Jump to content

திரு.எம்.எ.சுமந்திரன் அவர்களின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

.
கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.எ.சுமந்திரன் அவர்கள் தனது புதிய பகைவர்களுக்கு எதிராக கெட்டவார்த்தைகளை பயன்படுத்துவதக்கு கூட்டமைப்பு மேடைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனேனில் இது தமிழர் கலாசாரல்ல. மேலும் இது தமிழர் நலன்களைப் பாதிக்கும். 
.
வவுனியாவில் நீங்கள் திரு.மைதிரிபால சிறிசேனவுக்கு எதிராக கெட்ட வார்த்தை பேசியமைக்கு மன்னிப்புக் கோருமாறு வேண்டுகிறேன். என்ன இருந்தாலும் அவர் சிங்கள மக்களின் தலைவர் ஆவார். இது எங்கள் மகத்தான தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழர் நலன்களுக்கும் உகந்ததல்ல.
.
மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களே, நீங்கள் திரு ரணில் விக்கிரசிங்க அவர்களை பாதுகாக்க வவுனியாவில் ஆவேசப்பட்ட அளவுக்கு கோவத்தை இதுவரைக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் காட்டியதில்லையே? அது ஏன்? 
.
தமிழர் நலன்களைப் பணயம் வைத்து போருக்கு அறைகூவி திரு.ரணில் அவர்களைப் பாதுகாக்கும் அளவுக்கு அவர் தமிழருக்கு தந்த உரிமைகள் எவை? இன்றைய பிரச்சினையில் அவர் தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கு எழுத்தில் தந்த வாக்குறுதிகள் எவை? தயவு செய்து அவற்றை பகீரங்க படுத்துங்கள். நிபந்தனையில்லாமல் திரு.மைதிரிபால சிறீசேனவை மட்டுமல்ல திரு.ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்க்கும் உங்களுக்கு தமிழ் மக்கள் ஆணையில்லை. மேலும் அது உரிமைக்குப் போராடும் தமிழரின் மகத்தான அரசியலுமல்ல.
.
சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தின் முன்பிருந்தே திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இலங்கை தமிழர்கள் அறிவார்கள். அவரிடம் தற்போது ஏற்பட்டிருக்கும் மனமாற்றம் என்ன? தமிழரின் ஆதரவைப் பெறுவதற்க்காக புதிதாக விட்டுத் தந்தத உரிமைகள் சலுகைகள் எவை? மேலும் அவர் அரசியல் கைதிகள் விடுதலை, நிலம் நீர்போன்ற நமது மக்களின் வாழ்வாதரங்களை இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவித்தல், பொதுப்பட்டியைல் இருக்கும் அம்சங்களையாவது மாநில அரசுக்கு விட்டுகொடுத்தல், ஏற்கனனவே வாக்களித்த இணைப்பாட்சி அரசியல் சட்டத்தை நிறைவேற நடவடிக்கை எடுத்தல் போன்ற தமிழர்களின் மிகக் குறைந்த பட்டசக் கோரிக்கைகளில் எதையாவது திரு ரணில் விக்கிரமசிங்க அவர்க்ள் .எழுத்துமூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறாரா?

திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதற்க்கு நிபந்தனையாக நீங்கள்  அவரிடமிருந்து எழுத்துமூலம் பெற்ற வாக்குறுதிகளை உடனே வெளியிடுங்கள்.

.

https://www.newsfirst.lk/2018/11/04/sumanthirans-deal-with-ranil-wickremesinghe/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஜரே ரொம்பவும் தான் வினோதமான வேண்டுகோள்!

Link to comment
Share on other sites

மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களே, நீங்கள் திரு ரணில் விக்கிரசிங்க அவர்களை பாதுகாக்க வவுனியாவில் ஆவேசப்பட்ட அளவுக்கு கோவத்தை இதுவரைக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் காட்டியதில்லையே? அது ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை ஆதரிப்பதாக இதுவரை கூட்டமைப்பு கூறவில்லை, சட்டத்திற்குப் புறம்பான பிரதமர் நியமனத்தை எதிர்ப்பதாகவே கூறியுள்ளது.

இன்று சுமந்தரன் பேசியதற்காக ஆவேசப்படும் தாங்கள் இதுவரை சம் சும் & கோ தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்த போது எங்கிருந்தீர்கள்? 

கூட்டமைப்பே இவரது கைகளில் சிக்கியுள்ள போது எப்படி உங்களால் கூட்டமைப்பின் மேடைகளை பயன்படுத்த கூடாது என்பீர்கள்.

இந்த சம்பவம் இடம்பெற்றது தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிக் கூட்டத்தில் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லையா அல்லது சம்பந்தரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையா? 

நீங்கள் எழுதுவது போல் சுமந்திரன் சம்பந்தருக்கு தெரியாமல் எதுவும் செய்யவில்லை, 

Link to comment
Share on other sites

மீரா அவர்களுக்கு.

