Jump to content

ஒப்ரேஷன் வியாழேந்திரன்: விமான நிலையம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரை… நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்ரேஷன் வியாழேந்திரன்: விமான நிலையம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரை… நடந்தது என்ன?

November 3, 2018
45318227_2340499245979998_79482886915484

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று கட்சி தாவி, அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டார். சமூக வலைத்தளம் முழுவதும் அவரது முடிவை கண்டித்து, விமர்சனங்களால் நிறைந்து போயிருக்கிறது.

வியாழேந்திரன் 48 கோடிக்கு விலை பேசப்பட்டார்… மஹிந்த ராஜபக்ச நேரடியாக பேசினார்… கனடாவில் 30 கோடி கைமாறியது என சமூக வலைத்தளங்கள் முழுவதும் வியாழேந்திரன்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

வியாழேந்திரன் எப்படி வளைத்தெடுக்கப்பட்டார், எப்படியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன, யார் எல்லாம் இந்த டீலின் பின்னணியில் இருந்தார்கள் என்ற தகவல்களை தமிழ்பக்கம் திரட்டியுள்ளது.

எல்லாவற்றிற்கும் முன்னதாக ஒரு தகவல். வியாழேந்திரனுக்கும் கிழக்கு ஆளுனர் ரோஹித போகொல்லாஹமவிற்குமிடையில் கடந்த ஐந்து மாதங்களாக நல்ல நெருக்கமிருந்தது. அடிக்கடி தனிப்பட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

நெருக்கம் ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே கிழக்கு ஆளுனர் ஒரு கோரிக்கையை வியாழேந்திரனிடம் முன்வைத்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமக்கு (அவர் மைத்திரியை குறிப்பிட்டாரா அல்லது மஹிந்தவை குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை) ஆதரவளிக்குமாறு கேட்டிருந்தார்.

இந்த சமயத்தில் கிழக்கில் வியாழேந்திரன் கவனிக்கப்படும் ஒருவராகியிருந்தார். நிப அபகரிப்பிற்கு எதிராக தொடர்ந்து பேச, மட்டக்களப்பின் பல இளைஞர்கள் அவருடன் இணைந்து வேலைசெய்தனர். அவர்களில் மிகமிக நெருக்கமான ஒரு சிலரிடம், ஆளுனரின் வேண்டுகோளை வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். அப்போதே அந்த தகவல் கிடைத்து, ஒரு கொசிப் செய்தியாக தமிழ் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம்.

 

அந்த சமயத்திலேயே அவரை ஆதரித்த இளைஞர்கள் அவரிடம் நிபந்தனையொன்றை வைத்திருந்தார்கள். நீங்கள் அமைச்சு பதவியெடுத்து அபிவிருத்தி செய்யப் போகிறேன் என கூறும் அரசியல் செய்ய போகிறீர்களா, அல்லது கொள்கைவழி செயற்பட போகிறீர்களா என. கொள்கைவழி அரசியலிலேயே ஈடுபட போகிறேன் என தனது ஆதரவாளர்களிடம் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் சில மாதங்களின் முன்னர் மட்டக்களப்பிற்கு அடிக்கடி விசிற் அடித்தது உங்களிற்கு நினைவிருக்கலாம். தமது கூட்டணியில் இணையும்படி மனோ கணேசனும், வியாழேந்திரனிற்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பதையும் அப்போதே தமிழ்பக்கம் அறிந்திருந்தது. ஆனால் அதையும் வியாழேந்திரன் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே கிழக்கு ஆளுனர் மூலம் வியாழேந்திரனின் சிபாரிசில் அபிவிருத்தி வேலைகள் நடந்தன. மட்டக்களப்பின் மற்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு அல்லாமல், வியாழேந்திரனுக்கு மாத்திரம் இந்த சலுகை வழங்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் ஆளுனர் தரப்பிற்கு நெருக்கமானவராக செயற்பட்டு வந்தார் வியாழேந்திரன்.

 

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். வியாழேந்திரன் விரைவாக ஆளுனரை நோக்கி தள்ளப்பட்டதற்கு, கூட்டமைப்பின் உட்கட்சி பிரச்சனையொன்றும் காரணம். கிழக்கில்- குறிப்பாக மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி, ரெலோ சார்பில் எம்.பி மற்றும் பிரமுகர்களாக இருந்தவர்கள் எல்லோரையும் விட நன்றாக ஸ்கோர் செய்தவர் வியாழேந்திரன். வியாழேந்திரன் அரசியலில் இருக்கும் வரை தமக்கு சிக்கலென்று கருதிய முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மற்றும் பிரமுகர்கள் கூட்டமைப்பின் தலைவரிடம் தினமும் வியாழேந்திரனை பற்றி முறையிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இது உச்சக்கட்டத்தை எட்டியதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கூட்டமைப்பின் தலைமைக்கும், வியாழேந்திரனுக்கும் நல்ல உறவு இருக்கவில்லை. மத்திய அரசிடம் பெற்றுக்கொடுக்கும் அபிவிருத்தி நிதிகளிலும் வியாழேந்திரன் ஒதுக்கப்பட்டிருந்தார். இந்த வாய்ப்பை சு.க நன்றாகவே பயன்படுத்தியிருந்தது.

