Jump to content

திரு.எம்.எ.சுமந்திரன் அவர்களின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

.
கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.எ.சுமந்திரன் அவர்கள் தனது புதிய பகைவர்களுக்கு எதிராக கெட்டவார்த்தைகளை பயன்படுத்துவதக்கு கூட்டமைப்பு மேடைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனேனில் இது தமிழர் கலாசாரல்ல. மேலும் இது தமிழர் நலன்களைப் பாதிக்கும். 
.
வவுனியாவில் நீங்கள் திரு.மைதிரிபால சிறிசேனவுக்கு எதிராக கெட்ட வார்த்தை பேசியமைக்கு மன்னிப்புக் கோருமாறு வேண்டுகிறேன். என்ன இருந்தாலும் அவர் சிங்கள மக்களின் தலைவர் ஆவார். இது எங்கள் மகத்தான தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழர் நலன்களுக்கும் உகந்ததல்ல.
.
மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களே, நீங்கள் திரு ரணில் விக்கிரசிங்க அவர்களை பாதுகாக்க வவுனியாவில் ஆவேசப்பட்ட அளவுக்கு கோவத்தை இதுவரைக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் காட்டியதில்லையே? அது ஏன்? 
.
தமிழர் நலன்களைப் பணயம் வைத்து போருக்கு அறைகூவி திரு.ரணில் அவர்களைப் பாதுகாக்கும் அளவுக்கு அவர் தமிழருக்கு தந்த உரிமைகள் எவை? இன்றைய பிரச்சினையில் அவர் தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கு எழுத்தில் தந்த வாக்குறுதிகள் எவை? தயவு செய்து அவற்றை பகீரங்க படுத்துங்கள். நிபந்தனையில்லாமல் திரு.மைதிரிபால சிறீசேனவை மட்டுமல்ல திரு.ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்க்கும் உங்களுக்கு தமிழ் மக்கள் ஆணையில்லை. மேலும் அது உரிமைக்குப் போராடும் தமிழரின் மகத்தான அரசியலுமல்ல.
.
சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தின் முன்பிருந்தே திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இலங்கை தமிழர்கள் அறிவார்கள். அவரிடம் தற்போது ஏற்பட்டிருக்கும் மனமாற்றம் என்ன? தமிழரின் ஆதரவைப் பெறுவதற்க்காக புதிதாக விட்டுத் தந்தத உரிமைகள் சலுகைகள் எவை? மேலும் அவர் அரசியல் கைதிகள் விடுதலை, நிலம் நீர்போன்ற நமது மக்களின் வாழ்வாதரங்களை இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவித்தல், பொதுப்பட்டியைல் இருக்கும் அம்சங்களையாவது மாநில அரசுக்கு விட்டுகொடுத்தல், ஏற்கனனவே வாக்களித்த இணைப்பாட்சி அரசியல் சட்டத்தை நிறைவேற நடவடிக்கை எடுத்தல் போன்ற தமிழர்களின் மிகக் குறைந்த பட்டசக் கோரிக்கைகளில் எதையாவது திரு ரணில் விக்கிரமசிங்க அவர்க்ள் .எழுத்துமூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறாரா?

திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதற்க்கு நிபந்தனையாக நீங்கள்  அவரிடமிருந்து எழுத்துமூலம் பெற்ற வாக்குறுதிகளை உடனே வெளியிடுங்கள்.

.

https://www.newsfirst.lk/2018/11/04/sumanthirans-deal-with-ranil-wickremesinghe/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஜரே ரொம்பவும் தான் வினோதமான வேண்டுகோள்!

Link to comment
Share on other sites

மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களே, நீங்கள் திரு ரணில் விக்கிரசிங்க அவர்களை பாதுகாக்க வவுனியாவில் ஆவேசப்பட்ட அளவுக்கு கோவத்தை இதுவரைக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் காட்டியதில்லையே? அது ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை ஆதரிப்பதாக இதுவரை கூட்டமைப்பு கூறவில்லை, சட்டத்திற்குப் புறம்பான பிரதமர் நியமனத்தை எதிர்ப்பதாகவே கூறியுள்ளது.

இன்று சுமந்தரன் பேசியதற்காக ஆவேசப்படும் தாங்கள் இதுவரை சம் சும் & கோ தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்த போது எங்கிருந்தீர்கள்? 

கூட்டமைப்பே இவரது கைகளில் சிக்கியுள்ள போது எப்படி உங்களால் கூட்டமைப்பின் மேடைகளை பயன்படுத்த கூடாது என்பீர்கள்.

இந்த சம்பவம் இடம்பெற்றது தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிக் கூட்டத்தில் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லையா அல்லது சம்பந்தரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையா? 

நீங்கள் எழுதுவது போல் சுமந்திரன் சம்பந்தருக்கு தெரியாமல் எதுவும் செய்யவில்லை, 

Link to comment
Share on other sites

மீரா அவர்களுக்கு.

