை பதவியேற்ற ஒருவரின் கட்சி, அவரது முதற்பதவிக் காலத்தில் இடம்பெறும் மத்தியகாலத் தேர்தலில் தோல்வியடைந்தமையே வரலாறாக உள்ளது.

உதாரணமாக, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பதவியேற்ற பராக் ஒபாமாவின் காலத்தில், பிரதிநிதிகள் சபையில் 63 ஆசனங்களை இழந்து, பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சி இழந்தது. செனட்டில் 6 ஆசனங்களை இழந்தாலும், மயிரிழையில் (51 ஆசனங்களுடன்) பெரும்பான்மையைத் தக்கவைத்தது.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் காலத்தில், இது விதிவிலக்காக அமைந்தது. ஆனால், செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், அவருக்கான ஆதரவு உயர்வாக இருந்தது.

பில் கிளின்டன், 54 ஆசனங்களை இழந்து, பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையைப் பறிகொடுத்தார். செனட்டிலும் 9 ஆசனங்களைப் பறிகொடுத்து, பெரும்பான்மையை இழந்தார்.

எனவே, நீல அலை, வழக்கமான போக்கு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, ஜனநாயகக் கட்சிக்கு வாய்ப்புகள் உள்ளனவெனக் கருதப்படுகிறது.

எதிர்வுகூறல்கள் என்ன சொல்கின்றன?

இதுவரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், பிரதிநிதிகள் சபையை, ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கட்சி, கிட்டத்தட்ட 192 ஆசனங்களைக் கைப்பற்றுவது ஓரளவுக்கு அல்லது உறுதியாகச் சாத்தியப்பாடுள்ளது எனக் கருதப்படுகிறது. எனவே, பெரும்பான்மையைக் கைப்பற்றுவதற்காக, மேலதிகமாக 26 ஆசனங்களே தேவைப்படுகின்றன.

இரண்டு கட்சிகளும் கைப்பற்றுவதற்குச் சாத்தியமுள்ள ஆசனங்களாக, 48 ஆசனங்கள் காணப்படுகின்றன. எனவே, இறுதிக்கட்டத்தில் பாரிய மனமாற்றமொன்று மக்கள் மத்தியில் ஏற்பட்டாலொழிய, ஜனநாயகக் கட்சியின் பக்கம், பிரதிநிதிகள் சபை செல்லவுள்ளது.

அப்படியாயின் செனட்?

ஏற்கெனவே பார்த்ததைப் போன்று, 35 ஆசனங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளதோடு, பெரும்பான்மையைப் பெறுவதற்கு 2 ஆசனங்களே தேவைப்படுகின்ற நிலையில், நிலவுவதாகக் கூறப்படும் “நீல அலை”க்கு மத்தியில், செனட்டையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமென எண்ணக்கூடும். ஆனால், அதற்கான சாத்தியப்பாடுகள் மிகக்குறைவு என்றே கருதப்படுகிறது.

அதற்கு, முக்கிய காரணமொன்று உள்ளது. இம்முறை தேர்தல் இடம்பெறும் 35 ஆசனங்களில் 26 ஆசனங்கள், ஏற்கெனவே ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் கீழ் காணப்படும் ஆசனங்களாக உள்ளன. வெறுமனே 9 ஆசனங்கள் தான், குடியரசுக் கட்சியின் கீழ் காணப்படும் ஆசனங்களாக உள்ளன.

எனவே, தமது 26 ஆசனங்களைக் காப்பாற்றுவதோடு மாத்திரமல்லாது, குடியரசுக் கட்சியின் 2 ஆசனங்களைக் கைப்பற்றுவதென்பது, கடினமாகவே அமையுமெனக் கருதப்படுகிறது.

அதிலும், ஜனநாயகக் கட்சியின் 26 ஆசனங்களில் 14 ஆசனங்கள் தான், மிகவும் அதிக வெற்றிவாய்ப்புள்ளனவாகக் கருதப்படுகின்றன. ஏனையவற்றில் 6 ஆசனங்களை, ஜனநாயகக் கட்சி அநேகமாக வெல்லுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், மிகுதி 6 ஆசனங்களும், இரு தரப்பினராலும் வெல்லப்படக்கூடிய வாய்ப்புகளாக உள்ளன. குடியரசுக் கட்சியின் 9 ஆசனங்களில் 4 ஆசனங்களே, இரு தரப்பினராலும் வெல்லப்படக்கூடிய ஆசனங்களாக உள்ளன.