திருகோணமலையிலுள்ள சு.க முக்கியஸ்தர் ஒருவர் வியாழேந்திரனுக்கு நெருக்கமானவர். கனடாவிலும் சு.க முக்கியஸ்தர் ஒருவர் இருக்கிறார். திருகோணமலை முக்கியஸ்தரின் ஏற்பாட்டில், கனடாவில் முதற்கட்ட பேச்சுக்கள் நடந்து முடிந்துள்ளன.

நேற்று (02) விமானநிலையத்தில் வியாழேந்திரன் இறங்கியதும், மட்டக்களப்பை சேர்ந்த அங்கிலிக்கன் பாதிரியார் ஒருவர் தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, கொழும்பிலுள்ள ஜெட்விங் ஹொட்டலில் தங்க வைத்தார். மாலைவரை அங்கேயே தங்க வைக்கப்பட்டு, பேச்சு நடந்தது. ஆளுனரும் அங்கு நேரடியாக வந்திருந்தார் என்ற தகவல் நேற்றே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த பேச்சுக்களில் என்ன நடந்ததென்பதை, வியாழேந்திரனின் உதவியாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேசினோம். “ஒரு ஊடகவியலாளர், திருகோணமலை முக்கியஸ்தர், முக்கியமான சிலர் மாஸ்டருடன் பேசினார்கள். இடையில் நாங்களும் மாஸ்ரரும் பேசினோம். பேசி முடிந்ததும் நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு ஏற்றி சென்றார்கள்“ என்றார்.

அந்த ஹோட்டலில் இருந்து ஊடகவியலாளர் ஒருவரின் வாகனத்தில் “மின்னல்“ ஆக அவர்கள் பறந்து சென்றுள்ளனர். அதன் பின் பதவியேற்பு.

கட்சி தாவுவதற்காக வியாழேந்திரனிற்கு ஐந்து கோடி பணம் வழங்கப்பட்டது என செய்திகள் அடிபடுவது உண்மையா என கேட்டோம். “அதைப்பற்றி உறுதியாக நமக்கு தெரியாது. எங்களுடன் அதைப்பற்றி பேசவில்லை. அப்படியொரு செய்தியை நாங்களும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் உறுதியாக எதுவும் தெரியாது. கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் அண்ணனைத்தான் நிறுத்துவோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்“ என்றார்கள்.

amal-300x168.png ஜனாதிபதி, வியாழேந்திரனின் உதவியாளர்கள், திருகோணமலை சு.க அமைப்பாளர்

கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக வியாழேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தாலும், நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, பெயருக்கு முன்னால் ஒரு கௌரவமாக மட்டுமே அந்த அமைச்சு இருக்கும். அதற்கான அலுவலகமோ… ஆளணியோ எதுவுமே உருவாக்கப்படவில்லை.

வியாழேந்திரனின் உதவியாளர்கள்தான், அன்றைய தினமே மஹிந்த ராஜபக்ச, மைத்திரியுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

 

http://www.pagetamil.com/22087/

Link to comment
Share on other sites

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மற்றும் என் நண்பர்கள் சிலர் எல்லாம் வியாழேந்திரனின் கட்சி தாவலை / அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டதை பாராட்டி மகிழ்ச்சியைத் தான் வெளிக்காட்டுகின்றார்கள். அங்குள்ள கள நிலவரத்தின் படி ஒரு அமைச்சு பதவியை கிழக்கு தமிழர் பெற்றுக் கொள்வது தான் முஸ்லிம்களின் அடாத்தை கட்டுப்படுத்தும் எனும் போக்கில் அவர்களின் எண்ணம் உள்ளது. இது எந்தளவுக்கு சரி வரும் என தெரியாது , ஆனால் வெறுமனே எதிர்ப்பு அரசியலை செய்வதால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கின்றனர்.

வடக்கை சேர்ந்தவர்கள் தான் சமூக வலைத்தளங்களில் கருணாவுக்கு அடுத்த துரோகி என்று வியாழேந்திரனுக்கு முத்திரை குத்துகின்றனர். தம் படலையில் டக்கிளஸ், சித்தார்த்தன் என்று ஒரு பெரும் பட்டாளத்தை வைத்துக் கொண்டு...