தமிழ் அரசியலில் சுமந்திரனோ மற்றவர்களோ  தவறு செய்கிறபோது கண்டித்து விமர்சிக்கிறேன். அவர்கள் நல்லது செய்கிறபோது நிச்சயம் பாராட்டுகிறேன்.   சம்மந்தன் ஐயாவின் சரிகளை எபோதும்   பாராட்டுகிறேன்.   பிழைகளை முந்திக்கொண்டு எதிர்க்கிறேன.  மீரா நீங்கள் சரி பிழை பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு  எதிர்க்கிறீங்க போல. அவரவர் வழிகள் அவரவருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MY3 ற்கு கண்ணை மூடிக் கொண்டு கூட்டமைப்பு ஆதரவை வழங்கிய போது உங்கள் கண்டணத்தை வைத்தார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சி   என்ற பெயரில் முன்னர் மைத்திரியும் ரணிலும் இணைந்து ஆட்சியமைத்தபோது தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் கூட்டமைப்பு எதிர்கட்சியாக இருந்து அரசுக்கு முண்டுகொடுத்தது என்று வைத்துக்கொண்டாலும் இன்று சிறிலங்காவின் அரசியல் நிலைமையே வேறு. அடுத்துவரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் நிகழப்போகும் பலப்பரீட்சையில்  பலசாலி ரணிலாகவோ அல்லது மகிந்தவாகவோ எவராக  இருந்தாலும் கூட்டமைப்பு தமிழருக்கு ஒரு நல்ல அரசியல் தீர்வைக்கொண்டுவரும் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கையை இந்த அரசியல் நெருக்கடி  கானல்நீராக்கிவிட்டது. தொடர்ந்தும் கூட்டமைப்பு எதிர்கட்சியாக நீடித்தால், வரப்போகும் பிரதமர் எவராக இருந்தாலும் அந்த ஆட்சிக்கு கூட்டமைப்பு நிச்சயம் முண்டுகொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மட்டுமன்றி  கூட்டமைப்பு  எதிர்கட்சியாக இருப்பதால் அரசியல்பலம் அற்ற ஒரு கட்சியாக இருந்தே மிகுதிக்காலத்தையும் ஓட்டவேண்டி வரும். கடந்துசென்ற நாட்கள் நாம் பாடம் கற்றுக்கொள்ளவும் நல்ல வியூகமொன்றை அமைப்பதற்கும்  நல்ல சந்தர்ப்பத்தை  ஏற்படுத்தித் தந்ததை எமது அரசியல்வாதிகள் ஏனோ கண்டுகொள்ளவில்லை. எமது அரசியல் தலைவர்கள் வழமைபோல் சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு வாளாதிருந்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

திருமிகு மீரா, இது என் பொது நிலைபாடு. இப்பவும் வெள்ளைவான் ஆட்ச்சியை ஆதரிக்குமாறு நான்கோரவில்லை. சுமந்திரன் தமிழர் பிரச்சினையில் காட்டாத கோபாவேசத்தோடு திடீரென வெறிகொண்டவர்போல தமிழர் மாண்புக்கு ஒவ்வாத பண்பற்ற மொழிகள் பேசுவதையே எதிர்க்கின்றேன். 

vanangaamudi சொல்வதில் எனக்கு உடன்பாடே. எதிர்கட்சித் தலைமை வகித்த காலத்தில் தமிழரின் செயல்படு வெளியை அகலமாக பராமரித்ததில் நிலம் மீட்பு போன்ற பிரச்சினைகளில் கூட்டமைப்பு பங்காற்றியுள்ளது. அதனை நிராகரிக்கவில்லை. இன்று சுமந்திரன் இந்த அரசின் வெற்றிக்கும் தொடற்சிக்கும் உரிமை கொண்டாடுவதைப் பார்த்தால் கூடமைப்பு நினைத்திருந்தால் அரசியல்கைதிகள் விடுதலை உட்பட அதிகம் வெற்றிகளைப் பெற்றிருக்கலாம் என தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குரிய பதில் தரப்பட்டுள்ளது, சம்பந்தரின் வாரிசால்....

Link to comment
Share on other sites

மதிப்புக்குரிய மீரா, தகவலுக்கு நன்றி.

சிவஞானம் அவர்களுக்கு -

அரசியல் நாகரீகம்தான் தமிழரசுகட்ச்சியின் முகம். அது  சிவஞானமையாவுக்கு தெரியும். சரி நீங்கள் யாருக்காவது கை உயர்தினால் அரசியல் கைதிகள் வெளியே வர வேண்டும். சுமந்திரனின் நண்பர் ரணிலை காப்பாற்றுவதைவிட நமது அரசியல் கைதிகளைக் காப்பாற்றுவது சம்பந்தரின் முக்கிய கடமையாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.