Jump to content

இலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்? 

யதீந்திரா 
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை தோன்றியதில்லை. இந்த நெருக்கடி நிலைக்கான விதை 2015 ஜனவரி 8இல் விதைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஆகியோரை அதிகாரத்திலிருந்து அகற்றும் நோக்கிலேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், இலங்கையில் இரண்டு பிரதமர்களும், இரண்டு பிரதமர் அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. 2015இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றமும் வெளிநாட்டு சதியென்றுதான் வர்ணிக்கப்பட்டது. தற்போது மகிந்தவின் மீள்வருகையும் வெளிநாட்டு சதியென்றே கூறப்படுகிறது. சதிகளை நம்பி அரசியல் செய்தால் மீண்டும் மீண்டும் சதிகளுக்கே முகம்கொடுக்க வேண்டிவரும் போலும்.

இலங்கையில் இடம்பெறும் அரசியல் குழப்பநிலைகளை வெளிநாட்டு சதியாக குறிப்பிடுவதும் கூட, ஒரு வகையான அரசியல்தான். இவ்வாறான அரசியல் குற்றச்சாட்டுக்களுக்கு எப்போதுமே ஆதாரங்கள் இருப்பதில்லை. இவைகள் பொதுவாக ஊகங்களாவும், அனுமானங்களாகவுமே இருப்பதுண்டு. எனவே இவற்றை முன்னிலைப்படுத்தி சிந்திக்க முற்பட்டால், நமக்கு முன்னாலிருக்கும் பிரதான சவால்களை நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போய்விடும். ஒரு வேளை சிலர் கூறுவது போன்று இவ்வாறான நிகழ்வுகள் வெளிநாட்டு தலையீடுகளின் விளைவுதான் என்றால், அதனை எங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெனில் அது நமது சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே பின்னாலிருக்கும் விடயங்களை விட்டுவிட்டு, முன்னால் தெரிகின்ற விடயங்களை எவ்வாறு கையாளுவது என்று சிந்திப்பதுதான் சரியானது.

அரசியல் யாப்பு சதிக் குற்றச்சாட்டுக்களை ஒரு புறமாக வைத்துவிட்டு, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கவனத்தை செலுத்தினால் நமக்கு முன்னாலிருக்கும் – இருக்க வேண்டிய ஒரேயொரு கேள்வி – இந்த நிலைமையை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப் போகிறது? அதாவது, நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்தாலும் இந்தக் கேள்விகள் அவருக்குமானதுதான்.) இந்த நிலைமையை எவ்வாறு கையாளப் போகிறது, அதாவது சம்பந்தன் எவ்வாறு கையாளப் போகின்றார்?