Link to comment
Share on other sites

கிழக்கின் நிலையை அவரிடம் ஒரு முறை பேசிய போது மிக கவலையாக குறிப்பிட்டார். கூட்டமைப்பின் மற்றையவர்கள் போல அல்லாமல் மிகுந்த ஈடுபாட்டுடன் கிழக்கு மக்களுக்காக சேவை செய்யும் ஒரே  கூட்டமைப்பு மனிதர். பணம் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் அமுல் படுத்த முடியாமல் இருப்பதாக சொன்னார்.பணம் சேர்ப்பதற்காக சில முறை கனடா வந்துள்ளார்.  கூட்டமைப்புடன் சேர்ந்து எந்த சேவையையும் மக்களுக்கு செய்ய முடியாது என்பதால் தான் அரசுடனாவது இணைந்து ஏதாவது மக்களுக்கு செய்யலாம் என நினைக்கிறேன். யார் அவரை துரோகி என்றாலும் சுயேச்சையில் போட்டியிட்டாலும் வெல்ல கூடிய நிலையில் தான் வியாழேந்திரன் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கைச் சேர்ந்தவர்கள் டக்ளசையும் விஜயகலாவையும் அங்கயனையும் அவர்களாகவே தேர்தலில் வாக்களித்துப்பாராளுமன்றம் அனுப்புவார்கள் ஆனால் தனது பிரதேசத்துதின் நலனுக்காக கட்சிதாவுகிறேன் என இடம்மாறும் கிழக்கு அரசியல்வாதிகளுக்கு துரோகி முத்திரை குத்துவார்கள். தற்போதையதேவை தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் அரசுடன் சேர்ந்து கிழக்கில் முஸ்லீம்களது அடாவடியை ஒடுக்குவதுதான் கிழக்கின் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் இதுபோல் நிலையெடுப்பது நல்லதே.

சம்மந்தர் மாவை சுமந்திரன் சுரேஸ் போன்றவர்கள் கடந்தகாலத்தில் அடிச்ச காசையும் இந்தியா கொடுத்த காசையும் வைச்சு வாழட்டும்.

என்னைப்பொறுத்தவரை யாழ் குடாநாட்டு அரசியல்வாதிகள் என நாடகமாடும் இவர்களைப்புறமொதிக்கி சிங்களத்தலைமைகளுடன் கிழக்கு இணைவதே அவர்கள் தங்கள் மண்ணையாயினும் காப்பதற்கு வாய்ப்பாயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் மாவை கும்பல்..கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரை வார்த்ததை விட இவர் ஒன்றும் பெரிய துரோகம் செய்ததாகத் தெரியவில்லை. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மற்றும் என் நண்பர்கள் சிலர் எல்லாம் வியாழேந்திரனின் கட்சி தாவலை / அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டதை பாராட்டி மகிழ்ச்சியைத் தான் வெளிக்காட்டுகின்றார்கள். அங்குள்ள கள நிலவரத்தின் படி ஒரு அமைச்சு பதவியை கிழக்கு தமிழர் பெற்றுக் கொள்வது தான் முஸ்லிம்களின் அடாத்தை கட்டுப்படுத்தும் எனும் போக்கில் அவர்களின் எண்ணம் உள்ளது. இது எந்தளவுக்கு சரி வரும் என தெரியாது , ஆனால் வெறுமனே எதிர்ப்பு அரசியலை செய்வதால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கின்றனர்.

வடக்கை சேர்ந்தவர்கள் தான் சமூக வலைத்தளங்களில் கருணாவுக்கு அடுத்த துரோகி என்று வியாழேந்திரனுக்கு முத்திரை குத்துகின்றனர். தம் படலையில் டக்கிளஸ், சித்தார்த்தன் என்று ஒரு பெரும் பட்டாளத்தை வைத்துக் கொண்டு...

எப்பவும் வடக்கு மக்களும் சரி அரசியல் வாதிகளும் சரி சிலவற்றை ஏற்றுக்கொள்ளும் மனபாங்கு இன்னும் வளரவில்லை  இன்று வரைக்கும் துரோகியாக நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் கிழக்கு கிழக்கு மக்களை இதைப்பற்றி கவலை கொள்வதில்லை கிழக்கு மக்கள் ஏனென்றால் இதுவரை பெரிதாக வட மாகாண அரசியல் வாதிகள் கிழக்கினைப்பற்றி எங்கும் பெரிதாக கதைத்ததும் இல்லை 

1 hour ago, nunavilan said:

