Jump to content

முஸ்லிம் அரசியல்வாதிகள்: மக்களின் நிலைப்பாடு என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் அரசியல்வாதிகள்: மக்களின் நிலைப்பாடு என்ன?

மொஹமட் பாதுஷா / 2018 நவம்பர் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:49 Comments - 0

உலக அரசியல் அரங்கில், நாமறிந்த காலத்தில் கேள்விப்பட்டிராத  அரசியல் திருப்பமொன்று, இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது.   

ஒரு திரைப்படத்தின் ‘கிளைமக்ஸ்’ காட்சி போல, அன்றேல் திருப்புமுனை போல, இந்த மாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நகர்வுகள் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதும் அவை, முஸ்லிம்கள் மீது, எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வரப்போகின்றன என்பதும்தான் தெரியவில்லை.   

நல்லாட்சி அரசாங்கம், சாத்தியமான  எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை, முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரானது என்பதையும் நாம் மறந்து விடவில்லை.   

ஆனால், நாட்டு மக்களின், குறிப்பாக, சிறுபான்மையினங்களின் மக்களின் பார்வையில், அரசாங்கம் எவ்விதம் செயற்பட்டது என்பதையும் மக்களின் எதிர்பார்ப்புகள் எங்ஙனம் தவிடுபொடியாக்கப்பட்டன என்பதையும் கூட, வரலாறு குறித்து வைத்திருக்கின்றது.   

இவ்வாறான ஒரு சூழலில், மூன்று பெருந்தேசியக் கட்சிகளும் தனியே ஆட்சியொன்றை நிறுவத் திராணி இல்லாத அரசியல் இக்கட்டொன்றுக்குள் சிக்கியிருந்த போதிலும், கடுமையான முக்கோண அரசியல் அதிகாரப் போட்டியை, தமக்கிடையே வளர்த்துக் கொண்டிருந்தன.    

என்னதான் தேசிய அரசாங்கம் என்று பேசிக் கொண்டாலும், அடுத்த முறை தனியே, தமது கட்சி ஆட்சியை நிறுவும் விதத்தில், தமது அணியைப் பலப்படுத்த வேண்டும் என்ற போட்டி, மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருந்தது.   

யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது, மீண்டுமொரு முறை அதிகாரத்தைப் பெற்று, ஒரு சுற்றுச் சுற்றிவர வேண்டுமென்ற தீராவேட்கை, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இருந்தது. வெளிநாட்டுச் சக்திகளும் உள்நாட்டுச் சதித் திட்ட வகுப்பாளர்களும் இதற்குள் புகுந்து, அரசியல் செய்து கொண்டிருந்தனர். இதுதான் இன்றைய நிலைக்கு, அடிப்படைக் காரணம் எனக் கூறலாம்.   

கடந்த வாரம், எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, முன்னாள் ஜனாதிபதியும் ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரும் பொதுஜன பெரமுனவின் பிரதானியுமான மஹிந்த ராஜபக்‌ஷவை, புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நியமித்தார்.   

அத்துடன், தன்னால் முன்னர் நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அப்பதவியில் இருந்து நீக்கி, இவ்விரண்டுக்குமான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டார்.   

இலங்கை அரசியலை மட்டுமல்லாமல், உலக அரசியல் அரங்கையே நீண்டநேரம் அதிரவைத்த ஒரு செயற்பாடாக, மைத்திரிபால சிறிசேனவின் இந்த அரசியல் நடவடிக்கை அமைந்திருக்கின்றது. முத்தரப்பு அரசியல் போட்டி, கூட்டு அரசாங்கத்துக்குள் காணப்பட்ட முரண்பாடுகள் என்பவற்றுக்குப் புறம்பாக, இவ்வாறான அதிர்ச்சி வைத்தியமொன்றை, ஜனாதிபதி கொடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.   

