Jump to content

ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பை மீறும்செயல் ; வி.ரி.தமிழ்மாறன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பை மீறும்செயல் ; வி.ரி.தமிழ்மாறன்

(நேர்காணல்:-ஆர்.ராம்)

பிரதமர் நியமனத்தில் தனக்கு இல்லாத அதிகாரங்களை தற்துணிவின் அடிப்படையில் ஜனாதிபதி பயன்படுத்துவது வேடிக்கையானது என்பதோடு அரசியலமைப்பினை மீறும் செயலாகவுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் வரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். 

IMG_1925.JPG

அதன் முழுவடிவம் வருமாறு.

19ஆவது திருத்தத்தின் பின்னணி

2015இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்/ தான் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டமையால் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் தான் மக்களின் ஆணை கிடைக்கப்பெற்றது.

அரசியலமைப்பில் அடிக்கடி திருத்தங்களை செய்ய முடியாது. அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றபோது தான் அத்தகைய திருத்தங்களைச் செய்ய முடியும். அந்த வகையில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியல் ரீதியாக வரலாற்றுத்திருப்பமொன்று நிகழ்ந்த பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பத் திருத்தத்தினை மக்கள் ஆணையை புறந்தள்ளிப் பொருள்கோடல் செய்ய முடியாது.

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படுவதென்பது அரசியல் சமுதாயத்தினுடைய தேவை கருதி, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விழுமியங்களின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே அதனைப் பொருள்கோடல் செய்கின்றபோது விழுமியங்களை அகற்றி பொருள்கோடல் செய்ய முடியாது. இதற்கு உலக நாடுகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கள் பலவுள்ளன.

மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக அவை முழுமை அடைந்திருக்கவில்லை. ஆனாலும் அந்த தீர்ப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு மட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பகுதியளவில் குறைக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னரே 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டமையினால் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் அச்சட்டத்தின் ஏற்பாடுகளை கடந்து செயற்படுவதற்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் 19ஆவது திருத்தம்செய்யப்பட்டிருந்தால் அதிலிருந்து விலகிய பின்னர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறலாம். ஆனால் 19ஆவது திருத்தம் மக்கள் ஆணையின் பிரகாரம் ஜனாதிபதியின் முழு ஒப்பதலோடு மேற்கொள்ளப்பட்ட விடயமொன்றாகும்.

கூட்டு எதிர்க்கட்சியின் கருத்து 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியால் பிரதமரை நீக்கும் அதிகாரம் இல்லது செய்யப்பட்டுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்த கருத்துக்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கருத்துக்களை தெரிவித்ததன் பிரகாரம் 19ஆவது திருத்தத்தின் விளைவு இவ்வாறு தான் இருக்கும் என்பதை அவர்களே நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால் தற்போது பல்வேறு அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக புதிய பிரதமர் நியமிக்கப்படும் 

அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. பிரதமர் பதவியில் யார் இருக்கின்றார் என்பதை விட மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்டத்  திருத்தத்தினை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா? ஜனநாயக ஆட்சி முறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா? இல்லையா? போன்ற விடயங்களையே அதீத கவனத்தில் கொள்ள வேண்டியதாகின்றது.

ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடு

அரசியல் ரீதியாக ஜனாதிபதிக்கு எத்தகைய நிர்ப்பந்தங்கள் இருந்தாலும் ஜனநாயக ஆட்சி முறைமைக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே புதிய பிரதமர் நியமனத்தினை கொள்ள வேண்டியுள்ளது. 

எந்த விழுமியங்களை பாதுகாப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டதோ அவற்றையெல்லாம் சிதறடிக்கும் வகையிலேயே மேற்படி நியமனச் செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது. ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெவ்வேறு சொற்பதங்கள் காணப்படுவதாக தற்போது கூறப்பட்டாலும் இது சொற்பிரயோகங்களை மட்டும் வைத்துக்கொண்டு பொருள்கோடல் செய்கின்ற விடயம் அல்ல. மக்கள் ஆணையுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். அரசியல் அதிகாரங்களை தீர்மானிக்கின்ற விடயம் என்பதால் சதாரண சட்டங்களை பொருள்கோடல் செய்வது போன்று இங்கு பொருள்கோடல் செய்ய முடியாது.

பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள்

19ஆவது திருத்தச்சட்டம் உள்ளீர்க்கப்பட்டதன் பின்னர் எத்தனையோ விடயங்களில் திரும்பத்திரும்ப அதிகாரங்கள் குறைப்புக்கள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. முன்னதாக 47ஆவது சரத்தின் ‘அ’ உப பிரிவில் ஜனாதிபதி பிரதமரை எழுத்து மூலம் நீக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. 19ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கத்தின் பின்னர் இந்த ஏற்பாடு முற்றாகவே அகற்றப்பட்டுள்ளது. 46ஆவது சரத்தின் 2ஆவது உபபிரிவில் பிரதமர் பதவி இழக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் கூறப்பட்டுள்ளன.

தனது கைப்பட பிரதமர் ஜனாதிபதிக்கு இராஜினாமாக் கடிதத்தினை எழுதுதல் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதொழிதல் ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் தான் பிரதமர் பதவி இழப்பார். அங்கு எந்த ஏற்பாடுகளிலும் ஜனாதிபதிக்கு பதவிநீக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் நீக்கப்பட்ட அதிகாரத்தினை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்வது வேடிக்கையானது. 48ஆவது சரத்தின் 2ஆவது உபபிரிவின் படி வரவுசெலவுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால் அல்லது அரசாங்கத்திற்கு மேல் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அல்லது அரசாங்கத்தின் கொள்கைக் கூற்று நிராகரிக்கப்படுதல் ஆகிய காரணங்களின் பிரகாரமே பிரதமரின் பதவி இழக்கப்படும். 

இந்த மூன்று சந்தர்ப்பங்களை விட ஏறெந்த ஏற்பாடுகளும் இல்லை. சிங்கள மொழியில் அகற்றுதல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் மேற்படி மூன்று சந்தர்ப்பங்கள் இல்லாதபோது பிரதமர் பதவி இழக்கமாட்டார். மேலும் இந்த ஏற்பாடுகள் பிரித்தானிய பாராளுமன்றத்தினைப் பின்பற்றியதாக காணப்படுகின்றது. புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு முரண் புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டவாறு நடைபெற்றதொன்றல்ல. உயர் நீதிமன்றத்தில் இந்த நியமனத்தினை கேள்விக்கு உட்படுத்தினால் 19ஆவது திருத்தச்சட்டத்தினை

பொருள்கோடல் செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும். அதேநேரம் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் மீது அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கப்பட முடியும் என்ற ஏற்பாடு அமுலாக்கப்பட்டுள்ளது. அது கூட ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை மட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தான் கொண்டுவரப்பட்டது.  அதன்பிராகரம் அரசியலமைப்பினை அவர் மீறியிருந்தார் என்றால் சாதாரண பிரஜை ஒருவர் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும்.அரச அரசாங்க அமைச்சரவை முப்படை ஆகியவற்றின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி தான் ஒரு  தீர்மானத்தினை எடுத்ததன் பின்னர் அதனை செயற்படுத்துவதற்கான பாராளுமன்றம் அமைச்சரவை ஆகியவற்றின் தீர்மானம் இன்றி தன்னிச்சையாக செயற்பட முனைதல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடயமாகும். பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இது முற்றிலும் விரோதமானது.

19ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி தற்துணிவின் பிரகாரம் தான் விரும்பியபடி தீர்மானம் எடுக்க முடியாது. அவ்வாறு இருக்கையில் பிரதமராக இல்லாத ஒருவருக்கு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்று ஜனாதிபதி அபிப்பிராயம் கொள்வதற்கு ஏதுவான காரணங்கள் கூறப்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதி தனக்கு ஏற்பட்ட உயிராபத்து அரசியல் முரண்பாடுகள் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டினாரே தவிர மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கை உள்ளதால் அவரை நியமிக்கின்றேன் என்று எந்தவொரு இடத்திலும் கூறவில்லை.

ஆகவே 42ஆவது சரத்தின் 4ஆவது உப பிரிவில் குறிப்பிட்டதற்கு அமைவாக புதிய பிரதமரின் நியமனம் மேற்கொள்ளப்படவில்லை. அதன்பிரகாரம் இதுவொரு அரசியல் தீர்மானமே தவிர அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்மானம் அல்ல. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை காண்பிக்காதவிடத்தில் புதிய பிரதமர் பதவி துறக்க வேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதி நம்பிக்கையை பெற்றவராக யார் காணப்படுகின்றாரோ அவரை பிரதமராக நியமிக்க வேண்டும்.

பாராளுமன்றம் குறித்த அதிகாரங்கள்

19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தினை கலைக்க முடியாது. அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் பிராகாரம் பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கான ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனால் அது எந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படுகின்றது என்பது தான் முக்கியமானது. தேசிய ரீதியில் பாரிய பிரச்சினைகள் எழுகின்றபோது பாராளுமன்றத்தினை ஒத்திவைக்க முடியும். ஆனால்  தற்போது பிரதமரை பதவிநீக்கம் செய்து புதிய பிரதமரை நியமித்துள்ள நிலையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதானது நன்நோக்கத்தின் அடிப்படையில் செய்யப்படவில்லை.