தமிழ் அரசியலில் சுமந்திரனோ மற்றவர்களோ  தவறு செய்கிறபோது கண்டித்து விமர்சிக்கிறேன். அவர்கள் நல்லது செய்கிறபோது நிச்சயம் பாராட்டுகிறேன்.   சம்மந்தன் ஐயாவின் சரிகளை எபோதும்   பாராட்டுகிறேன்.   பிழைகளை முந்திக்கொண்டு எதிர்க்கிறேன.  மீரா நீங்கள் சரி பிழை பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு  எதிர்க்கிறீங்க போல. அவரவர் வழிகள் அவரவருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MY3 ற்கு கண்ணை மூடிக் கொண்டு கூட்டமைப்பு ஆதரவை வழங்கிய போது உங்கள் கண்டணத்தை வைத்தார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சி   என்ற பெயரில் முன்னர் மைத்திரியும் ரணிலும் இணைந்து ஆட்சியமைத்தபோது தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் கூட்டமைப்பு எதிர்கட்சியாக இருந்து அரசுக்கு முண்டுகொடுத்தது என்று வைத்துக்கொண்டாலும் இன்று சிறிலங்காவின் அரசியல் நிலைமையே வேறு. அடுத்துவரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் நிகழப்போகும் பலப்பரீட்சையில்  பலசாலி ரணிலாகவோ அல்லது மகிந்தவாகவோ எவராக  இருந்தாலும் கூட்டமைப்பு தமிழருக்கு ஒரு நல்ல அரசியல் தீர்வைக்கொண்டுவரும் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கையை இந்த அரசியல் நெருக்கடி  கானல்நீராக்கிவிட்டது. தொடர்ந்தும் கூட்டமைப்பு எதிர்கட்சியாக நீடித்தால், வரப்போகும் பிரதமர் எவராக இருந்தாலும் அந்த ஆட்சிக்கு கூட்டமைப்பு நிச்சயம் முண்டுகொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மட்டுமன்றி  கூட்டமைப்பு  எதிர்கட்சியாக இருப்பதால் அரசியல்பலம் அற்ற ஒரு கட்சியாக இருந்தே மிகுதிக்காலத்தையும் ஓட்டவேண்டி வரும். கடந்துசென்ற நாட்கள் நாம் பாடம் கற்றுக்கொள்ளவும் நல்ல வியூகமொன்றை அமைப்பதற்கும்  நல்ல சந்தர்ப்பத்தை  ஏற்படுத்தித் தந்ததை எமது அரசியல்வாதிகள் ஏனோ கண்டுகொள்ளவில்லை. எமது அரசியல் தலைவர்கள் வழமைபோல் சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு வாளாதிருந்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

திருமிகு மீரா, இது என் பொது நிலைபாடு. இப்பவும் வெள்ளைவான் ஆட்ச்சியை ஆதரிக்குமாறு நான்கோரவில்லை. சுமந்திரன் தமிழர் பிரச்சினையில் காட்டாத கோபாவேசத்தோடு திடீரென வெறிகொண்டவர்போல தமிழர் மாண்புக்கு ஒவ்வாத பண்பற்ற மொழிகள் பேசுவதையே எதிர்க்கின்றேன். 

vanangaamudi சொல்வதில் எனக்கு உடன்பாடே. எதிர்கட்சித் தலைமை வகித்த காலத்தில் தமிழரின் செயல்படு வெளியை அகலமாக பராமரித்ததில் நிலம் மீட்பு போன்ற பிரச்சினைகளில் கூட்டமைப்பு பங்காற்றியுள்ளது. அதனை நிராகரிக்கவில்லை. இன்று சுமந்திரன் இந்த அரசின் வெற்றிக்கும் தொடற்சிக்கும் உரிமை கொண்டாடுவதைப் பார்த்தால் கூடமைப்பு நினைத்திருந்தால் அரசியல்கைதிகள் விடுதலை உட்பட அதிகம் வெற்றிகளைப் பெற்றிருக்கலாம் என தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குரிய பதில் தரப்பட்டுள்ளது, சம்பந்தரின் வாரிசால்....

Link to comment
Share on other sites

மதிப்புக்குரிய மீரா, தகவலுக்கு நன்றி.

சிவஞானம் அவர்களுக்கு -

அரசியல் நாகரீகம்தான் தமிழரசுகட்ச்சியின் முகம். அது  சிவஞானமையாவுக்கு தெரியும். சரி நீங்கள் யாருக்காவது கை உயர்தினால் அரசியல் கைதிகள் வெளியே வர வேண்டும். சுமந்திரனின் நண்பர் ரணிலை காப்பாற்றுவதைவிட நமது அரசியல் கைதிகளைக் காப்பாற்றுவது சம்பந்தரின் முக்கிய கடமையாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.