Jump to content

கருவில் உள்ள சிசுவை மாசுபாட்டில் இருந்து காப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கமலேஷ் பிபிசி

 

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?படத்தின் காப்புரிமை Science Photo Library

குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்காமல் வெளியே சென்று ஓடியாடி, தூய்மையான காற்றை சுவாசித்து விளையாடுவது அவர்களின் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், இந்தியா உள்பட பல நாடுகளில் அபரிதமாக அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு தற்போது மக்களின் உயிரையே அழிக்குமளவிற்கு சென்றுள்ளது நிரூபணமாகியுள்ளது.

குறிப்பாக, அதிகரித்து வரும் மாசுக்களின் அளவு குழந்தைகளுக்கு பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்துவதுடன், அவர்களது உடல், மனநல வளர்ச்சிக்கு பெருந்தடையாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?படத்தின் காப்புரிமை Getty Images

குறிப்பாக 2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் அளவுள்ள பி.எம் 2.5 என்று அழைக்கப்படும் நுண் மாசு துகள்களின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதே இந்தியாவில் ஏற்படும் குழந்தைகள் இறப்பிற்கு முக்கிய காரணமென்று அந்த அறிக்கை கூறுகிறது. காற்றில் கலந்துள்ள மாசு துகள்களை சுவாசிக்கும்போது அவை உடலினுள்ளே சென்று உயிரை பறிக்கும் அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

குழந்தைகளின் உயிரை வாங்கும் கொடிய மாசுபாடு

காற்றில் கலந்துள்ள மாசுபாட்டின் காரணமாக 2016ஆம் ஆண்டு, இந்தியாவில் 60,987 பேரும், நைஜீரியாவில் 47,674 பேரும், பாகிஸ்தானில் 21,136 பேரும், காங்கோவில் 12,890 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?படத்தின் காப்புரிமை Getty Images

உயிரிழந்தவர்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையே மிகவும் அதிகமாக உள்ளது. அதாவது, இந்தியாவில் உயிரிழந்த 60,987 குழந்தைகளில் 32,889 பெண் குழந்தைகளும், 28,097 குழந்தைகளும் அடக்கம். சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக பிறந்த குழந்தைகள் மட்டுமல்லாது தாயின் கருவிலிருக்கும் குழந்தைகள் கூட பாதிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் பாதிக்கிறது என்பது உண்மையென்றாலும், அது குழந்தைகளையே அதிகளவில் தாக்குவது இந்த தரவுகளின் மூலம் நிறுவுறப்பட்டுள்ளது. இந்நிலையில், பிறந்த குழந்தையை மட்டுமல்லாது, தாயின் கருவிற்குள்ளிருக்கும் குழந்தையை கூட மாசுபாடு எப்படி பாதிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?

மாசுபாட்டின் தாக்கம் என்பது பிறந்த குழந்தைகளுக்கும், ஒன்று முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் இடையே வேறுபட்ட விளைவுகளை உண்டாக்குவதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால் மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் நோய்களை எதிர்க்க முடியவதில்லை.

புது டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையை சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவரான சப்ராவிடம் இதுகுறித்து கேட்டபோது, "பிறந்த குழந்தைகளுக்கு நோயெதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கும். அதுமட்டுமின்றி, வளர்ச்சியடையாத நிலையிலிருக்கும் குழந்தைகளின் நுரையீரலில் எளிதாக மாசு துகள்கள் நுழைந்து ஒவ்வாமை, இருமல், சளி, மூச்சு சார்ந்த பிரச்சனையை உருவாக்குகிறது. நாள்பட்ட நிலையில் மூச்சு பிரச்சனை தீவிரமாகி ஆஸ்துமாவாகிறது" என்று கூறுகிறார்.

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?படத்தின் காப்புரிமை EPA

"வீட்டிற்கு வெளியே இருக்கும் மாசுபாடுகளை விட வீட்டிற்குள்ளே அல்லது வசிப்பிடத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு பிறந்த குழந்தைகளுக்கு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, வீடுகளில் சமைப்பது, ஏ.சி, வாசனை திரவியம், புகைப்பிடித்தல், ஊதுவத்தியின் மணம் போன்றவற்றின் காரணமாகவும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சமைப்பதற்காக கிராமப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் விறகுகளிலிருந்து வெளிப்படும் புகை குழந்தைகளின் நுரையீரலில் மோசமான பிரச்சனையை உண்டாக்குகிறது."

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

வெளிப்பகுதியில் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாக உயிரிழப்பதை போன்றே, கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் வீடு உள்ளிட்ட வசிப்பிடங்களில் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாக 66,890 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

அதற்கான காரணம் குறித்து சப்ராவிடம் கேட்டபோது, "பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயேதான் இருக்கின்றன. அவை சிறிது நடக்க ஆரம்பித்ததும் தனது தாயுடன் சமையல் அறையில் அதிகளவிலான நேரத்தை கழிக்கின்றன. எனவே, வெளியிடங்களை விட மோசமான மாசுபாட்டில் சிக்கி குழந்தைகள் அதிகளவில் இறக்கின்றன" என்று அவர் கூறுகிறார்.