நடைபெறுகின்ற விடயங்களின் அடிப்படையில் நோக்கினால், இரண்டு தரப்புக்களும் கூட்டமைப்பின் ஆதரவை எதிர்பார்க்கின்றன. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக கூட்டமைப்பு என்பது பாராளுமன்றத்தில், ரணிலின் செல்லப்பிள்ளையாகவே இயங்கிவந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில் பார்த்தால் சம்பந்தன் (சுமந்திரன்) ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமாக நிற்பதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது. ஆனால் தங்களின் முடிவை நியாயப்படுத்துவதற்கான ஒரு துரப்புச்சீட்டாக, தற்போது எவர் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைள் தொடர்பில் எழுத்து மூலமாக உத்தரவாதம் அளிக்கின்றனரோ, அவர்களுக்கே தங்களது ஆதரவு என்று சம்பந்தன் கூறிவருகின்றார். சம்பந்தன் இது தொடர்பில் இரு தரப்பினருடனும் பேசியுமிருக்கிறார். முக்கியமாக மகிந்தவிடம் எழுத்து மூலமான உடன்படிக்கை தொடர்பில் பேசியுமிருக்கிறார். ஆனால் அதனை மகிந்த நிராகரித்துவிட்டார். இதே போன்று ரணிலும் எழுத்து மூல உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் எழுத்துமூல உடன்பாட்டுக்கு உடன்பட மாட்டார்கள் என்பது சம்பந்தனுக்கும் தெரியாத ஒன்றல்ல ஆனால் மகிந்தவிற்கு ஆதரவு வழங்குவதை தவிர்ப்பதற்காக இவ்வாறானதொரு துருப்புச் சீட்டை சம்பந்தன் கையாள முற்படுகின்றார். சம்பந்தன் இவ்வாறு பேசிவருகின்ற சூழலில், சுமந்திரனோ, ஜனாதிபதியின் செயல் அரசியல் யாப்புக்கு முரணானது எனவே ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவேண்டும் என்றவாறு பேசிவருகின்றார். இதன் மூலம், அரசியல் யாப்புக்கு உட்பட்டு செயற்படும் ரணிலுக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்பதுதான் சுமந்திரனின் வாதத்திற்குள் ஒளிந்திருக்கும் திட்டம். ஆனால் இதிலுள்ள வேடிக்கையான பக்கம் என்னவென்றால், இந்த அரசியல் யாப்பைத்தானே நாங்கள் தவறு என்று கூறிவருகிறோம். புதிய அரசியல் யாப்பொன்று தேவை என்கிறோம். பின்னர் எதற்காக பிழையான ஒரு அரசியல் யாப்பு தொடர்பில் கூட்டமைப்பு கரிசனை காட்ட வேண்டும்? உண்மையில் இதற்கு பின்னாலுள்ள, நிகழ்ச்சிநிரல் வேறு அதாவது, எழுத்து மூல உடன்பாடு என்று கூறிவிட்டு, இறுதியில் பாராளுமன்றம் கூடியதும், ரணிலுக்கு ஆதரவாக செயற்படுவதுதான் சம்பந்தனின் திட்டம்.

mahinda-with-ranil-maithri

உண்மையில் சம்பந்தன் இதில் எவ்வாறானதொரு அனுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்? எவ்வாறானதொரு அனுகுமுறையை மேற்கொண்டால் அது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்கும்? இதில் கூட்டமைப்பு எவர் பக்கமாக நின்றால் அது தமிழ் மக்களுக்கு நன்மையானது?

மூன்றாவது கேள்விக்கான பதிலில், முதல் இரண்டு கேள்விகளுக்குமான பதிலும் இருக்கிறது. இந்த குழப்ப நிலைமை என்பது கொழும்பின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதுடன் தொடர்பான ஒன்று. தற்போதுள்ள நிலையில் இந்த பலப்பரிட்சையில் எவர் வென்றாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவும் நடைபெறாது. உதாரணமாக கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை அமைத்தாலும் கூட, அதன் பின்னர் மைத்திரிபாலசிறிசேன எந்தவொரு விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்பாட்டின் போது, சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இருந்தது போன்றதொரு, நிலைமையே மீண்டும் ஏற்படும். மகிந்த எதிர்க்கட்சி தலைவராக இருப்பார். ரணிலின் அனைத்து முயற்சிகளையும் மைத்திரி-மகிந்த கூட்டாக தோற்கடிப்பர்.