கிழக்கின் நிலையை அவரிடம் ஒரு முறை பேசிய போது மிக கவலையாக குறிப்பிட்டார். கூட்டமைப்பின் மற்றையவர்கள் போல அல்லாமல் மிகுந்த ஈடுபாட்டுடன் கிழக்கு மக்களுக்காக சேவை செய்யும் ஒரே  கூட்டமைப்பு மனிதர். பணம் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் அமுல் படுத்த முடியாமல் இருப்பதாக சொன்னார்.பணம் சேர்ப்பதற்காக சில முறை கனடா வந்துள்ளார்.  கூட்டமைப்புடன் சேர்ந்து எந்த சேவையையும் மக்களுக்கு செய்ய முடியாது என்பதால் தான் அரசுடனாவது இணைந்து ஏதாவது மக்களுக்கு செய்யலாம் என நினைக்கிறேன். யார் அவரை துரோகி என்றாலும் சுயேச்சையில் போட்டியிட்டாலும் வெல்ல கூடிய நிலையில் தான் வியாழேந்திரன் உள்ளார்.

ம்ம் உண்மைதான் இவர் கூட்டமைப்பில் இருப்பது பலருக்கு பிடிக்கவில்லை முட்டுக்கட்டை மட்டும் கூட்டமைப்பு 

53 minutes ago, Elugnajiru said:

வடக்கைச் சேர்ந்தவர்கள் டக்ளசையும் விஜயகலாவையும் அங்கயனையும் அவர்களாகவே தேர்தலில் வாக்களித்துப்பாராளுமன்றம் அனுப்புவார்கள் ஆனால் தனது பிரதேசத்துதின் நலனுக்காக கட்சிதாவுகிறேன் என இடம்மாறும் கிழக்கு அரசியல்வாதிகளுக்கு துரோகி முத்திரை குத்துவார்கள். தற்போதையதேவை தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் அரசுடன் சேர்ந்து கிழக்கில் முஸ்லீம்களது அடாவடியை ஒடுக்குவதுதான் கிழக்கின் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் இதுபோல் நிலையெடுப்பது நல்லதே.

சம்மந்தர் மாவை சுமந்திரன் சுரேஸ் போன்றவர்கள் கடந்தகாலத்தில் அடிச்ச காசையும் இந்தியா கொடுத்த காசையும் வைச்சு வாழட்டும்.

என்னைப்பொறுத்தவரை யாழ் குடாநாட்டு அரசியல்வாதிகள் என நாடகமாடும் இவர்களைப்புறமொதிக்கி சிங்களத்தலைமைகளுடன் கிழக்கு இணைவதே அவர்கள் தங்கள் மண்ணையாயினும் காப்பதற்கு வாய்ப்பாயிருக்கும்.

பிரச்சினையை நன்றாக விளங்கிக்கொண்டீர்கள் நன்றி சகோ:90_wave:

51 minutes ago, nedukkalapoovan said:

சம் சும் மாவை கும்பல்..கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரை வார்த்ததை விட இவர் ஒன்றும் பெரிய துரோகம் செய்ததாகத் தெரியவில்லை. ?

அதேதான் நெடுக்கு முஸ்லீம்களுக்கு ஆள கொடுத்ததன் மூலம் இழந்தது அதிகம் இப்ப வாகரை வரைக்கும் சென்று விட்டார்கள் அவர்கள் நிலமாம் 

Link to comment
Share on other sites

தேர்தலுக்கு மாதிரம்  தமிழ்தேசியக்கூட்டமைப்பு   வென்ற பின் கட்சி தாவினால்  மக்களுக்காக. தேர்தலிலும்  சுயேட்சையாக நின்று  வென்று  மக்கள் சேவையை செய்ய வேண்டியது தானே.  எல்லாம் காசுக்காக விலை போகும் தமிழர்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மற்றும் என் நண்பர்கள் சிலர் எல்லாம் வியாழேந்திரனின் கட்சி தாவலை / அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டதை பாராட்டி மகிழ்ச்சியைத் தான் வெளிக்காட்டுகின்றார்கள். அங்குள்ள கள நிலவரத்தின் படி ஒரு அமைச்சு பதவியை கிழக்கு தமிழர் பெற்றுக் கொள்வது தான் முஸ்லிம்களின் அடாத்தை கட்டுப்படுத்தும் எனும் போக்கில் அவர்களின் எண்ணம் உள்ளது. இது எந்தளவுக்கு சரி வரும் என தெரியாது , ஆனால் வெறுமனே எதிர்ப்பு அரசியலை செய்வதால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கின்றனர்.

வடக்கை சேர்ந்தவர்கள் தான் சமூக வலைத்தளங்களில் கருணாவுக்கு அடுத்த துரோகி என்று வியாழேந்திரனுக்கு முத்திரை குத்துகின்றனர். தம் படலையில் டக்கிளஸ், சித்தார்த்தன் என்று ஒரு பெரும் பட்டாளத்தை வைத்துக் கொண்டு...