எனவே, பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றினாலும், செனட்டை அக்கட்சி கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவே.

ஏன் முக்கியம்?

இத்தேர்தலைப் பொறுத்தவரை, ஏற்கெனவே சொல்லப்பட்டது போன்று, ஐ.அமெரிக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுமே அவ்வாறு என்ற போதிலும், இத்தேர்தல், அதிலும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், வழக்கமான அரசியல் போக்கை உதறித்தள்ளிவிட்டுச் செயற்படுகிறார். முன்னைய ஜனாதிபதிகளை விட, அதிக சர்ச்சைகளுக்கு உரியவராக இருக்கிறார்.

அதேபோல், உலக அரங்கிலிருந்து ஐ.அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதோடு, காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், ஆயுதப் பாவனை தொடர்பான பிரச்சினைகள், இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள், வெள்ளையினத் தேசியவாதத்தின் எழுச்சி போன்றவற்றை அவர் கையாளும் விதம், அதிக விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. அதேபோல், குடியேற்றவாசிகளை ஒட்டுமொத்தமாக வெறுக்கும் அவரின் நிலைப்பாடும், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. குடியேற்றவாசிகள் மீதான அவரது எதிர்ப்பு, இனவாதத்தின் அடிப்படையில் உருவானது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

எனவே தான், காங்கிரஸின் இரு அவைகளையோ அல்லது ஓர் அவையையோ ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமாயின், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கான தடைகளை விதிக்க முடியும். ஐ.அமெரிக்காவின் அரச அமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில், சட்டங்களை உருவாக்கக்கூடிய அதிகாரம், காங்கிரஸுக்கே உள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய எச்சட்டத்தை உருவாக்குவதென்றாலும், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் காங்கிரஸின் அங்கிகாரத்தை, ஜனாதிபதி ட்ரம்ப் பெற வேண்டியிருக்கும். அப்போது, அவரது சர்ச்சைக்குரிய திட்டங்களை முன்னெடுக்க முடியாமலிருக்கும். ஜனாதிபதிப் பதவி, மிகவும் அதிக அதிகாரங்களைக் கொண்டதாகக் கருதப்படுகின்ற போதிலும், எதிரணியால் காங்கிரஸ் கட்டுப்படுத்தப்படும் போது, அந்நிலை வேறானது.

முன்னர் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, 2008ஆம் ஆண்டில் பதவியேற்ற பின்னர், 2010ஆம் ஆண்டில், பிரதிநிதிகள் சபையை, குடியரசுக் கட்சிக்குப் பறிகொடுத்திருந்தார்.

பின்னர் 2014ஆம் ஆண்டில், செனட்டின் கட்டுப்பாட்டையும் பறிகொடுத்திருந்தார். இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டிலிருந்தே, அவரது கொள்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதோடு, 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு அவர் வெளியேறும் வரை, அந்நிலைமை மோசமடைந்தது. குறிப்பாக ஒரு கட்டத்தில், ஒபாமாவால் உச்சநீதிமன்றத்துக்கென முன்மொழியப்பட்ட நீதிபதியை உறுதிப்படுத்த வேண்டிய செனட், அவர் மீதான வாக்கெடுப்பை நடாத்தாமை ஒரு பக்கமாகவிருக்க, அவரைச் சந்திக்கவே மறுத்திருந்தது.

எனவே, தங்களது கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியை, காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த குடியரசுக் கட்சி எவ்வாறு நடத்தியது என்பதை, ஜனநாயகக் கட்சியினர் ஞாபகத்தில் வைத்திருப்பர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸின் அதிகாரத்தைக் கைப்பற்றினால், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு, மிகப்பெரிய முட்டுக்கட்டைகளைப் போடுவரென எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மத்தியகாலத்-தேர்தல்கள்-ட்ரம்ப்புக்கு-முட்டுக்கட்டை-வருமா/91-224767

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.