இவ்வாறானதொரு சூழலில், கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பதால், அரசியல்ரீதியான நன்மை என்ன? இவ்வாறு நான் குறிப்பிடுவதால் இந்தப்பத்தியாளர் மகிந்தவின் வரவை ஆதரிக்கின்றார் என்று சிலர் தங்களுக்குள் எண்ணிக்கொள்ளக் கூடும். அப்படி எண்ணினால் அது தவறு. இப்பத்தியாளர் நபர்கள் தொடர்பில் அல்ல மாறாக சூழ்நிலை தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றார். சம்பந்தன் நபர்கள் தொடர்பில் நம்பிக்கை வைத்தே ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவளித்திருந்தார். ஆனால் அதில் இன்று படுதோல்வி அடைந்திருக்கிறார். ஏனெனில் அரசியலில் நபர்கள் என்பவர்கள், எப்போதுமே தாங்கள் எதிர்கொள்ளும் புதிய நெருக்கடிகளுக்கு அமைவாகவே முடிவுகளை எடுப்பர். தமிழ் தேசிய இனத்தின் சார்பில் முடிவுகளை எடுக்கக் கூடிய இடத்திலிருந்த சம்பந்தனிடம், இது தொடர்பில் ஒரு தெளிவான புரிதல் இருந்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனிடம் அப்படியேதும் இருந்திருக்கவில்லை. சம்பந்தனோ, அனைத்தையும் அரசியல் அனுபமில்லாத சுமந்திரனிடம் விட்டுவிட்டு, எதிர்க்கட்சி கதிரை தந்த சுகமான சூட்டில் திழைத்திருந்தார். இன்று நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது.

அப்படியானால் ஒரு கேள்வி எழலாம். இப்போது சம்பந்தன் என்ன செய்ய வேண்டும்? இப்போது செய்ய வேண்டியது ஒன்றுதான், அதாவது, தெற்கின் அதிகார மோதலிலிருந்து முற்றிலுமா விலகியிருப்பது. அவர்களது அதிகார மோதல்களை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். இந்தப் பிரச்சினையில் சம்பந்தன் ஒரு பக்கம் சாயும் முடிவை எடுத்தால் நிச்சயம் மற்றைய தரப்பினர் விரோதிப்பர். ஒரு வேளை அந்தத் தரப்பு மகிந்தவாக இருந்தால் இனி வரப்போகும் ஒன்றரை வருடங்களில் அரசியல் ரீதியில் எந்தவொரு விடயத்தையும் இலங்கையில் முன்னெடுக்க முடியாது. அதே வேளை, எதிர்காலத்திலும் அரசியல் ரீதியில் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுப்பதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள். தற்போதுள்ள நிலைமையை உற்று நோக்கினால், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஜக்கிய தேசியக் கட்சி பெருவாரியான வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புக்கள் எதுவுமில்லை. எனவே இவ்வாறானதொரு சூழலில் சிங்கள அதிகார மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், ஒரு தரப்பை பாதுகாப்பதில் ஏன் கூட்டமைப்பு ஈடுபட வேண்டும்?

கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த சம்பந்தன் – சுமந்திரன் தரப்பின் அரசியல் நகர்வுகள் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. அது தோல்வியடைந்துவிட்டது என்பதற்கும் அப்பால், இலங்கைத் தீவில், தமிழர்கள் ஒரு தனித் தரப்பு என்னும் நிலையிலிருந்தும் கணிசமாக கீழிறக்கப்படுவதற்கும் சம்பந்தன் தரப்பே காரணமாகவும் இருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில் மேலும் தமிழர்களை பலவீனப்படுத்தும் முடிவுகளை எடுப்பவர்கள் எவரும் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்கவும் முடியாது. இந்த சந்தர்ப்பத்திலாவது சம்பந்தன் தனது சுயநல அரசியலிலிருந்து விலகி, தமிழ் மக்களின் தலைவராக நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த மூன்று வருடங்களாக சம்பந்தன் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் தலைவராக இருக்கவில்லை. அரசியலிலிருந்து ஓதுங்க வேண்டிய நிலையிலிருக்கும் சம்பந்தன் தனது இறுதிக்காலத்திலாவது சரியான முடிவை எடுக்க முன்வர வேண்டும். வரலாற்றில், அரசியல் நிகழ்வுகள் மாறி மாறி நிகழும். அது பாதகமாகவும் சாதகமாகவும் வரலாம். ஒவ்வொரு சூழலையும் சரியாக கையாளுவதில்தான் ஒரு இனத்தின் அரசியல் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

http://www.samakalam.com/blog/இலங்கையின்-அரசியல்-குழப/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.