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் கொல்வதற்குச் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நாமல் குமார என்ற பொலிஸுக்குத் தகவல் வழங்கும் நபர் குறிப்பிட்டமை, நாலக சில்வா கைது செய்யப்பட்டமையும் அவர் வழங்கிய தகவல்களும், அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்குச் சதித்திட்டங்களுடன் தொடர்பிருப்பதாகக் கசிந்த தகவல்கள், தெற்காசியப் பிராந்தியத்தின் புலனாய்வுக் குழு ஒன்றுக்கும் கொலைத் திட்டங்களுக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் எனச் சாடைமாடையாக அரசியலரங்கில் பேச்சடிபட்டமை, இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்க அரசியல், நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலைக்கான பின்புலங்கள் என, எண்ணிலடங்காத நீண்டகால, உடனடிக் காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றன. 

நமக்குத் தெரிந்த, ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரண காரியங்களும் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இட்டுச் சென்றிருப்பதாகச் சொல்ல முடியும்.   

“அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ், பிரதமர் ஒருவரை நீக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு இல்லை” என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர், “இல்லையில்லை விசேட சந்தர்ப்பங்களில் அவ்வாறான ஒரு நகர்வை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை, ஜனாதிபதிக்கு அரசமைப்பு வழங்கியிருக்கின்றது” என்று சொல்லப்பட்டது.   

இந்த வாதப் பிரதிவாதங்கள் எல்லாம் ஒருபுறத்தில் போய்க்கொண்டிருக்க, தமது தரப்பை நிலைநிறுத்துவதற்கான எல்லா நகர்வுகளையும், ஜனாதிபதியும் புதிய ‘பிரதமரும்’ சேர்ந்து மேற்கொண்டுள்ளனர்.   

பெரும்பான்மைப் பலத்தை உறுதி செய்வதற்கான காலஅவகாசத்தை எடுத்துக் கொள்ளும் உள்ளெண்ணத்தோடு, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் சிலரையும் நியமித்து, மறுதரப்பில் இருப்போருக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார்.   
எது எவ்வாறிருப்பினும், யார் என்ன பதவிக்கு வந்தாலும் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமையும், அதனூடாக நாட்டில் ஸ்தம்பித நிலை ஒன்றை ஏற்படுத்தியிருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற அபிப்பிராயம், பரவலாக முன்வைக்கப்படுகின்றது.   

சர்வதேச நாடுகள், நாடாளுமன்றத்தைக் கூட்டி, பிரச்சினையைத் தீர்க்குமாறு கடுமையாக வலியுறுத்தி இருக்கின்றன. மஹிந்தவோ, ரணிலோ யார் பிரதமரானாலும் பிரச்சினையில்லை; ஆனால், நாடாளுமன்ற நடைமுறைகளின் ஊடாகப் பெரும்பான்மைபலம் நிரூபிக்கப்பட்டு, இந்தச் சச்சரவுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற மனோநிலையில் மக்கள் இருக்க, அதே எண்ணத்தோடு, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டு வருகின்றார்.   

அந்த அடிப்படையில், ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்டிருந்த தினமான நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னரே, ஐந்தாம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    

இலங்கையில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற, அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்குள், பல்வேறு விடயங்கள் உள்ளன. பிரதான கட்சிகளின் நலன், சர்வதேச நாடுகளின் அபிலாஷைகள், வெளிச் சக்திகளின் எதிர்பார்ப்புகள், தேசிய அரசியல் நிலையும் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களின் மனநிலையும் என, அவ்விடயங்கள் நீண்டு செல்கின்றன.   

எனவே, முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், இந்த அதிரடி மாற்றங்களின் பின்னணி தொடர்பான, மேற்சொன்ன விடயங்களை மாத்திரம் சிந்திக்காமல், அதற்கப்பாற் சென்று, தமது சமூகத்தின் நிலையும் நிலைப்பாடும் என்ன, என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.   

ஏனெனில், முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மையாக வாழ்கின்ற இந்நாட்டில், எந்தப் பெரும்பான்மையினக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், திருப்திப்படும் விதத்தில் நமது பிரச்சினைகள் தீர்க்கப்படப் போவது இல்லை; நம்முடைய அபிலாஷைகள் நிறைவேறப் போவதும் இல்லை.   

அப்படி நிகழுமென்றால், இத்தனை வருடங்களாக நீடிக்கும், முஸ்லிம் சமூகத்தின் தலையாய பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்.  