இப்படி எழுதுவது வடக்கு கிழக்கு மக்களை பிரிக்கதான் உதவும். பத்திரிகைகாரர்கள் கதைக்கிறார்கள் என்றால், நீங்கள் அதையேன் இங்கு வந்து போடுகிறீர்கள். களமானது வடகிழக்குக்கு மக்கள் வந்து வாசிக்கும் ஒரு தளம். தமிழன் என்ற முறையில் பொறுப்பாக செய்திகளையும் கருத்துக்களையும  பகிரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புடன் சேர்ந்திருப்பதால் எவருக்குமே எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், இதுவரையில், சேர்ந்திருந்து சேர்ந்திருந்து கண்டது எதுவுமில்லை. இனியும் எதுவுமே நடக்கப்போவதில்லை. நண்பர் ஒருவர் சொன்னதுபோல, தமிழ்த்தேசிய அரசியல் இனி எடுபடாது. அது வேண்டுமென்றால், உங்கள் மனதிலும், உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டூவதொடும் நிற்கட்டும். அதைவைத்து அரசியல் செய்ய முடியாது.


கூட்டமைப்பினை தமிழ்த்தேசியத்தின்  ஒரு வடிவமாகப் பார்ப்பதால்த்தான், சிங்களவர்கள் எதையுமே தரமறுக்கிறார்கள். ஆனால், சிங்கள அரசியல்வாதிகளுக்கு இவர்கள் தேவை தமது அரசியலுக்கு. இவர்களின் தமிழ்த்தேசியத்தின்  வீரியத்தை நன்கே அறிந்துவைத்துள்ள அவர்கள், தேவைக்கேற்றவாறு இவர்களைப் பாவிக்கிறார்கள். ஆனால், இவர்கள் பிரதிநித்துவப்படுத்தும் மக்களுக்கு ஈற்றில் எதுவுமே கிடைக்கப்போவதில்லை, நல்லிணக்க அரசும் சம்மந்தனையும், சுமந்திரனையும் பாவித்து பதவிக்கு வந்தார்களே ஒழிய, தாம் தருவதாகச் சொன்ன எதையுமே தரவில்லை. மைத்திரி ஒருபடி மேலே சென்று நான் உயிரோடு இருக்கும்வரை சமஷ்ட்டி என்பதோ, வடக்குக் கிழக்கு இணைப்பென்பதோ நடக்க விடப்போவதில்லை என்று வேறு சூளுரைத்திருக்கிறார். நிலைமை இப்படியிருக்கிறது.

தமிழர்களிலிருந்து முஸ்லீம்கள் அந்நியப்பட்டதுபோல, வடக்குத் தமிழர்களும் கிழக்குத் தமிழர்களும் பிரிந்து இயங்குவதுதான் யதார்த்தம் என்றால் அதை எவராலும் தடுக்க முடியாது. அவர்களது அரசியலை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். தமிழ்த் தேசியத்தில் நின்று இன்றுவரை சாதித்தவை எதுவுமேயில்லை என்றானபிறகு, தொடர்ந்தும் அங்கே நிற்பதிலும், ஏதோ ஒரு பெரும்பான்மை அரசியல்த் தலைவருக்கு அவ்வப்போது எடுபிடியாக பாவிக்கப்படுதலிலும் பார்க்க, அவர் தனித்தோ அல்லது நேரடியாகவோ சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுடன் இணைந்து, கூட்டமைப்பிலிருந்து செய்ய முடியாததை, இப்போது செய்யட்டும்.

ஆனால், இங்கே முன்வைக்கப்படும் காரணங்களில் என்னை ஒன்றே ஒன்று உருத்துகிறது. அதாவது முஸ்லீம்களின் அடாவடி காணிப்பறிப்பிற்கு முகம்கொடுக்கத்தான் மகிந்தவுடன் இணைகிறோம் என்பது. எம்மில் பலருக்கு உண்மையான எதிரியார்? உண்மையான நண்பன் யார் என்று பிரித்துப் பார்ப்பதில் எப்போதும் ஒரு பிரச்சினை இருக்கிறது. முஸ்லீம்கள் காணி பறிக்கிறார்கள் என்பதற்காக, சிங்களம் இன்றுவரை தமிழர்களுக்கெதிராக, அவர்கள் கிழக்காக இருந்தாலும் சரி, வடக்காக இருந்தாலும் சரி, செய்த அநியாயங்களும், அக்கிரமங்களும், இறுதியான 2009 முள்ளிவாய்க்கால் திட்டமிட்ட இனக்கொலையும் எமக்கு  மறந்ததுபோனது  எப்படி?