அரச அரசாங்க அமைச்சரவை முப்படைகள் கட்சி ஆகிய ஐந்து கட்டமைப்புக்களின் தலைவராக ஒருவரே இருக்கின்றார். உலகத்தில் கூட இத்தகைய அதிகாரங்களைக் கொண்ட ஒருவர் இல்லை. கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் இத்தகைய அதிகாரங்களை கொண்டவர்களின் செயற்பாடுகளை அனுபவரீதியாக பார்த்துள்ளோம். ஜனாதிபதி பதவி துறந்தால்?

ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையை நிரூபித்தால் ஒருமணிநேரம் கூட பதவியில் நீடிக்க இமாட்டேன் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார். ஜனாதிபதி தனது கைப்பட இராஜினாமாக்கடிதத்தினை சபாநாயகருக்கு எழுதுவதன் மூலம் பதவி துறக்கலாம். 

அவ்வாறு ஜனாதிபதி வெற்றிடமானால் 40ஆவது சரத்தின் முதலாம் உபபிரிவு ‘ஏ’ இன் பிரகாரம் பாராளுமன்றம் தன்னுடைய உறுப்பினர்களில் ஒருவரை குறித்த பதவிக்கு தகுதியானவர் எனக் கருதும் பட்சத்தில் அவரைத் தெரிந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் எஞ்சிய காலத்தில் ஜனாதிபதியாக இருப்பார் என்பதோடு ஒருமாதகாலத்திற்குள் அந்தத் தெரிவு இடம்பெற வேண்டும்.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதாக ஐ.தே.க.தரப்பினர் கூறுகின்றார்கள். அவ்வாறு கொண்டு வரப்படுகின்ற போது நீதித்துறை சார்ந்த பல விடயங்கள் இருக்கின்றன. ஆகவே அதற்கான உடனடிச்சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. 

கட்சிதாவுதல்

கட்சிதாவுதல் குறித்த மட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனினும் அதுதொடர்பான தீர்ப்புக்களை குறித்த உறுப்பினர்கள் சவாலுக்கு உட்படுத்த முடியும். லலித் அத்துலத்முதலி, காமினி திஸநாயக்க போன்றவர்கள் பதவி துறக்கும்போது ஒரு நிலைமை ஏற்பட்டது. இருப்பினும் அத்தகைய விடயங்கள் பெரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை. அதுதொடர்பில் வழக்குத் தொடரப்படுகின்போது நீண்டகாலம் செல்வதால் அதற்குள் பாராளுமன்ற காலமே நிறைவுக்கு  வந்துவிடுகிறது. கட்சிதாவலுக்கு எதிரான சட்ட ஏற்பாடு காணப்படுகின்றபோதும் இந்தியாவில் அச்சட்டத்தின் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வலிதானது செயற்படவில்லை.

பிரான்ஸ் நாட்டினை எடுத்துக்கொண்டால் அமைச்சரவை வேறாகவும் பாராளுமன்றம் வேறாகவும் உள்ளது. ஆவே அங்கு ஒருவரை அமைச்சராக்குகின்றேன் என்று கூறி அவருடைய வாக்கினை பாராளுமன்றத்தில் பெற முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சராவாராக இருந்தால் அவருடைய பாராளுமன்ற ஆசனம் வெற்றியடமாகி பிறிதொருவரே நியமிக்கப்படுகிறார்.

ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. பதவிகளை வழங்குவதன் மூலமும் பெரும்பான்மையை காண்பிக்க முடியும்.

பொருள்கோடல் சட்டம்

பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நியமிக்கும் அதிகாரம் இருக்கும் ஒருவருக்கு நீக்கும் அதிகாரம் இருக்கின்றதாக கூறப்படுகின்றது. அச்சட்டத்தின் உறுப்புரை 14(எப்) இன் பிரகாரம் அது பிரதமருக்கு ஏற்புடையதாகாது. அரசியலமைப்பில் தெளிவாக காணப்படுகின்றபோது  பொருள்கோடல் சட்டத்தினைப் பயன்படுத்த முடியாது. மேலும் பொருள்கோடல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமிக்கும் விடயங்கள் அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும். பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தாது. ஆகவே அவ்வாறான வாதத்தினையும் எடுத்துக்கொள்ள முடியாது.

 

 

http://www.virakesari.lk/article/43844

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.