Jump to content

அரசியலமைப்பு வியாக்கியானமும் அரசியலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பு வியாக்கியானமும் அரசியலும்

- பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட

இலங்கை ஜனாதிபதி தனது பிரதமரை பதவிநீக்கம் செய்துவிட்டு அவரின் இடத்துக்கு இன்னொருவரை நியமித்த நடவடிக்கை முறைமைத்தகுதியே இப்போது நாட்டில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்ற பெரும் முக்கியத்துவமுடைய ஒரு பிரதான  விவகாரமாகும்.

mahindhAA_AND_MAY3.jpg

தனது நடவடிக்கை முற்றுமுழுதாக அரசியலமைப்புக்கு இசைவானதே என்று  ஜனாதிபதி உரிமைகோரியிருக்கிறார்.மேலும் அவர் அக்டோபர் 26 அந்த நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாக சட்ட ஆலோசனையைப் பெற்றதாகவும் கூறியிருக்கிறார்.

 பதவிநீக்கப்பட்ட தனது பிரதமரைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புச் சட்டத்துடன் பரிச்சயத்தையோ அறிவையோ கொண்டவரல்ல.எனவே அவர் தான்  எடுக்க உத்தேசித்த நடவடிக்கை குறித்து சட்டத்துறையில் தொழில்சார் பின்னணியையும் நிபுணத்துவத்தையும் கொண்ட ஆலோசகர்களிடமிருந்து விளக்கங்களைப் பெற்றமை அவரைப் பொறுத்தவரை முற்றிலும் சரியானதே.

பதவியில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு புதிய ஒருவரை அந்தப் பதவியில் நியமிப்பதற்கு அரசியலமைப்பின் பிரிவு 42 (4) ஐ பயன்படுத்துவது சட்டப்படி சரியானதே என்று ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள் போலத் தோன்றுகிறது.

 விழுமியக் கட்டமைப்பு

பிரதமர் ஒருவரை தனது விருப்பப்படி பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் கீழான உறுப்புரை 42(4) அதிகாரமளிக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

அந்தப் பிரிவு தற்போது பொதுவெளியில் நன்கு தெரிந்ததாக இருப்பதால் அதை விபரிப்பதை நான் தவிர்க்கிறேன்.ஆனால்,19 வது திருத்தத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற அந்தப் பிரிவின் சொல்லாட்சியும் இலங்கையில் இப்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியலமைப்பு விழுமியக் கட்டமைப்பும் பிரதமரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்கவில்லை.

 42(4) பிரிவின் பிரயோகம் குறித்து ஜனாதிபதிக்கு அவரின் சட்டநிபுணர் குழுவினர் இரு அடிப்படைகளின் மீது ஆலோசனையை வழங்கியிருக்கிகிறார்கள் போலத் தெரிகிறது. முதலாவது, பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைக்கொண்டவர் என்ற தகுதியின் காரணமாக ஜனாதிபதி அவரைப் பதவிநீக்கவும் பொருள்கோடல் கட்டளைச்சட்டம் ( Interpretation Ordinance )இடமளிக்கிறது என்ற அடிப்படை. 

இரண்டாவது,  1978 அரசியலமைப்பு மூலப்படிவத்திலும் பிறகு அதற்குக் கொண்டுவரப்பட்ட 18 வது திருத்தத்திலும் முன்னர் இருந்த  ஏற்பாட்டை மாற்றியமைத்த 19 வது திருத்தத்தின் ஒட்டுமொத்தமான  கோட்பாட்டு மற்றும் நிறுவனரீதியான கட்டமைப்பு  மேற்கூறப்பட்ட பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செயற்படுத்துவதுடன் தொடர்பற்றது என்ற அடிப்படை.

நிபுணர்கள் மத்தியில் இதுவரையிலான  விவாதங்களில் ஜனாதிபதியின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதில் பலவீனமான வாதங்களையும்  அவரின் நடவடிக்கையின் அரசியலமைப்புத் தகுதியைக் கேள்விக்குள்ளாக்கும் வலிமையான வாதங்களையும்  அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதிக்கு ஆதரவான வாதங்கள் அரசியலமைப்பின் ஒரு சில பிரிவுகளின் நம்பகத்தன்மையற்ற -- சந்தேகத்துக்கிடமான  வியாக்கியானங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன.அவை அரசியலமைப்பின் பிரிவுகளின் வெளிப்படையான பொருள் விளக்கத்தையும் கோட்பாட்டு வழியிலான வியாக்கியானங்களுக்கு வகைசெய்யும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் முற்றுமுழுதாக அலட்சியம் செய்கின்றன.

  கட்சி அரசியல் சார்பு  வியாக்கியானங்கள்

அரச அதிகாரத்தைக் கைப்பற்றி அதைத் தக்கவைப்பதில் உறுதியான நோக்கம் கொண்ட அரசியல் வர்க்கத்தின் ஒரு பகுதியினரால் கட்சி அரசியல் சார்பான வியாக்கியானங்களுக்கு அரசியலமைப்பின் முக்கியமான பிரிவுகள் உட்படுத்தப்படுகின்ற ஒரு சூழ்நிலையை இப்போது காணக்கூடியதாக இருக்கிறது.அவர்களைப் பொறுத்தவரை அரசியலமைப்பு என்பது தங்களது இலக்கை அடைவதற்கான ஒரு வழிவகையே தவிர, ஜனநாயக அரசியல் சமுதாயமும் அதன் பிரஜைகளும் போற்றிப்பேண வேண்டிய நியமங்களினதும் விழுமியங்களினதும் ஒரு கருத்துருவம் அல்ல.