இப்போது, “எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கின்றது” என்று, பரஸ்பரம் இரு தரப்புகளும் பிரசாரம் செய்தாலும், அரசியல்வாதிகள் கடைசி நொடியிலும் குத்துக்கரணம் அடிக்கலாம் என்றபடியால் நாடாளுமன்றம் கூடி, உறுப்பினர்கள் எழுத்துமூல ஆதரவை முன்வைக்கும் தருணம் வரைக்கும், இந்தப் பிரசாரங்கள் எதையும் நம்ப முடியாது. எனவேதான், முஸ்லிம் கட்சிகள், எம்.பிக்களின் ஆதரவை இரு தரப்புகளும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன.   

இது, தேசிய அளவிலான அரசியல் நெருக்கடி. அரசமைப்பு ஊடான ஆட்சிமாற்றச் சதி என்று கருதப்படுகின்ற போதிலும் கூட, முஸ்லிம்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பையும் தந்திருக்கின்றது என்பதை, நினைவில் கொள்ள வேண்டும்.   

எனவே, முஸ்லிம் கட்சிகளும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் சொந்த நலனை அன்றி, சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டே, யாரை ஆதரிப்பது என்ற முடிவை எடுக்க வேண்டும்.   

மைத்திரி - ரணில் அரசாங்கம், முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதற்காக, மஹிந்த ஆட்சி செய்த தவறுகள் எல்லாம், சரியாக மாறிவிடாது. மறுபுறத்தில், மஹிந்த செய்தது தவறு என விமர்சிக்கும் அருகதையை, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தக்கவைக்கவும் இல்லை; முஸ்லிம்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்ததாகப் பெருமையடிக்கவும் இடமில்லை.  

 எனவே, இந்த நாட்டில் ‘புரட்சிகர’ ஆட்சிமாற்றத்துக்கு வித்திட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நன்றிக்கடன் செலுத்துவதா, அரசாங்கத்துக்கு வெளியில் இருந்தால் ஆபத்தாகி விடுமோ என்ற பயத்தில், மஹிந்த - மைத்திரி கூட்டணியை ஆதரிப்பதா என்றோ, முஸ்லிம் அரசியல் தலைமைகள், தற்போது சிந்தித்துக் கொண்டிருக்கலாம்.   

இவ்விடத்தில், இன்னுமொரு விடயத்தைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இன்றைய சூழலில், முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு ஒருபுறமிருக்கையில், நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் நிலையும் நிலைப்பாடும் என்ன என்ற கேள்வி எழுகின்றது.   

இந்நாட்டு முஸ்லிம்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், மஹிந்தவை ஆதரிக்க வேண்டும், அல்லது ரணிலைப் பாதுகாக்க வேண்டும் என்று போட்டிபோட்டுக் கொண்டு கருத்து வெளியிடுவது, சமூக நலன் அடிப்படையிலானதா என்ற வினா எழுகின்றது?   

உண்மையில், பெரும்பாலான அரசியல் தலைவர்கள், தங்கள் சொந்த நலன்களை முன்னிறுத்தியே, கருத்து வெளியிடுகின்றனர். வேறு, சில முஸ்லிம்கள், நமது அரசியல் தலைவர்கள் போல, ரணில், மைத்திரி, மஹிந்தவின் வெளிப்புற அரசியல் கவர்ச்சிகளுக்காகவே, ‘ஆதரவு’ தெரிவிப்பதாகத் தெரிகின்றது. இது ஆரோக்கியமானதல்ல.   

அதுபோன்று, ஒருவேளை முஸ்லிம் கட்சிகளும் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு குறிப்பிட்ட தரப்பை ஆதரிக்க முடிவு செய்து, அந்தத் தரப்பால் ஆட்சியமைக்க முடியாமல் போய்விட்டால், முஸ்லிம் அரசியல்வாதிகளின் கொள்கைக்காக, அமைச்சுப் பதவி போன்ற அதிகாரமில்லாத நிலையில், அவர்கள் கூறுகின்ற காரணங்களின் நியாயங்களை உணர்ந்து கொண்டு, அவர்களுக்குப் பின்னால் நின்று, எதிர்க்கட்சி அரசியல் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.   