 இன்றும் முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய தமிழ் இடங்களில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வது யார்? அதைத் தடுக்க நாம் யாருடன் இணையப் போகிறோம்? அல்லது 50 களில் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கின் தமிழரின் பாரம்பரிய நிலங்களை அபகரித்து கொழுத்திருக்கும் கல்லோயா தொடங்கலாக, அம்பாறை, பொத்துவில் என்று நீளும் பறிபோன தமிழ்க் கிராமங்களின் பட்டியலில் இருப்பவை யாரால் அபகரிக்கப்பட்டவை, முஸ்லீம்களாலா? இவற்றை மீட்பதற்கு யாருடன் கூட்டுச் சேர்வதாக உத்தேசம்? 

பெளத்த சின்னங்களைப் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில் இன்னுமின்னும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்களத்தால் காவுகொள்ளப்படவிருக்கும் தமிழரின் நிலங்கள் பற்றிப் புரிகிறதா உங்களுக்கு? இதைத் தடுக்க யாருடன் கூட்டுச் சேரப் போகிறீர்கள்? தமிழர்கள் முட்டாள்கள். ஆத்திரக் காரர்கள். அவசரக் காரர்கள். முஸ்லீம்கள் செய்வது பெரிதாகத் தெரியும் எமக்கு, அரசு செய்வது தெரியவில்லை. சிங்களம் எம்மீது நடத்தி முடித்த இனவழிப்புப் போருக்குப் பின்னரும் கூட எம்மில பலர், "சிங்களவோனோட சேர்ந்து வாழலாம், ஆனால் இந்தக் காக்காமாரோட சேர்ந்து வாழ ஏலாது" என்று வாய்கூசாமல்ச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அப்படி சிங்களம் செய்ததை விட இந்தக் காக்காமார் என்னதான் செய்துவிட்டார்கள் உங்களுக்கு ? நீங்கள் அவர்களுக்குச் செய்யாததை விடவா அவர்கள் செய்துவிட்டார்கள்? 

மகிந்த பதவியேற்றவுடன் அவரைச் சந்திக்கச் சென்ற பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் கூட்டு அறிக்கையை யாராவது படித்தீர்களா? மகிந்த இனி என்ன செய்யவேண்டும் என்று வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பார்த்தீர்களா? கிளிநொச்சியில் ராணுவம் அமைத்த ஒரு செங்கல் மதிலை சிறிதரன் உடைத்தபோது, 3000 ஆண்டு புத்த சின்னத்தை உடைத்து தமிழின வெறியைக் காட்டுகிறது கூட்டமைப்பு என்று நாடகமாடிய சிங்களம், இன்று நாடுமுழுவதுமுள்ள பெளத்த சின்னங்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று சொல்வதன் மூலம் நடக்கவிருக்கும் அநியாயத்தின் அளவு புரிகிறதா உங்களுக்கு? அதேபோல வடக்குக் கிழக்கு இணைப்பென்பதும், சமஷ்ட்டி என்பதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டியவை என்றும் கோரப்பட்டிருப்பது தெரியுமா யாருக்காவது?

உங்களின் சுயநலத்திற்கோ, அல்லது உங்களின் தோழர்களின் நலன்களுக்காகவோ அல்லது உங்களின் கிராம - பிரதேச நலன்களுக்காகவோ உண்மையாகவே உழைக்க வேண்டுமென்றால் தாராளமாகப் போய்ச் சேருங்கள், பணத்தை வாங்குங்கள், நீங்களும் அனுபவித்து மற்றவனுக்கும் கொடுங்கள். அதை விடுத்து முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பிற்கெதிராகத்தான் சிங்களத்துடன் கூட்டுச் சேர்கிறோம் என்று மட்டும் சொல்லாதீர்கள், ஏனென்றால, சிங்களமே மிகவும் மோசமான ஆக்கிரமிப்பாளன். அதேபோல முஸ்லீம் ஆக்கிரமிப்பென்பது சிங்களத்தின் ஆசீர்வாதம் இல்லாமல் நடைபெறுவதுமில்லை. பிரித்தாளும் தந்திரம் பற்றி ஆளாளுக்குப் பாடமெடுத்த நாங்களா இப்படிப் பேசுவது?