வளர்ந்த குழந்தைகள்

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?படத்தின் காப்புரிமை Getty Images

குழந்தைகள் சிறிது வளர தொடங்கிய பிறகு, வீட்டிற்கு வெளியே சென்று விளையாட தொடங்குகிறார்கள். எனவே, அவர்களுக்கு மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் தாக்கம் குறித்து குழந்தைகள் நல மருத்துவர் தீரனிடம் கேட்டபோது, "மாசுபாடு மிகவும் அதிகளவில் இருக்கும் காலை நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். எனவே, இவர்கள் வீடு உள்ளிட்ட வசிப்பிடங்களிலுள்ள மாசுபாட்டை விட வெளியிடங்களில் ஏற்படும் மாசுபாட்டினால் அதிகம் பாதிப்படைகிறார்கள். தற்காலத்தில் சிறு வயதிலேயே குழந்தைகள் கண்ணாடி அணியும் சூழ்நிலைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்" என்று அவர் கூறுகிறார்.

"வளர்ந்த குழந்தைகளுக்கு பிறந்த குழந்தைகளை விட நோயெதிர்ப்புத் திறன் அதிகளவில் இருந்தாலும், மாசுபாடு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்குகிறது. ஏற்கனவே, சுவாச பிரச்சனை கொண்ட குழந்தைகளுக்கு மாசுபாடு அதிதீவிர பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்புள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

கருவிற்குள்ளிருக்கும் குழந்தையின் நிலை

தாயின் கருவிற்குள்ளிருக்கும் குழந்தை கூட சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக பாதிக்கப்படுவதாக இந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இதுகுறித்து டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மகப்பேறு மருத்துவர் அனிதாவிடம் கேட்டபோது, இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மாசுபாடு தாயின் கருவிலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும் என்பது உண்மையே என்கிறார்.

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?படத்தின் காப்புரிமை Getty Images

"காற்று மாசுபாட்டின் காரணமாக கரு உருவான உடனோ அல்லது முதல் மாதத்திலோ தாயின் கருவிற்குள் இருக்கும் குழந்தை பெரும்பாலும் பாதிப்படைகிறது. கருவுற்றிருக்கும் பெண் மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது அதிலுள்ள தீமை விளைவிக்கும் துகள்கள் அவரது உடலில் வந்து சேர்கிறது. அந்த துகள்கள் பெரும்பாலும் நுரையீரலில் சென்று தங்குகிறது அல்லது இரத்தத்தில் கலந்து நஞ்சுக்கொடியை சென்றடைகிறது. கருவிற்கு அருகிலிருக்கும் நஞ்சுக்கொடியின் மூலமே குழந்தைக்கு தேவையான சத்துகள் எடுத்துச்செல்லப்படுகிறது."

"அசாதாரணமான மாசுக்கள் நஞ்சுக்கொடியை அடைந்து, அங்கு வீக்கம் ஏற்படுவதால் அந்த பகுதியில் வெள்ளை இரத்த அணுக்கள் வளருவதால் அதன் வழியே குழந்தையின் வளர்ச்சிக்கு எடுத்துச்செல்லப்படும் இரத்தத்தின் பாதையில் தடை ஏற்படுகிறது."

"அந்த இரத்தத்தில்தான் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் எடுத்துச்செல்லப்படும் என்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கும் தடை ஏற்படுகிறது. இறுதியில் அந்த குழந்தை உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிப்படைந்த ஒன்றாக பிறக்கிறது. சரியான அளவில் இரத்தம் நஞ்சுக்கொடியை அடையவில்லை என்றால் குழந்தை விரைவில் முதிர்ச்சியடைந்து, முன்கூட்டியே பிறக்கும் சம்பவங்களும் நடக்கிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

குழந்தைகள் இறக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் மாசுபாடே காரணமென்று கூறமுடியாதென்றும், கருவுற்ற பெண்ணிற்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலோ கூட அது கருவை பாதிக்கும் என்று அவர் விளக்குகிறார்.

கருவுக்குள் இருக்கும் குழந்தையை மாசுபாடு எப்படி பாதிக்கிறது?படத்தின் காப்புரிமை Getty Images

தற்காப்பு வழிமுறைகள்

  • கருவுற்ற பெண்ணை மாசுபட்ட காற்றை சுவாசிப்பதிலிருந்து தடுப்பதின் மூலம் குழந்தையை பாதுகாக்க முடியும்.
  • வீடுகளில் ஏற்படக்கூடிய மாசுபாட்டை தவிருங்கள்.
  • பிறந்த குழந்தைக்கு தாய் பாலூட்டுங்கள். இது நோயெதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.வைட்டமின்-சி நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை போன்றவற்றை கொடுத்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அமைப்பின் பலத்தை அதிகரிக்கலாம்.
  • தீபாவளியன்று பாட்டாசு புகையை சுவாசிப்பதையும், விளக்கு, ஊதுவத்தி புகையை சுவாசிப்பதையும் தவிருங்கள்.

https://www.bbc.com/tamil/science-46084155

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.