தமது தலைவன் அமைச்சராக, பலமான எம்.பியாக இருக்க வேண்டுமென்றால், கொள்கை, பற்றுறுதி பற்றி, அரசியல்வாதிகளுக்குப் புத்தி சொல்லத் தேவையில்லை. முதலில் மக்கள், தங்கள் மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.   

முஸ்லிம்கள் பேரம் பேசுவதை மேற்கொண்டு, தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்குப் பல சந்தர்ப்பங்கள் இதற்கு முன்னரும் கிடைத்தன. ஆட்சிமாற்றங்கள், நம்பிக்கையில்லாப் பிரேரணைகள், வரவு - செலவுத்திட்ட வாக்கெடுப்புகள், சட்டமூல நிறைவேற்றங்கள், அரசியல் நெருக்கடிகள் எனப் பல வாய்ப்புகள் கிடைத்தன. இதில், 99 சதவீதமான வாய்ப்புகள் சமூகத்துக்காக அல்லாமல், அரசியல்வாதிகளின் சொந்த நலனுக்காகவே பயன்பட்டன என்பது கற்பனையல்ல. அப்படியான ஒரு வாய்ப்பே, இப்போது கிடைத்திருக்கின்றது.   

எனவே, இதை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். யாருக்கு ஆதரவளிப்பது, யாருடன் சேர்ந்து அரசாங்கத்தை நிறுவுவது என்ற விடயம் ஒருபுறமிருக்க, முஸ்லிம் கட்சித் தலைவர்களும் எம்.பிகளும் யாருக்கு ஆதரவளித்தாலும், அதை முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தியதாக மேற்கொள்வதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்.   

முஸ்லிம்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு இரு தரப்புகளுக்கும் முன்வைக்கப்பட்டு, அதைக் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றுவதாக, எழுத்து மூலம் உடன்படும் தரப்புக்கு, ஆதரவளிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம்.   

அந்த உடன்படிக்கை, ஒவ்வொரு முஸ்லிம் பொதுமகனுக்கும் தெரியப்படுத்தப்படுவதுடன், குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த அரசாங்கம் நிறைவேற்றத் தவறுமாயின், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், அரசாங்கத்தை உடைத்துக் கொண்டு முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி, அனைத்து முஸ்லிம் எம்.பிக்களும் வெளியில் வரும் தைரியத்தைப் பெற வேண்டும். அப்படிச் செய்தால், இன்னுமொரு முறை ஆட்சியாளர்கள், முஸ்லிம்களுக்கு வாக்குறுதியளித்து ஏமாற்ற மாட்டார்கள்.   

அவ்வாறில்லாமல், ‘எங்கள் கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சுப் பதவிகளைத் தாருங்கள், பிரதியமைச்சு தாருங்கள்’, ‘தேசியப்பட்டியல் எம்.பி ஒன்று தரவேண்டும்’ என்று, பதவிகளுக்காகவோ, பணம் போன்ற வெகுமானங்களுக்காகவோ, வேறு ஒரு தரப்புக்கு ஆதரவளிப்பதோ, பேரம் பேசலுக்கான வாய்ப்புக் கிடைத்தும் அதைப் பயன்படுத்தாமல், விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்காக ஆதரவளிப்பதோ புத்திசாலித்தனமானதல்ல. அதைவிட நடுநிலை வகிப்பதே பரவாயில்லை.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்-அரசியல்வாதிகள்-மக்களின்-நிலைப்பாடு-என்ன/91-224633

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இப்போது, “எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கின்றது” என்று, பரஸ்பரம் இரு தரப்புகளும் பிரசாரம் செய்தாலும், அரசியல்வாதிகள் கடைசி நொடியிலும் குத்துக்கரணம் அடிக்கலாம் என்றபடியால் நாடாளுமன்றம் கூடி, உறுப்பினர்கள் எழுத்துமூல ஆதரவை முன்வைக்கும் தருணம் வரைக்கும், இந்தப் பிரசாரங்கள் எதையும் நம்ப முடியாது. எனவேதான், முஸ்லிம் கட்சிகள், எம்.பிக்களின் ஆதரவை இரு தரப்புகளும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன.    

கட்டுரை தெளிவாக இருந்தாலும் ஐ லைட்டே மேற்கூறியவைதான்..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.