அரசியல் வர்க்கத்தின் போட்டிப் பிரிவுகள் மத்தியில் அதிகாரப் போராட்டங்கள் இடம்பெறுகின்ற நேரங்களில் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர்களினதும் அவர்களின் சட்டத்தரணிகளினதும்  விருப்பு வெறுப்புகளுக்கும் குறுகிய கால நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் இரையாகுவது  அரசியலமைப்பின் சொல்லாட்சியும் பிரிவுகளும் மாத்திரமல்ல, சாதாரண மக்களின் வாழ்வில் அரசியலமைப்பை அர்த்தமுடையதாக்குவதும் பொருத்தமானதாக்குவதுமான நியமங்களும் பண்புகளும் கூடத்தான்.

இரையாகும் அரசியலமைப்பு

தற்போதைய அதிகாரப் போராட்டம் நாட்டின் அரசியலமைப்பையும் அதில் உட்பொதிந்துள்ள ஜனநாயக விழுமியங்களையும் பிரதானமக இரையாக்குகின்றது. எனவே அரச அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களினால் தோற்றுவிக்கப்படுகின்ற சர்ச்சைக்குரிய அரசியல் சூழ்நிலைகளில் அரசியலமைப்பின் பிரிவுகளை  வியாக்கியானம் செய்யும் பொறுப்பும் அவற்றைப் பிரயோகிக்கும் முறைகள் பற்றி விளக்கும் பொறுப்பும் முற்றிலும் பக்கச்சார்பற்றவர்களை உள்ளடக்கிய அமைப்புகளிடம்  ஒப்படைக்கப்படுவது அவசியமானதாகும்.கோட்பாட்டு அடிப்படையில் நோக்குகையில் அது உச்ச நீதிமன்த்தின் பணியாகும்.

ஆனால், இலங்கையில் தற்போதைய அதிகாரப் போராட்டத்தின் தன்மை அடிப்படையில் அதிகாரத்தைப் பற்றிய அரசியல் தகராறு ஒன்றைத்  தீர்த்துவைப்பதற்கு மிகவும் பொருத்தமான அரங்கமாக நீதிமன்றம் இருக்கமுடியுமா என்ற கேள்வியைக் கிளப்புகிறது.நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருமே தற்போது வெளிக்கிளம்பியிருக்கும் அரசியலமைப்பக் கேள்விகளுக்கு தீர்மான விளக்கம் ஒன்றைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுவதில் விருப்பமில்லாதவர்களாக இருப்பதால், அந்த நெருக்கடிக்குத் தீர்வுகாணும் பொறுப்பு தொடர்ந்து அதிகாரச்சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அரசில்வாதிகளிடமே விடப்பட்டிருக்கிறது.

பாராளுமன்றத்தில் பெரும்பாலான எம்.பி.க்கள் பதவியில் இருந்த பிரதமர் நீக்கப்பட்டு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதை அங்கீகரிக்கும்  பட்சத்தில், அதனால் சந்தேகத்துக்குரிய இரு சாத்தியப்பாடுகள் தோன்றும்.அதாவது நடைமுறையில் இருக்கும் 19 வது திருத்தத்தின் ஆத்மார்த்த நோக்கங்கள் சகலவற்றையும் மீறுகின்றவகையில் அரசியலமைப்பின் முக்கியமான பிரிவு ஒன்றுக்கு பொருள் விளக்கம் கட்டமைக்கபபடும்.

இரண்டாவது, புதிதாக நியமிக்கப்பட்டிருப்பவர் உட்பட எந்தவொரு பிரதமரும் அல்லது வேறு எந்தவொரு அமைச்சரும் தங்களை தனக்கு  கீழ்ப்பணிவானவான அரசாங்க உத்தியோகத்தர்களாக  இருக்கவேண்டியவர்கள் என்று  எதிர்பார்க்கின்ற ஜனாதிபதியினால்  தன்னிச்சையாக பதவியில் இருந்து நீக்க்ப்படக்கூடிய ஆபத்தான முன்னுதாரணம் ஒன்று வகுக்கப்பட்டுவிடும்.

இந்த புதிய பொருள் விளக்கம் இறுதியில் சகல அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் தங்களை நியமிக்கின்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தயவிலேயே பதவியில் இருக்கவேண்டிய நிலைக்கு வழிவகுக்கும்.இது இலங்கையின் நிறைவேற்று அதிஙகார ஜனாதிபதி ஆட்சிமுறையை சீர்திருத்தத்திற்குள்ளாக்குவதற்கு 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட செயனமுறைகளை மறுதலையாக்குவதாகவே இருக்கும்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவினதும் மகிந்த ராஜபக்சவினதும் பழைய அரசியலமைப்புச் சூழ்ச்சித்  திட்டங்களின் முக்கியமான அம்சங்களை மைத்திரிபால சிறிசேன மீண்டும் அறிமுகப்படுத்துவதாகவே இது முடியும்.ஜனாதிபதிக்கும் புதிய பிரதமருக்கும் இடையே புதிய அதிகாரச்சண்டைக்கான முன்னோடியாக இது அமைந்துவிடாதா? புதிய பிதமரைப் பொறுத்தவரை அரசியல் அதிகாரம் தொடர்பிலான அவரின் விளக்கப்பாடு ஜனாதிபதி சிறிசேனவின் விளக்கப்பாட்டிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும்.

பாராளுமன்றம் கூட்டப்படும் திதகி குறித்து இப்போது பல வதந்திகள் உலவுகின்றன. தற்போதைய நெருக்கடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கிடையில் எத்தகைய இணக்கப்பாடுகள், விட்டுக்கொடுப்புகள் ஆராயப்படுகின்றனவே எமக்குத் தெரியாது.

 

http://www.virakesari.lk/article/43829

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.