தன்னால் இயலாவிட்டாலும் கூட, இன்றுவரை தமிழ்த்தேசியம் எனும் பெயரைத் தாங்கிக்கொண்டு இன்றுவரை ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழும் திரு ஞானவரோதயம் சம்பந்தன் ஐய்யா அவர்களுக்காக உண்மையாகவே வேதனைப்படுகிறேன்.  ஆனால், தேசியம் தேசியம் என்று தான் வளர்த்தவர்கள் ஒருநாள் தன்னை விட்டுப் போவார்கள் என்று அவர் அறிந்தே வைத்திருப்பார். எல்லாத் தலைவர்களுக்கும் இது ஒரு கட்டத்தில் நடக்கும். இதுதான் தமிழர்களின் வரலாறு. 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மற்றும் என் நண்பர்கள் சிலர் எல்லாம் வியாழேந்திரனின் கட்சி தாவலை / அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டதை பாராட்டி மகிழ்ச்சியைத் தான் வெளிக்காட்டுகின்றார்கள். அங்குள்ள கள நிலவரத்தின் படி ஒரு அமைச்சு பதவியை கிழக்கு தமிழர் பெற்றுக் கொள்வது தான் முஸ்லிம்களின் அடாத்தை கட்டுப்படுத்தும் எனும் போக்கில் அவர்களின் எண்ணம் உள்ளது. இது எந்தளவுக்கு சரி வரும் என தெரியாது , ஆனால் வெறுமனே எதிர்ப்பு அரசியலை செய்வதால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கின்றனர்.

வடக்கை சேர்ந்தவர்கள் தான் சமூக வலைத்தளங்களில் கருணாவுக்கு அடுத்த துரோகி என்று வியாழேந்திரனுக்கு முத்திரை குத்துகின்றனர். தம் படலையில் டக்கிளஸ், சித்தார்த்தன் என்று ஒரு பெரும் பட்டாளத்தை வைத்துக் கொண்டு...

நிழலி நீங்கள் ஏன் வடக்கு கிழக்கு என்று கொண்டுவருகின்றீர்கள்...வியாழேந்திரன் நல்லது செய்யத்தான் அமைச்சர் பதவி ஏற்றுகொண்டார் என்றால் அதை பாராட்டுவோம்....

துரோகம் என்று வரும் பொழுது வடக்கு ,கிழக்கு என்று பார்க்கமுடியாது .....தமிழ்தேசியகூட்டணியை விட பெரிய துரோகிகள் வேறு யாருமில்லை....

2 hours ago, நேசன் said:

தேர்தலுக்கு மாதிரம்  தமிழ்தேசியக்கூட்டமைப்பு   வென்ற பின் கட்சி தாவினால்  மக்களுக்காக. தேர்தலிலும்  சுயேட்சையாக நின்று  வென்று  மக்கள் சேவையை செய்ய வேண்டியது தானே.  எல்லாம் காசுக்காக விலை போகும் தமிழர்.
 

உண்மை நேசன் ,கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

வியாழேந்திரனோ இல்லை கருணாவோ மகிந்த அரசில் பதவி வகிப்பதால் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தலாம் என்று பொருள் இல்லை. அதே போல் வடக்கில் உள்ள அரசியல் வாதிகள் இவர்கள் போல் முடிவெடுப்பதால் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுக்கலாம் என்று பொருள் இல்லை.  இவைகள் பேச்சளவில்  இருக்கலாம் தவிர நடமுறையில் சாத்தியமில்லை. எப்போது ஒருவர் தனது ஊருக்கும் பிரதேசத்துக்கும் என்றளவில் தனது சிந்தனையை குறுக்குகின்றாரோ அப்போதே பேரினவாதம் எந்த முயற்சியும் இல்லாமல் வெற்றி பெறுகின்றது .என்னும் தூர நோக்கில் சிந்தித்தால் பேரினவாதத்தின அடுத்த கட்டம் இஸ்லாமியர்கள் பரவலை தடுப்பது. அதை அவர்கள் நேரடியாக செய்யப்போவதில்லை. தமிழர்களுக்கும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும் இடையிலான பகையை விருத்தி செய்வதே அவர்களின் தெரிவில் முதன்மையானதாக இருக்கும்.  அதற்கு எற்றாற் போல்தான் அனைத்து அணுகுமுறைகளும் மாற்றங்களும் தென்படுகின்றது.  கடந்த காலங்களைப் பார்த்து திருந்த மறுக்கும் எம்மவருக்கு எதிர்காலத்தில் மேலும் சில அழிவுகள் தவிர்க்க முடியாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

 

தன்னால் இயலாவிட்டாலும் கூட, இன்றுவரை தமிழ்த்தேசியம் எனும் பெயரைத் தாங்கிக்கொண்டு இன்றுவரை ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழும் திரு ஞானவரோதயம் சம்பந்தன் ஐய்யா அவர்களுக்காக உண்மையாகவே வேதனைப்படுகிறேன்.  ஆனால், தேசியம் தேசியம் என்று தான் வளர்த்தவர்கள் ஒருநாள் தன்னை விட்டுப் போவார்கள் என்று அவர் அறிந்தே வைத்திருப்பார். எல்லாத் தலைவர்களுக்கும் இது ஒரு கட்டத்தில் நடக்கும். இதுதான் தமிழர்களின் வரலாறு. 


 

.ஒரு பழுத்த அரசியல்வாதி செய்யக்கூடிய செயலை அவர் செய்யவில்லை...கடந்த 10 வருடமாக அவர் செய்த அரசியல் என்பது  முட்டாள் தனமானது ...இப்படியான நிலை வரும் என்பது சாதாரண திண்ணை அரசியல் அலட்டல்மன்னர்களுக்கே தெரிந்த விடயம்...

இன்று கூட இவர் ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை காட்டி ஒரு சிறு சல‌ன‌த்தை செய்ய முடியும்....ஆனால் செய்யமாற்றார்...

கிழக்கு மாகாண அரசியலையும் ஒழுங்காக செய்யவில்லை,தமிழ்தேசிய அரசியலையும் செய்யவில்லை,சிறிலங்கா தேசிய அரசியலையும் ஒழுங்காக செய்யவில்லை

2 minutes ago, சண்டமாருதன் said:

தமிழர்களுக்கும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும் இடையிலான பகையை விருத்தி செய்வதே அவர்களின் தெரிவில் முதன்மையானதாக இருக்கும்.  அதற்கு எற்றாற் போல்தான் அனைத்து அணுகுமுறைகளும் மாற்றங்களும் தென்படுகின்றது.  கடந்த காலங்களைப் பார்த்து திருந்த மறுக்கும் எம்மவருக்கு எதிர்காலத்தில் மேலும் சில அழிவுகள் தவிர்க்க முடியாதது. 

உலக அரசியலே அதுதானே....அடுத்த கட்டம் இராணுவம்,பொலிஸ் போன்றவற்றில் தமிழர்களை சேர்த்து கொள்வார்கள்....புலனாய்வுபிரிவினர்....

Link to comment
Share on other sites

On 11/3/2018 at 4:39 PM, நேசன் said:

தேர்தலுக்கு மாதிரம்  தமிழ்தேசியக்கூட்டமைப்பு   வென்ற பின் கட்சி தாவினால்  மக்களுக்காக. தேர்தலிலும்  சுயேட்சையாக நின்று  வென்று  மக்கள் சேவையை செய்ய வேண்டியது தானே.  எல்லாம் காசுக்காக விலை போகும் தமிழர்.
 

சுயேச்சையாக நின்று வெல்லக்கூடியவரை தான் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்தது. (புளட்). கூட்டமைப்புடன் நின்று எதுவும் செய்ய முடியாது என தெரிந்து விட்டது. அரசுடன் சேர்ந்தாவது மக்களுக்கு சேவை செய்யலாம் என கிழக்கின் நிலைமையில் இருந்து சிந்தித்து செயற்பட்டிருக்கலாம். அவரை போல கிழக்கில் மக்களுக்கு சேவை செய்யும் ஒருவரை கிழக்கில் காட்ட மாட்டீர்கள். சுயேச்சையாக வெல்லாம். பணம் இல்லாமல் மக்களுக்கு எதை செய்வது??

Link to comment
Share on other sites

இப்ப எல்லாம் கிழிஞ்சு போச்சு 

அரசும் கலைச்சாச்சு.     சுஜேட்சையாய் நிற்க வேண்டியது தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2018 at 4:29 PM, nunavilan said:

சுயேச்சையாக நின்று வெல்லக்கூடியவரை தான் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்தது. (புளட்). கூட்டமைப்புடன் நின்று எதுவும் செய்ய முடியாது என தெரிந்து விட்டது. அரசுடன் சேர்ந்தாவது மக்களுக்கு சேவை செய்யலாம் என கிழக்கின் நிலைமையில் இருந்து சிந்தித்து செயற்பட்டிருக்கலாம். அவரை போல கிழக்கில் மக்களுக்கு சேவை செய்யும் ஒருவரை கிழக்கில் காட்ட மாட்டீர்கள். சுயேச்சையாக வெல்லாம். பணம் இல்லாமல் மக்களுக்கு எதை செய்வது??

உண்மை... அது தான். 
சம்பந்தன்... பழைய..  பத்திரிகை  படிக்கத்தான் லாயக்கு.

சுமந்திரனை....  ஒருக்கா, அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி...  
அடி   அரசியல் பால  பாடம் கற்றுக் கொள்ள, பயிற்சி கொடுக்க வேண்டும்.

மாவை... தானும்  ஒரு ஆள் (ரவுடி) என்று, வரப்  பார்ப்பார்... 
ஆளை...  மெல்லமாய்.. "காய் வெட்டி விட்டு",   வாருங்கள்.
மாவை... உள்ளூரில் உழுவது... தான், நாட்டுக்கு நல்லது. 

Link to comment
Share on other sites

8 hours ago, நேசன் said:

இப்ப எல்லாம் கிழிஞ்சு போச்சு 

அரசும் கலைச்சாச்சு.     சுஜேட்சையாய் நிற்க வேண்டியது தானே

நிண்டால் போச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.